சினிமா

தர்பார் புகைப்படங்கள் லீக் - படக்குழுவுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்

Published On 2019-05-01 10:43 GMT   |   Update On 2019-05-01 10:43 GMT
தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் கசிந்து வரும் நிலையில், அதற்கு படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடு விதித்ததால் படக்குழுவுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். #Darbar #Rajinikanth
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

‘தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடுமையான பாதுகாப்புகளையும் மீறி இது மாதிரி படங்கள் வெளிவரக் காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம்தான் என படப்பிடிப்பு குழு கண்டுபிடித்துள்ளது. மும்பையிலுள்ள பிரபலமான கல்லூரி வளாகத்தில் தர்பார் படப்பிடிப்பு நடக்கிறது. அந்த கல்லூரி மாணவர்கள்தான் ஆர்வமிகுதியில் இப்படி செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.



இதையடுத்து கல்லூரி மாணவர்களை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பை கல்லூரிக்கு வரும் மாணவர்கள் குழுமி இருந்து வேடிக்கை பார்ப்பது வழக்கம். தற்போது அப்படி ஒன்று கூடுபவர்களை அவர்களது மொபைலில் படம் எடுக்க விடாமல் தர்பார் செக்யூரிட்டிகள் பார்த்துக் கொண்டனர்.

இதனால் படக்குழுவினருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் மாடிக்கு சென்ற மாணவர்கள் படப்பிடிப்பை நோக்கி கற்கள் வீசும் அளவுக்கு சென்று இருக்கிறது. இதுகுறித்து தர்பார் படக்குழு கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சமரசம் ஏற்படாவிட்டால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை மாற்றிவிடலாமா என்ற ஆலோசனையில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளார். #Darbar #Rajinikanth #Nayanthara

Tags:    

Similar News