செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ஏஎன் 32 ரக போர் விமானத்தில் திடீர் விபத்து

Published On 2019-05-08 10:29 GMT   |   Update On 2019-05-08 10:29 GMT
மும்பையில் ஓடு தளத்தில் இருந்து ஏஎன் 32 ரக போர் விமானம் பெங்களூரு புறப்படும்போது திடீரென விபத்திற்குள்ளானது. #IAFAN32
மும்பை:

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களுருவில் உள்ள யெலஹங்கா விமான படைத்தளத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் தயாரானது.

மும்பை விமான நிலையத்தில் 27-வது ஓடு தளத்தில் இருந்து போர் விமானம் புறப்பட்டபோது திடீரென பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானது. இந்த விமான விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

போர் விமான விபத்து காரணமாக, மும்பை விமான நிலையத்தில் 50 விமான சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #IAFAN32 
Tags:    

Similar News