என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bihar"
- முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
- வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
பீகாரில் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "எஸ்.சி, எஸ்.டி ஓபிசி மக்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை முஸ்லிம்களுக்குத் வழங்கும் இந்தியா கூட்டணியில் திட்டங்களை நான் முறியடிப்பேன். அவர்கள் அடிமைகளாக இருந்துகொண்டு தங்கள் வாக்கு வங்கியை தக்கவைக்க 'முஜ்ரா' நடனம் ஆடுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் கருத்துக்கு கட்டணம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று, பிரதமரின் வாயிலிருந்து 'முஜ்ரா' என்ற வார்த்தையை நான் கேட்டேன். மோடிஜி, இது என்ன மனநிலை? நீங்கள் ஏன் ஏதாவது மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது? அமித் ஷாவும், ஜேபி நட்டாவும் அவருக்கு உடனடியாக மோடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலேவும் மோடியின் கருத்துக்கு கண்டம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அந்த மனிதர் (மோடி) இப்போது 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார். 10 வருட விளம்பரத்தால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் மறைந்திருந்த மோடி தனது உண்மையான சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளார். அவர் பயன்படுத்தியது மலிவான மொழி குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜேடி கட்சி எம்.பி மனோஜ் ஜா கூறுகையில், நேற்று வரை அவருடன் (மோடி) கருத்து வேறுபாடு இருந்தபோதிலும் நாங்கள் இப்போது அவரைப் பற்றி கவலைப்படுகிறோம். 'மட்டன், 'மங்களசூத்ரா', 'முஜ்ரா', இதுதான் ஒரு பிரதமர் பேசக்கூடிய மொழியா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சிவசேனா காட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பிரதமரின் உரையின் வீடியோ கிளிப்பைப் பகிரும்போது, "மோடி ஜி விரைவில் குணமடையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இஸ்லாமிய பாரம்பரிய நடனமாக இருந்த முஜ்ரா காலப்போக்கில் மாறி, தற்போது கலியாட்டங்களுக்காக மாறுபட்ட வகையில் நடந்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
- இந்தியா கூட்டணி பிரதமர் நாற்காலிக்கு மியூசிக்கள் சேர் விளையாடுகிறது என விமர்சித்தார்.
பீகார் தலைநகர் பாட்னாவின் அருகில் உள்ள பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் இன்று (மே 25) நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பேரணியின் அவர் உரையாற்றியபோது, "சிறுபான்மை எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து அவர்களை அடிமைப்படுத்தி இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முஜ்ரா நடனம் ஆடுகிறது
தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை கொள்ளையடிக்கும் முயற்சிகளை முறியடிக்க நான் சபதம் ஏற்றுள்ளேன். ஓட்டு ஜிகாத்தில் ஈடுபடுபவர்களுடன் எதிர்கட்சி (ஆர்ஜேடி) கூட்டணி வைத்திருக்கிறது" என்று கூறினார். மேலும் முஸ்லீம் குழுக்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கும் மேற்கு வங்க அரசின் முடிவை எதிர்த்து கல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு அதை வரவேற்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாடலிபுத்திரா தொகுதி பாஜக வேட்பாளர் ராம் கிருபால் யாதவின் பெயரில் ராம் என்ற வார்த்தை இருப்பதால் அதைக் கேட்டு முகம் சுளிக்க்கும் அளவுக்கு ராமரை எதிர்க்கட்சிகள் வெறுக்கின்றன. இந்தியா கூட்டணி பிரதமர் நாற்காலிக்கு மியூசிக்கள் சேர் விளையாடுகிறது" என விமர்சித்தார்.
- இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
- இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 20) மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் அங்குள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.
இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மோதல் வலுவடைவதைத் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
- பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
- மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள தார்பாரி கிராமத்தில் தனது மனைவி இறப்பதற்கு 2 நாட்கள் முன்பு அவரது 14 வயதுடைய தங்கையை கணவனர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 17) மதியம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கிடைத்துள்ள சிசிடிவி பதிவில் ஒரு நபர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
காவலர்களை கல்லால் தாக்கிய பொதுமக்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி காவல் நிலையத்தை மொத்தமாக தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.
பிகார் தலைநகர் பாட்னாவில் தனியார் பள்ளியின் கழிவுநீர் கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுவன் வீட்டுக்கு வராத நிலையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.
இன்று காலை சிறுவன் படித்து வந்த தனியார் பள்ளிக்கு வந்த பெற்றோர்களுக்கு பள்ளியில் உள்ளவர்கள் மழுப்பலாக பதிலளித்து அவரைகளை உள்ளே விட மறுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.
அப்போது பள்ளியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிறுவனின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கும்பலைக் கட்டுப்படுத்தி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முற்றக்கட்டமாக சிறுவன் பள்ளிக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிப்படி, பள்ளிக்கு உள்ளே சென்ற சிறுவன் மீண்டும் வெளியில் வரவே இல்லை.
எனவே சிறுவனைக் கொன்று சடலத்தை மறைத்து வைத்ததாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு ரப்பர் டயர்களுக்கும் பள்ளியின் சுவர்களுக்கும் தீ வைத்து போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
- பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.
பாட்னா:
பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.
வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.
லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.
பீகார் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோவில் காட்டியது போல பீகார் மாநிலத்தில் சீதா கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்திய மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? மு.க.ஸ்டாலினா மம்தா பேனர்ஜியா லாலு பிரசாத் யாதவா? என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விடுமுறையை பேங்காக்கில் செலவிடுகிறார். பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவத்தினருடன் கொண்டாடுகிறார். மஹாபாரதத்தை போலவே இங்கும் 2 முகாம்கள் உள்ளன. ஒன்று பாண்டவர்கள் முகாம், இன்னொன்று கௌரவர்கள் முகாம்.
இப்பகுதியில் பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.
சீதையின் தேசமான இங்கு, பசுவதையை ஏற்க முடியாது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால், பசுவதை செய்வோரை தலை கீழாக தொங்க விடுவோம் என உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் பசுக்களை கடத்தியதாக பல பேரை பசு பாதுகாப்பு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இந்நிலையில், பசு பாதுகாப்பு கும்பலின் கொலைகளை ஆதரிக்கும் விதமாக, பீகாரில் தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- சுஷில்குமார் மோடி மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர்.
- எம்.எல்.ஏ, எம்.எல்.சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
பாட்னா:
பீகார் முன்னாள் துணை முதல்மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி (72), டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நேற்று காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1952-ம் ஆண்டு பிறந்த சுஷில்குமார் மோடி மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததை அடுத்து, 2024 மக்களவை தேர்தலில் இருந்து விலகுவதாக சுஷில் குமார் மோடி சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில்குமார் மோடி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.
சுஷில்குமார் மோடி மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவரான சுஷில் மோடியின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அரசியல் தொடர்பான விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவர். ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் மீது கோத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஏற்கெனவே நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டம் கோத்ராவில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது
நீட் தேர்வு முடிந்த பிறகு 26 மாணவர்களின் தேர்வுத்தாள்களை பதில் எழுதி அனுப்புவதாகக்கூறி ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூ.10 லட்சம் பேரம் பேசி பெற்றதாக தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் மீது கோத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- பணவீக்கம் இப்படியே உயர்ந்து கொண்டே போனால் ஏழைகள் என்ன சாப்பிடுவார்கள்
- தேவைப்பட்டால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மோடி அப்போது உறுதியளித்தார்
நேற்று பீகார் மாநிலம் மதுபானியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கடந்த காலங்களில் மோடி பேசிய வாக்குறுதிகளை கையடக்க புளூடூத் ஸ்பீக்கரில் ஒலிபரப்பினார்.
பீகாரில் 2014 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய குஜராத் முதல்வர் மோடி ஆற்றிய பல உரைகளின் தொகுப்பை தேஜஸ்வி ஒலிபரப்பினார்.
மோடி பேசும் அந்த ஆடியோவில், "பணவீக்கம் இப்படியே உயர்ந்து கொண்டே போனால் ஏழைகள் என்ன சாப்பிடுவார்கள். இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பணவீக்கம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூட தயாராக இல்லை.
நாட்டின் தலைவர்கள் ஏழைகளைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க விரும்பினால், உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டருக்கு நமஸ்காரம் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் வீட்டிலிருக்கும் கேஸ் சிலிண்டர்களை பிரித்துள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், பீகாரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ரூ.1.25 லட்சம் கோடி நிதி வழங்குவதாகவும், தேவைப்பட்டால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்" என்று மோடி பேசியுள்ளார்.
- மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார்.
- இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை விசாரித்தனர்.
பாட்னா:
பீகாரில் பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் இவருக்கு திருமணமானது.
இதற்கிடையே, மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார். அங்கு தன் மாமியாருடன் சிக்கந்தர் நெருங்கி பழகிவந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அவர்களை விசாரித்தனர். அதில் மாமியாருடன் சிக்கந்தருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அங்கு பஞ்சாயத்தை கூட்டினர். அதில் இருவரும் ஒப்புக் கொள்ளவே, கிராமத்தினர் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மேலும், இருவரும் நீதிமன்றத்திலும் திருமணம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மாமியாரை மருமகன் செய்து கொண்ட திருமண செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
- குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை.
அயோத்தி:
பீகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அயோத்தி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறியதாவது:
அயோத்தியில் நாங்கள் குழந்தைகளை மீட்டோம். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்குட்பட்டவர்கள்.
குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை. பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படும். பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
உத்தரப்பிரதேச குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் சுசித்ரா சதுர்வேதியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குழந்தைகள் கொண்டு செல்லப்படுவதை அறிந்துகொண்டதாக கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்