என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை
11.5.2025 முதல் 17.5.2025 வரை
தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசியை விட்டு சர்ப்ப கிரகம் அகலப் போகிறது என்பதே கன்னி ராசிக்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. புதிய வேலை வாய்ப்புகளால் பிரகாசமான எதிர்காலம் உருவாகும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்களுக்கு தொழில் நல்ல லாபத்தை பெற்றுத் தரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள்.
பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். ராசியை சனி பார்ப்பதால் மனஅழுத்தம். மனதில் கலக்கம் தோன்றும்.
ஞாபக சக்தி குறையும். ஒரு சில நேரங்களில் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சமாளித்து விடுவீர்கள். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். சித்ரா பவுர்ணமி அன்று கிருஷ்ணர் வழிபாடு நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை
4.5.2025 முதல் 10.5.2025 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு குருப் பார்வை இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. ராசியை விட்டு கேது பகவான் விலகப் போகிறார். இது கண்டகச் சனியின் காலம். முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி ஆவதால் சில, பல மாற்றம் உண்டாகப் போகிறது. நிதி நிலையில் சாதகமான மாற்றம் உண்டு. பொன், பொருள் பற்று அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட பொருள் வரவு உண்டு.
சிலரின் விருப்ப விவாகம் சித்திக்கும். விவாகரத்து வழக்குகள் சாதகமாகும். குடும்ப உறுப்பினர்கள் வாக்குவாதத்தை தவிர்த்து மன அமைதியை தக்க வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு உண்டு. நீண்ட நாட்களுக்குப் பின் தாய் மாமாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். கண்டக சனியின் தாக்கம் தெரியும். எனவே நண்பர்களை, தொழில் கூட்டாளிகளை வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது சிறப்பு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிவ வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை
27.4.2025 முதல் 03.5.2025 வரை
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசியை விட்டு கேது பகவான் வெகு விரைவில் வெளியேறப்போகிறார். கேதுவின் தாக்கம் குறைவது உங்களுக்கு தெரியத் துவங்கும். விவசாயிகள், சமையல் கலைஞர்கள், அழகு, ஆடம்பர பொருள் விற்பனையாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். அனைத்து துறையினருக்கும் பண வரவுகள் அதிகரிக்கும்.
7ம் இடத்தை ராகு கடப்பதால் பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். கூட்டுக் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் கட்டுப்படும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள், மாமியாரால் ஏற்பட்ட வருத்தங்கள் சீராகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாகும் வழக்குகள் சாதகமாகும்.
வேலை இழந்தவர்கள் இந்த வார இன்டர்வியூவில் சாதகமான பதில் உண்டு. வீடு, வயல், தோட்டம், மனை வாங்கு வதில் நிலவிய சட்ட சிக்கல்கள் தீரும். 29.4.2025 அன்று அதிகாலை 2.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். தினமும் மகா விஷ்ணு அஷ்டோத்திரம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
திருப்புமுனை உண்டாகும் வாரம். சற்றேறக்குறைய ஒரு மாத காலத்தில் ராசியை விட்டு கேது பகவான் பெயர்ச்சியாகிறார். அதற்கான சில நல்ல பலன்கள் இப்பொழுதே தெரியத் துவங்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களும், இம்சைகளும், துயரங்களும் விலகும். சுதந்திர உணர்வு உண்டாகும். சிலரின் விவாகரத்து வழக்கிற்கும் தீர்ப்பு கிடைக்கும்.
பணியாளர்களுக்கு சக ஊழியர்களால் பணியில் நிலவிய சங்கடங்கள் மாறும். உங்களின் வாழ்க்கைத் துணையை இந்த வாரம் சந்திப்பீர்கள். சிலரின் கடனை அடைக்க வாழ்க்கைத் துணை அல்லது நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.பாகப் பிரிவினையில் சகோதர, சகோதரிக்காக விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சிலர் அரசு வேலைக்கு தவறான நபரிடம் பணம் கொடுத்து ஏமாறலாம். நெடுநாளைய தரித்திரம் விலகும். சுப விரயங்கள் மிகுதியாகும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். முக்கிய முடிவுகளில் சம்பந்தப்பட்டவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அங்காளம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை
13.4.2025 முதல் 19.4.2025 வரை
தடை, தாமதங்களை தகரும் வாரம். ராசி அதிபதி புதன் தன் சொந்த வீட்டை தானே பார்க்கிறார். உள்ளம் மகிழும் சுப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளிடையே நிலவிய மனப் பேராட்டம் அகலும். பாகப் பிரிவினையில் நல்ல முடிவு எடுக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.
சொத்துக்களுக்கு நல்ல வாடகை கிடைக்கும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள், PF பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். கடன் தொல்லை குறையும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பா மூலம் நல்ல ஆதாயம் உண்டு. குலதெய்வம் தெரியாதவர்கள் அதை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். பூர்வீகம் தெரியாதவர்களுக்கு பூர்வீகம் தெரியும். அயல்நாடு செல்ல எதிர்பார்த்த விசா கிடைக்கும். கணவருடன் இருந்த ஈகோ மாறும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம். கால பைரவரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை
06.4.2025 முதல் 12.4.2025 வரை
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி ஆவதால் வழக்குகளால் பாகப் பிரிவினையால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் இந்த வாரம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் குறைவது போல் இருந்தாலும் பண வரவு திருப்தியாக இருக்கும். சிலர் பழைய தொழில் கூட்டாளிகளை விலக்கி விட்டு புதிய தொழில் கூட்டாளிகளை சேர்க்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்று சுய தொழில் தொடங்கலாமா என்று சிந்திக்கக் கூடிய நேரம்.
பிள்ளைகள் தொழில், கல்விக்காக இடம் பெயரலாம். தடைபட்ட உயர் கல்வி வாய்ப்பு கூடி வரும்.மேலதிகாரி அதிக பணிச்சுமையை வழங்கலாம். திருமண முயற்சி சாதகமாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். சக பணியாளர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சங்கர நாராயணர் வழிபாடு மகத்தான மாற்றத்தை தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை
30.3.2025 முதல் 5.4.2025 வரை
குதூகலமான வாரம். 5,6-ம் அதிபதி சனிபகவான் 4,7-ம் அதிபதி குரு பகவானைப் பார்க்கிறார். இன்னும் இரண்டு மாதத்திற்கு ராசிக்கு குருப் பார்வை உள்ளது. பொருளாதார முன்னேற்றமும் தாராளமான வரவு, செலவு காணப்படும். அடுத்தவர்களின் பணம் உங்கள் கையில் புரளும். தாய், தந்தை, வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத உதவிகள் மற்றும் பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனைவி வழி சொத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். முழுப் பங்கும் கிடைத்துவிடும். அவ்வப்போது மருத்துவச் செலவுகள் வரலாம். எனவே உடல் நலனில் கவனமும் அக்கறையும் தேவை.
பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு இரவல் கொடுத்த நகைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள்.30.3.2025 அன்று மாலை 4.35 மணி முதல் 1.4.2025 அன்று மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் அமைதியின்மையும் ஒருவிதமான போராட்டமும் உருவாகும். தினமும் நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
30.3.2025 முதல் 05.4.2025 வரை
குதூகலமான வாரம். 5,6-ம் அதிபதி சனிபகவான் 4,7-ம் அதிபதி குரு பகவானைப் பார்க்கிறார். இன்னும் இரண்டு மாதத்திற்கு ராசிக்கு குருப் பார்வை உள்ளது. பொருளாதார முன்னேற்றமும் தாராளமான வரவு, செலவு காணப்படும். அடுத்தவர்களின் பணம் உங்கள் கையில் புரளும். தாய், தந்தை, வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத உதவிகள் மற்றும் பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மனைவி வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். முழுப் பங்கும் கிடைத்துவிடும். அவ்வப்போது மருத்துவச் செலவுகள் வரலாம். எனவே உடல் நலனில் கவனமும் அக்கறையும் தேவை. பெண்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு இரவல் கொடுத்த நகைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள்.
30.3.2025 அன்று மாலை 4.35 மணி முதல் 1.4.2025 அன்று மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் அமைதியின்மையும் ஒருவிதமான போராட்டமும் உருவாகும். தினமும் நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். சில வாரங்களில் குருப் பெயர்ச்சியானவுடன் புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம் வந்துவிடும். அதற்கான ஆயத்த முயற்சியில் இப்பொழுதே ஈடுபடுவீர்கள். கண்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை. பயணங்களால் பயன் கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். படித்து முடித்த மகனின் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்து விடும். எதிர்பார்த்த அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். புதிய சொத்துகள் சேரும். திருமணம் நிச்சயமாகும்.
புத்திர பிராப்தம் கிடைக்கும். தந்தை, மகன் உறவில் பேதம் உண்டாகலாம். சிலர் கண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லலாம். பெரிய பிரச்சனையில் மாட்டியவர்கள் அதிர்ஷ்டத்தால் தப்பிப்பார்கள். சில பிள்ளைகள் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெற்றோரை பிரிந்து வெளியூர் செல்லலாம். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். புதிய முயற்சியில் வெற்றியும், லாபத்தையும் பெற அமாவாசையன்று சிவ பெருமானுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்ய வேண்டும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய வாரம். சனி சந்திரனைத் தவிர்த்து ஏனைய அனைத்து கிரகங்களும் ராசியுடன் சம்பந்தம் பெறுகிறது. ராசி மற்றும் லக்னத்தை அதிக கிரகம் பார்க்காமல் இருப்பது நல்லது. உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவீர்கள். மனரீதியான குழப்பங்கள் வந்து விலகும். அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.
வார ராசிபலன் 16.3.2025 முதல்வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை 22.3.2025 வரைகுடும்ப உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தொழில் பங்குதாரர்களால் சிலருக்கு வம்பு, வழக்கு உருவாகலாம். உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் தடைபடும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படலாம். அன்னையின் அன்பு அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆறுதலாய் இருக்கும். மேலும் இது கண்டகச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக தசை புத்திக்கு ஏற்ப செயல்படுவது உத்தமம். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
பொறுமையை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசிக்கு குரு, செவ்வாய், புதன், சுக்ரன், ராகு பார்வை. வார இறுதி நாளில் சூரியனும் மீனத்திற்கு சென்று ராசியைப் பார்ப்பார்.ராசியை அதிக கிரகம் பார்ப்பதால் உற்றார், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் மூலம் சிறு சிறு மனத்தாங்கல் உருவாகும். குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
அரசு பொதுத் தேர்வு நடந்து கொண்டு இருப்பதால் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. இளம் பருவத்தினரும் பெண்களும் யாரையும் நம்பி மனதில் உள்ள குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். திரைக் கலைஞர்கள் வளம் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தம்பதிகளிடம் ஒற்றுமை மேலோங்கும். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் அமையும். மாசி மகத்தன்று சிவ வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
வெற்றிகரமான வாரம். ராசி அதிபதி புதன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து குடும்ப வாழ்வாதாரம் உயரும். பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். கண்டகச் சனி துவங்குவதால் பூர்வீக குலத்தொழிலில் புதிய பங்குதாரர் இணையலாம்.
பழைய பங்குதாரர் விலகலாம். வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் விலகி சாதகமான முடிவுகள் கிடைக்கும். சொத்துக்காக பிரிந்து சென்ற உறவுகள் தேடி வருவார்கள்.
3.3.2025 அன்று மாலை 6.39 முதல் 5.3.2025 காலை 8.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதால் பேச்சில் கவனம் தேவை. பிறரின் பிரச்சனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். விநாயகர் வழிபாட்டால் வினைகள் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406