25.3.2024 முதல் 31.3.2024 வரை
மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும் வாரம். ராசி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் 4,7-ம் அதிபதி குருவுடன் சேர்க்கை. ஆனால் 2,9-ம் அதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெறுவதால் சாதகமும், பாதகமும் சேர்ந்தே நடக்கும்..பேராசை, ஈகோ, பொறாமை போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். அரசு காரியங்களில் வெற்றி ஏற்படும். தந்தை, மகன் உறவில் ஏற்பட்ட பேதம் சீராகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும்.
செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும். உயர் கல்வி முயற்சி வெற்றிதரும். யாருடைய உதவியையும் எதிர்பார்க்கா மல் உங்கள் சொந்த முயற்சியில் வீடு, வாசல், வாகனம் அமையும். கடன் கொடுக்கக் கூடாது. சிலரின் பிள்ளைகள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வெளியூர் செல்லலாம். சிலர் காதல் வயப்படுவார்கள்.புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோச னைகளை கேட்கவும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்தில் இருந்து விடுபட தினமும் ஸ்ரீருத்ரம் கேட்பது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406