மீனம் - இன்றைய ராசி பலன்கள்
null

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

Published On 2022-05-21 08:44 GMT   |   Update On 2023-04-10 07:49 GMT

வெளிநாட்டுமோகம் மிகுந்த மீன ராசியினரே ராசியில் குருபகவான் ஆட்சி பலம் பெறுகிறார்.

சனிபகவான் 11,12ம் இடத்திலும், ராகு பகவான் 2ம் இடத்திலும், கேது பகவான் 8ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். இதுவரை ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ராசிக்குள் அடியெடுத்து வைக்கிறார். ராசி அதிபதி குரு ராசியில் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு அவரே கேந்திராதிபதி என்பதால் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுமோ? என்ற பயமும் மீன ராசியினருக்கு உண்டாகும். குரு உங்களுடைய ராசி அதிபதி என்பதால் எந்த கெடுதலும் செய்ய மாட்டார் என்பதை உறுதியாக நம்பலாம். அத்துடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்சனியின் பார்வையும் 17.1.2023 வரை ராசிக்கு இருப்பதால் சுப பலன் மிகுதியாகும். ராசி அதிபதி குரு 12ல் மறைந்ததால்அவதிபட்ட மீன ராசியினருக்கு இந்த குருப் பெயர்ச்சி புத்துணர்வு தரும். இழந்த பாக்கிய பலன்கள்களைகிடைக்கப் பெறுவீர்கள். எனவே ராசி, 5 எனும் பூர்வ புண்ணியம் 9 எனும் பாக்கிய ஸ்தானம் குருவின் கருணையால் உங்களை அப்பழுக்கற்ற புது மனிதனாக வலம் வரச் செய்யப் போகிறார்கள்.

உங்களை ஏளனம் பேசியவர்கள் எல்லாம் புகழ்வார்கள். தன் நம்பிக்கையும் தைரியமும் மிகுதியாகும். இந்த பிறவியில்உங்களின் பாக்கிய ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும்ஒருங்கேஇணைந்து பலன் தரும் காலம். இந்த குருப் பெயர்ச்சி மீன ராசியினரைமகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.உங்களின் தோற்றம்பொழிவு பெறும். மனதில் அமைதி குடிகொள்ளும். அழகான ஆடம்பரமாகஉங்களை அலங்கரிக்க தனி கவனம் செலுத்துவீர்கள். தன ஸ்தானமாகிய2ம் இடத்தில் ராகு நிற்பதால்பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியும் உருவாகும் . பணவரவு அதிகரிக்கும்.

உங்கள் வாழ்நாளில் இதுவரை பார்க்காத மிகப் பெரிய தன வரவு கிடைக்கும். குரு, ராகு கொடுக்கும் பணத்தை எப்படி சேர்த்து வைத்து பிற்கால தேவைக்கு பயன்படுத்துவது என்ற ஞானமும் கிடைக்கும். ஜனவரியில் ஏழரைச் சனி ஆரம்பமாகப் போவதால் சிலருக்கு வலது கண், பல், முகம், காது தொடர்பான சிகிச்சை செய்ய நேரும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக அக்கறை கொள்ள வேண்டும். கடுமையான வார்த்தைகள் பிரயோகம் பண்ணுவதை தவிர்த்தல் நலம். அண்டை அயலாரிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வைபஞ்சம ஸ்தானம் என்ற புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் கட்டுப்பாடு இல்லாதுஅலைந்த மனம் கட்டுப்படும். எவை நல்லவை, எவை தீயவை என மனதால் பகுக்க முடியும். ஆன்மீக நாட்டம்மிகும். பொருளாதாரத்தில் மிகுதியான ஏற்றம்இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும். பங்குச் சந்தை முதலீடு பல மடங்கு லாபம் பெற்றுத்தரும். தொழில் நிலை சாதகமாக உள்ளது. புதிய தொழில் முயற்சி பலிதமாகும். வட்டித் தொழில் சீட்டுக் கம்பெனி, ஏலச் சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும்தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அபரிமிதமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலாளி, முதலாளி கருத்து வேறுபாடு குறையும். வழக்கறிஞர், நீதித்துறை, ஆடிட்டிங், நாட்டு மருந்துக் கடை, மருத்துவமனை சார்ந்த தொழில், ஆன்மீக, பக்தி மார்க்க தொழிலில்கள் சீராக நடக்கும்.

புத்திர பாக்கியத்திற்கு ஏங்கியவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்பை நாடி மன வேதனை அடைந்தவர்கள் இயற்கையாக பூர்வ புண்ணிய பலத்தால்ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். மகன், மகளுக்கு திருமணம் ஆகி வம்ச விருத்தியின்மையால் மனம் வருந்திய மீன ராசியினர். பேரன், பேத்தியை கொஞ்சி விளையாடும் காலம் வந்து விட்டது. குழந்தைகள் ஏற்பட்ட மனக் கவலைமறையும்.குழந்தைகளின் நலனில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். குழந்தைகளால் நற்பலன்கள் மிகும். இதுவரை வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு வீடு வாகன யோகம் உண்டாகும். ஏற்கனவே சொத்து இருப்பவர்களுக்கும் புதிய சொத்துக்கள் சேரும்.

7ம் பார்வை பலன்கள்:ராசிக்கு 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள்.

9ம் பார்வை பலன்கள்:9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் நாத்திகராக இருந்தவர்களுக்கு கூட தெய்வ வழிபாட்டில் ஆர்வம் மிகும். இது வரை கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட ப்ரபஞ்ச சக்தியை உணர்வார்கள். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீகநாட்டம் ஏற்படும். பலருக்கு மத நம்பிக்கை அதிகரிக்கும். ஒரு சிலர் வேற்று மதத்தில் நாட்டம் ஏற்பட்டு மதம்மாறுவார்கள். அந்நிய மதத்தவர் அல்லது அந்திய மொழி பேசுபவரால் ஆதாயம் உண்டு.குல தெய்வ, பித்ருக்கள் வழிபாட்டில்ஆர்வம் மிகும்.பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தைசரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம்.புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வர வாய்ப்பு கிடைக்கும்.கோவில் திருப்பணிகள் செய்து மகிழ்வீர்கள்.

சொந்தமாக கோவில் கட்ட விருப்பம் உள்ளவர்கள் கோவில் கட்ட உகந்த காலம். ஏற்கனவே கோவில் வைத்து இருப்பவர்கள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யமூலவரின் சக்தி கூடும்.

அரசியலில் முக்கிய பங்கு, பதவி வகிப்பீர்கள். நீங்கள் விரும்பிய பதவி உங்களைத் தேடி வரும். பட்டங்களும், பதக்கங்களும் வந்து குவியும். எதிர் கட்சியினர் உங்களுக்கு அடங்கி போவார்கள். அரசின் உதவியில்லாமல் பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு அரசின் நிதியுதவி கிடைக்க பாடுபடுவீர்கள்.துறவு மனப்பான்மை மிகும்.அரசு வழி ஆதாயம் மிகும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப தந்தையின் கட்டளைக்கு இணங்குவீர்கள். தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பணியாளர்கள் ஒய்வெடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்தபிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு.

குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன்பேச வேண்டும். நண்பர்களுடன் வீண் வாக்கு வாதம் ஏற்படலாம். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு வரும அல்லது தொழில் நிமித்தமான பிரிவைத் தரும். காதல் விவகாரங்கள் ஒத்திப்போடுவது நல்லது.

பெண்கள்:குடும்ப உறுப்பினர்களிடையேஒற்றுமை பெருகி அன்பும், பாசமும் பெருகக் கூடிய அற்புதமான காலம். உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் தாய் வழி ஆதாயம் உண்டு.உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் நலனில் நீங்கள் அதிக கவனம்செலுத்தினாலும் இளைய சகோதரர் மட்டும் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார். 1,5,9ம்மிடங்கள் குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எந்த வழியிலாவது பணத்தை, ஆடம்பரத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

பரிகாரம்: பிரதோஷ காலங்களில் சிவனுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வழிபட பாக்கிய பலம் அதிகரிக்கும்.அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபடவும். பௌர்ணமியில் குல தெய்வத்தை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News