சினிமா

உதயநிதியுடன் முதன்முதலாக இணையும் பார்த்திபன்

Published On 2016-09-08 06:37 GMT   |   Update On 2016-09-08 06:37 GMT
உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் முதன்முதலாக அவருடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் பார்த்திபன். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘மனிதன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் எழில் இயக்கும் புதிய படம், கௌரவ் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம், சுசீந்திரன் இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளவர், தற்போது தளபதி பிரபு என்ற புதுமுக இயக்குனரின் படத்திலும் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் உதயநிதியுடன் பார்த்திபனும் இணைந்து நடிக்கவுள்ளார். பார்த்திபன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா? என்பது குறித்த விவரங்கள் பிறகு தெரிய வரும். மேலும், நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சூரி, மயில்சாமி, நமோ நாராயணன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 19-ந் தேதி முதல் தொடங்கவுள்ளது. டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாகவும், குடும்ப பாங்கான படமாகவும் உருவாகவிருக்கிறது.

Similar News