25.3.2024 முதல் 31.3.2024 வரை
புண்ணிய பலன்கள் மிகும் வாரம். தன ஸ்தானத்தில் 4,9-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெறு வதற்கு பெறு வதால் தாய், தந்தை மற்றும் முன்னோர்க ளின் அன்பும், ஆசீர்வாதமும் கிடைக்கும். வாக்கு சாதுர்யத் தால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். நடக்குமா என்று இருந்த காரியங்களை தன்னம்பிக்கை யோடு நடத்தி காட்டுவீர்கள். 4, 9-ம் அதிபதி சுக்ரன் ஏழாம் அதிபதி சூரியனுடன் தன ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் சிலர் நண்பர்கள் அல்லது வாழ்க்கைத் துணையுடன் கூட்டுச் சேர்ந்து தொழிலை விரிவுபடுத்துவார்கள். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத இடங்களில் இருந்து பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவையான பணம் கிடைக்கும்.
நிலம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் இப்போது நல்ல முன்னேற்றம் தரும். மாணவர்களுக்கு போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. தள்ளிப் போன திருமணம் காரியங்கள் கூடி வரும். ஆரோக்கியம் சீராகும். தந்தையின் வாரிசு வேலைக்கு விண்ணப்பித்த வர்களுக்கு சாதகமான பலன் வரும். 27.3.2024 அன்று காலை 2.56 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் சந்தேக உணர்வு களை குறைத்துக் கொள்ளவும். சில பணி களை திட்டமிட்டு மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். சந்திராஷ்டம நாளில் கற்பக விநாயகரை வழிபட இன்னல்கள் விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406