செய்திகள்

வளசரவாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2018-12-02 10:58 GMT   |   Update On 2018-12-02 10:58 GMT
வளசரவாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடியத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வளசரவாக்கம், ராஜாஜி அவின்யூவைச் சேர்ந்தவர் ரங்கராஜன். நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நங்க நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் வங்கி பாஸ்புக் கொண்ட பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் இன்று காலை விருகம்பாக்கம் போலீசார் ரெட்டி தெருவில் உள்ள சாலையில் கிடந்த ரங்கராஜனின் வங்கி பாஸ்புக்கை கைப்பற்றினர். கொள்ளையர்கள் ரங்கராஜன் வீட்டில் நகைகளை எடுத்து கொண்டு பாஸ் புக்கை சாலையில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News