search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • சவுக்கு சங்கரை கோவை போலீசார் கஞ்சா வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.
    • சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

    இந்நிலையில், தேனி மாவட்ட காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஜாமின் கோரிய சவுக்கு சங்கரின் மனு வரும் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெரியகுளம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவானது.

    தொடர் மழை காரணமாக பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு நேற்று 100 கன அடி வந்த நிலையில் இன்று காலை 405 கன அடியாக அதிகரித்துள்ளது. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 1745 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 51.48 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. சிவகங்கை பூர்வீக பாசனத்திற்காக கடந்த 4 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் இன்று காலை 1572 கன அடிநீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2191 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து 73 கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 103.81 அடியாக உள்ளது. வரத்து 40 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 65.76 மி.கன அடி.

    பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கும்பக்கரை அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 24.8, தேக்கடி 6, கூடலூர் 8.8, உத்தமபாளையம் 15, சண்முகநதி அணை 16.2, போடி 14, வைகை அணை 12, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 60, வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள ஆலந்தளிர் மற்றும் குமணன் தொழு கிராமத்தில் வெறிநாய் கடித்து, பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடமலைக்குண்டு பகுதியில் கடந்த சில நாட்களாக வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டி உள்ளனர்.

    மேலும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை இரண்டு நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    மூணாறில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் வந்தது. இதில் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் போடி ரெயில்வே கேட் பகுதியில் வந்த போது திடீரென பின் பக்க டயர் வெடித்து தீ பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதைப் பார்த்ததும் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.
    • 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதுடன் நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர்.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும் 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது. இது மட்டுமின்றி 21 அடி நீளமுள்ள அலகு குத்தி கோவிக்கு வந்து காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். இதனால் சித்திரை திருவிழா களைகட்டியது. 

    • தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
    • நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை பொதுமக்கள் தவிர்ப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஆண்டிபட்டி, வருசநாடு, கூடலூர், பெரியகுளம், தேனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது. மழை தொடர்ந்து பெய்தால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக உள்ளது 3 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடி திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.59 அடியாக உள்ளது. 50 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 2.6, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 7.4, சண்முகாநதி அணை 19.4, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 23, வீரபாண்டி 24, ஆண்டிபட்டி 6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
    • வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது.

    தேனி:

    பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூ-டியூபர் சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பூதிப்புரம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 3-ந் தேதி அதிகாலை சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவருடன் தங்கி இருந்த சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராம்பிரபு, பரமக்குடியைச் சேர்ந்த ராஜரத்தினத்தை விசாரித்தனர்.

    அவர்கள் வந்த காரில் சோதனை செய்தபோது 2.6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நடமாடும் தய அறிவியல் ஆய்வு வாகனம் மூலம் ஆய்வு செய்த போலீசார் சவுக்கு சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகிய 3 பேர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்கு, கைது செய்ய சென்ற போலீசாரை தரக்குறைவாக பேசியது உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    சவுக்கு சங்கர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் 4-வது நபராக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆரைக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த திருமால் மகன் மகேந்திரன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், சவுக்கு சங்கருக்கு மகேந்திரன் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் இருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 1 கிலோவுக்கு உட்பட்ட கஞ்சா வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடியும். ஆனால் மொத்தம் 3 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளதால் இந்த வழக்கு தேனியில் இருந்து மதுரை போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட உள்ளது என்றனர்.

    DGL0405052024: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல்

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்ன ஓவுலாபுரம் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரவேல்முருகன் (வயது 49). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று கூடலூருக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற சந்திரவேல் முருகன் இரவு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் எரசக்கநாயக்கனூர் பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் சந்திரவேல் முருகன் மற்றும் அவரது பைக் கிடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். மேலும் சந்திரவேல் முருகனுக்கு யாருடனும் முன் பகையா என விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது உறவினர் கவிசீலன் மகன்கள் நிஷாந்த் (வயது 26), நிவிஸ் (24) ஆகியோர் முன் விரோதம் காரணமாக சந்திரவேல்முருகனை வெட்டிக் கொன்று கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், சந்திரவேல் முருகன் குடும்பத்துக்கும் கவிசீலன் குடும்பத்துக்கும் முன் பகை இருந்துள்ளது. கடந்த வருடம் வருசநாடு தருமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்தில் சந்திரவேல்முருகனின் மருமகன் நல்லசாமி கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டது. இதில் சந்திரவேல்முருகன் கவிசீலனின் மனைவி பேச்சியம்மாளை தாக்கியுள்ளார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு மகன்கள் நிஷாந்த், நிவிஸ் ஆகியோர் சந்திரவேல்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் உடல் மற்றும் பைக்கை கிணற்றில் வீசி சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.

    • பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு.
    • பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

    சவுக்கு சங்கர் உடனிருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகியோரிடம் பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
    • மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர்.

    தேனி:

    தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அவரை போலீசார் வேனில் கோவைக்கு அழைத்து சென்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னர் பகுதியில் செல்லும்போது, அந்த வழியாக வந்த காரும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. போலீஸ் வேனின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சவுக்கு சங்கருக்கு உதடு மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மாற்று வாகனம் மூலம் சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து சென்றனர். காரில் வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கைதான சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை காரணமாக கடுமையான வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
    • பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    சுமார் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்திய நிலையில் பொதுமக்கள் பகல் பொழுதில் வெளியே வரவே மிகுந்த அச்சம் கொண்டனர்.

    வயதான முதியவர்கள், குழந்தைகள் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் காட்டுத் தீயும் பற்றி எரிந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கிய பின்னர் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது.

    சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை காரணமாக கடுமையான வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து இது போல் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைய வேண்டும் என்று எதிர்நோக்கி உள்ளனர்.

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் மழை பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.15 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1754 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 57.22 அடி. நீர் திறப்பு 72 கன அடி. இருப்பு 3092 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 102.53 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 3.2, போடி 10.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • அம்மன் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
    • கடந்த 3 ஆண்டுகளாக அம்மன் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு தன்னிச்சையாக நடைபெற்றது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள தாடிச்சோரி பகுதி மக்கள் பஞ்சம் ஏற்பட்டதால் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு மூர்த்தி நாயக்கன்பட்டிக்கு இடம் பெயர்ந்தனர். சில வருடங்கள் கழித்து மீண்டும் தாடிசேரி சென்று சூடம்மாள் அம்மனை வழிபட்ட இடத்தில் இருந்து சிறிது கைப்பிடி மண் எடுத்து வந்து மூர்த்தி நாயக்கன்பட்டியில் சிறிதாக கோவில் எழுப்பி வழிபட்டனர்.

    இவ்வாறு உருவான அம்மன் ஊர் மக்களுக்கு கேட்கும் வரத்தை கொடுத்து மிகுந்த சக்தி வாய்ந்த அம்மனாக சூடம்மாள் விளங்கினார். 100 ஆண்டுகளுக்கு பழமையான அம்மன் சன்னதியில் சில வருடங்களுக்கு முன்பு ராஜ கோபுரம் அமைத்து ஊர் மக்கள் விழா எடுத்து சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 2ம் தேதி 3 நாட்கள் திருவிழா எடுத்து வழிபடுகின்றனர். அம்மன் குறி சொல்லும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது ராஜகோபுரம் கட்டிய பின்பு கடந்த 3 ஆண்டுகளாக அம்மன் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு தன்னிச்சையாக நடைபெற்றது.

    இது எவ்வாறு நடைபெறுகிறது என்று தெரியவில்லை ஆனால் சூரிய பகவான் அம்மனை வழிபடுவதை போன்று தத்ரூபமாக சூரிய ஒளி அம்மன் பாதங்களில் விழுகிறது. இதனை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.

    ×