ஆன்மிகம்

தூய லூர்து அன்னைக்குப் புகழ்மாலை

Published On 2019-03-04 04:49 GMT   |   Update On 2019-03-04 04:49 GMT
லூர்து அன்னையுடைய வேண்டுதலினாலே நாங்கள் பாவ வழியை விட்டுப் புண்ணிய நெறியை பற்றிக்கொள்ளவும், இறைவனின் திரு உளப்படி நல்ல மரணத்தை அடையவும், எங்கள் ஆண்டவராகியஇயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்…
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்…
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்.
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.

முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: தூய ஆவியாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.
முத: மூவொரு கடவுளாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

(கீழுள்ள புகழுக்குப் பதிலுரையாக எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று சொல்லவும்)

முத: உலகின் மீட்பரை எங்களுக்கு அளித்த தூய அமலோற்பவ அன்னையே…
முத: இறை இரக்கத்தை அதிசயிக்கும் விதத்தில் பெற்ற தூய அமலோற்பவ அன்னையே…
முத: லூர்து மலைக் கெபியில் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: உலகத்தை வெறுத்தல் அவசியம் என்று காண்பிக்க ஏகாந்த இடத்தில் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: விண்ணகத்தின் மாட்சியைக் காட்டப் பூங்கதிர்களை அணிந்த திருமேனியுடன் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: ஞான சௌந்தரியத்துக்கு மிஞ்சின சௌந்தர்யம் இல்லையென்று காண்பிக்க, அழகின் அவதாரம் போல தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: ஆன்ம சுத்தத்திற்கு மேலான சுத்தம் இல்லையென்று காண்பிக்க, அந்த வெண்ணாடையை உடுத்தியவளாய்த் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: கற்பென்பது வானோர்க்கு அடுத்த புண்ணியம் என்று காண்பிக்க மேகமற்ற வானம் போன்ற நீலக்கச்சையைக் கட்டிக் கொண்டவளாய்த்  தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: கற்புக்குக் காவல் அடக்க ஒடுக்கம் என்று காண்பிக்க, நெடுமுக்காட்டைப் போர்த்திக் கொண்டவளாய்த் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: நாங்கள் நாடவேண்டிய கதி மோட்சம் என்று காண்பிக்க வானத்தை அண்ணார்ந்தவளாய்த் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: ஐம்பத்து மூன்று மணி செபத்தை அடிக்கடிச் சொல்லுதல் உத்தம பக்திக் கிருத்தியம் என்று காண்பிக்க ஜெபமாலையை திருக்கரத்தில் ஏந்தியவளாய்த் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: கல்லும் முள்ளும் நிறைந்த வனமாகிய இந்த உலகத்தில் தேவரீரை எங்களுக்குத் துணை என்று காண்பிக்க கற்பாறையில் படர்ந்த முள் ரோஜாச் செடியை காலாலே மிதித்தவளாகத் தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: தாழ்ச்சியும் தரித்திரமும் உள்ளவர்கள் பேரில் தேவரீர் மிகுந்த பட்சமாயிருக்கிறார் என்று காண்பிக்க ஒரு ஏழையான சிறு பெண்ணுக்கு தரிசனமான தூய அமலோற்பவ அன்னையே…
முத: தேவரீரை நேசித்து நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று காண்பிக்க , அந்த சிறு பெண் மூலமாக ஒரு நீரூற்றை பிறப்பித்தருளிய தூய அமலோற்பவ அன்னையே…
முத: தேவரீருடைய வல்லமையும் , கிருபையும் அளவிட்டுச் சொல்ல முடியாது என்று காண்பிக்க அந்த நீரூற்றைத் தாராளமாய்ச் சுரந்து வழிந்தோடவும் கணக்கற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியத்தை அளிக்கவும் செய்தருளிய தூய அமலோற்பவ அன்னையே…

முத: பாவிகளை நல்ல வழியில் திருப்புகின்ற தூய லூர்து அன்னையே…
முத: நீதிமான்களை திடப்படுத்துகின்ற தூய லூர்து அன்னையே…
முத: இறந்தவருக்கு உயிரைக் கொடுக்கின்ற தூய லூர்து அன்னையே…
முத: குருடர்களுக்குப் பார்வை அளிக்கின்ற தூய லூர்து அன்னையே…
முத: செவிடருக்குக் கேட்கும் திறனைத் தருகின்ற தூய லூர்து அன்னையே…
முத: முடவர்களை நடக்கச் செய்கின்ற தூய லூர்து அன்னையே…
முத: நோயாளிகளைக் குணப்படுத்துகின்ற தூய லூர்து அன்னையே…
முத: துன்பப்படுபவர்களைத் தேற்றுகின்ற தூய லூர்து அன்னையே…
முத: எல்லா அவசரங்களிலும் உதவியாயிருக்கின்ற தூய லூர்து அன்னையே…
முத: மேலும் மேலும் மன்றாடப்படுகின்ற தூய லூர்து அன்னையே…
முத: லூர்து என்னும் திருத்தலத்திற்கு கணக்கற்ற மக்களை வரச்செய்கின்ற தூய லூர்து அன்னையே…
முத: எங்கள் தாயாகிய திரு அவைக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
முத: எங்கள் திருத்தந்தைக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
முத: பல தண்டனைகளுக்குப் பாத்திரமாயிருக்கிற எங்களுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
முத: எங்கள் பிள்ளைகள், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
முத: எங்கள் எதிரிகளுக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
முத: பாவிகள், அவிசுவாசிகள், மனநோயாளிகள் அனைவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…
முத: உத்தரிக்கும் தலத்து ஆன்மாக்கள், இறந்தோர் அனைவருக்காகவும் உம்மை மன்றாடுகின்றோம் தூய லூர்து அன்னையே…

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
மக்: எங்கள் பாவங்களைப் மன்னித்தருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
மக்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே…
மக்: எங்கள் மேல் இரக்கமாயிரும்.

முத: செபிப்போமாக! எல்லாம் வல்ல இறைவா! முழு மனதோடு தொண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் கன்னியாயிருக்கிற அமலோற்பவ லூர்து அன்னையுடைய வேண்டுதலினாலே நாங்கள் பாவ வழியை விட்டுப் புண்ணிய நெறியை பற்றிக்கொள்ளவும், இறைவனின் திரு உளப்படி நல்ல மரணத்தை அடையவும், எங்கள் ஆண்டவராகியஇயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
மக்: ஆமென்
Tags:    

Similar News