செய்திகள்

தென்னாப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு

Published On 2019-05-22 15:14 GMT   |   Update On 2019-05-22 15:14 GMT
தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தேர்வு செய்தனர்.
கேப் டவுன்:

தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டின் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.



இந்நிலையில், அந்நாட்டின் அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தேர்வு செய்தனர். அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவை தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மோகோயேங் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News