ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா 23-ந்தேதி நடக்கிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதி முன்பு பெருமாள் கும்பத்திற்கும் பூஜைகள் நடக்கிறது.
காலை 8 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமானங்கள் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
காலை 8 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமானங்கள் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.