search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    TNL01180524: முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அ

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. முருக பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.

    விசாக திருநாளான வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    23-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேற்றே கோவிலில் குவியத்தொடங்கிவிட்டனர்.

    மேலும், கோடை விடுமுறையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து, கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் குவியும் பக்தர்கள் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து முருகபெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
    • வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

    வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் பயனுள்ள வாழ்க்கை இடங்களை உருவாக்க உதவுகிறது. இது குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம், நிதி மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

    வாஸ்து பகவானை வழிபட தடைபட்டிருந்த வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்படையும். வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க நாம் சில விசயங்களை செய்தால் தோஷங்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

    வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

    வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

    வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

    தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

    பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

    • இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு.
    • மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர்பிறையில் வரும் சனிக்கிழமையில் இந்த விரதத்தை தொடங்கலாம். இந்த விரதம் 11 வாரம் முதல் 51 வாரங்கள் வரை கடைப்பிடித்தால் அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை. நவக்கிரகங்களில், சனிபகவானை 'ஆயுள்காரகன்' என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.

    இந்த சனிக்கிழமை விரதத்தை அனுசரிப்பவர்கள், காலையில் எழுந்து புனித நீராடி கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் உடையணிந்து கொள்ளலாம். இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு. பூஜையின்போது கருமையை ஒட்டிய மலர்கள், எள்ளு, கருப்பு வஸ்திரம் ஆகியவற்றை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த அரிசியையும் வைக்கலாம்.


    இந்த பூஜையை அனுசரிக்கும் பக்தர்கள், அனுமன் அல்லது பைரவர் கோவிலுக்குச் செல்லலாம். ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் உணவை உட்கொள்ளலாம். பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் தொடங்குவது மிகவும் விசேஷம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால், சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடிக்கலாம்.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
    • உப்பிலிய்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-5 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி மதியம் 12.53 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 1.39 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீகவுரிராஜப் பெருமாள் காலை பரவாசுதேவ சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை. பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி காமதேனு வாகனத்தில் பவனி. நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி. சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலிய்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-நலம்

    கடகம்-உறுதி

    சிம்மம்-திடம்

    கன்னி-சுகம்

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- உயர்வு

    மகரம்-அமைதி

    கும்பம்-அன்பு

    மீனம்-பாசம்

    • அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.
    • அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.

    நான்கு கரங்கள் உடையவர். அவற்றில் கமண்டலம், அட்சமாலையும், தண்டமும், தாங்கியவர்.

    இவருடைய வெள்ளித் தேரில் எட்டு குதிரைகள் பூட்டப்பெற்றுள்ளன.

    பத்து குதிரைகள் தேரை இழுப்பதாகவும் சில நூல்கள் கூறுகின்றன.

    இவர் மீன ராசியில் உச்சமடைகிறார்.

    ரிஷபம், துலாம் இவரது ஆட்சி வீடு.

    பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களுக்கு அதிபதி.

    தசை புத்திகளில் இவருக்குத்தான் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் உள்ளது.

    ஆங்கில எண்ணில் 6க்கு அதிபதி 6, 15, 24ந் தேதியில் பிறந்தவர்களுக்கு இவரே அதிபதி.

    சுக்கிரன் 'வெள்ளி' என்றும் குறிப்பிடப் படுகிறது.

    அதிகாலை நேரத்தில் கிழக்கு திசையில் அவர் ஒளியுடன் கீழ் வானத்தில் காட்சியளிப்பார்.

    அதிகாலை நேரத்தில் கிழக்கில் உள்ள வெள்ளியை எதிர்த்து பிரயாணம் செய்யக்கூடாது என்பர்.

    மேற்கில் சிறிதுதூரம் சென்று பின்னர் கிழக்கில் பயணிப்பதும் சிலர் வழக்கம்.

    கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூரில் சுக்கிர பகவானுக்குரிய திருத்தலம் அமைந்துள்ளது. 

    ஓம் சுக்ராய நம!

    ஓம் ஸுசயே நம!

    ஓம் ஸுபகுணாய நம!

    ஓம் ஸுபலக்ஷணாய நம!

    ஓம் ஸோபநாக்ஷலீய நம!

    ஓம் காமபாலாய நம!

    ஓம் கவயே நம!

    ஓம் கல்யாண தாயகாய நம!

    ஓம் பத்ரமூர்த்தயே நம!

    ஓம் பரத்குணாய நம!

    ஓம் பார்க்கவாய நம!

    ஓம் பக்தபாலகாய நம!

    ஓம் போகதாய நம!

    ஓம் புவநாத்யக்ஷலீய நம!

    ஓம் புக்தி முக்திபலப்ரதாய நம!

    ஓம் சாருஸீலாய நம!

    ஓம் சாருரூபாய நம!

    ஓம் சாருசந்த்ரநிபாஸாய நம!

    ஓம் நிதயே நம!

    ஓம் நீகிலஸாஸ்த்ரக்ஞாய நம!

    ஓம் நீதிவித்யாதுரந்தராய நம!

    ஓம் ஸர்வலக்ஷணஸ்ப்பந்நாய நம!

    ஓம் ஸர்வார்த்தகுணவர்ஜிதாய நம!

    ஓம் ஸமாநாதிகநிர்முக்த்தாய நம!

    ஓம் ஸகலாகமபாரகாய நம!

    ஓம் ப்ருகுவே நம!

    ஓம் போகராய நம!

    ஓம் பூமஸுரபாலநதத்பராய நம!

    ஓம் ஸுப்ரரூபாய நம!

    ஓம் சுத்தஸ்படிகபாஸ்வராய நம!

    ஓம் தீநார் திஹாரகாய நம!

    ஓம் தைத்யகுருவே நம!

    ஓம் தேவாபிநந்திதாய நம!

    ஓம் காவ்யாஸக்தாய நம!

    ஓம் பவிபந்தவிமோசகாய நம!

    ஓம் கநாத்யாய நம!

    ஓம் கநாத்யக்ஷலீய நம!

    ஓம் கமபுக்ரீவாய நம!

    ஓம் காளாதராய நம!

    ஓம் ககருண்யரஸஸம்பூரணா நம!

    ஓம் கல்யாணகுணவர்தநாய நம!

    ஓம் ஸ்வேதாம்பராய நம!

    ஓம் ஸ்வேதவபுஷே நம!

    ஓம் சதுர்புஜஸமந்விதாய நம!

    ஓம் அக்ஷமாலாதராய நம!

    ஓம் அசிந்த்யாய நம!

    ஓம் அக்ஷீணகுணபாரஸுராய நம!

    ஓம் நக்ஷத்ரகணஸஞ்சாராய நம!

    ஓம் நவதாய நம!

    ஓம் நீதிமார்க்கதாய நம!

    ஓம் வர்ஷப்ரதாய நம!

    ஓம் ஹ்ருஷீகேஸாய நம!

    ஓம் கலேஸநாஸகராய நம!

    ஓம் நவயே நம!

    ஓம் சிந்திதார்த்தப்ரதாய நம!

    ஓம் ஸாந்திமதயே நம!

    ஓம் சித்தஸ்மாதிக்ருதே நம!

    ஓம் ஆதிவ்யாதிஹாராய நம!

    ஓம் மநஸ்விநே நம!

    ஓம் மாகாதாய நம!

    ஓம் மாத்யாய நம!

    ஓம் மஹாஸயாய நம!

    ஓம் பலிப்ரஸந்நாய நம!

    ஓம் அபதாய நம!

    ஓம் பலநே நம!

    ஓம் பலபராக்ரமாய நம!

    ஓம் பவபாஸபரித்யாதாய நம!

    ஓம் மந்தஹாஸாய நம!

    ஓம் பஹாஸுரராய நம!

    ஓம் முக்தாயலஸமாநாபாவ நம!

    ஓம் முக்திதாய நம!

    ஓம் முஸிந்துதாய நம!

    ஓம் ரத்ஸீஹாஸகாருடாய நம!

    ஓம் ரதஸ்தாய நம!

    ஓம் ரஜிப்ரபாய நம!

    ஓம் சூரியப்ராக்தேஸந்தராய நம!

    ஓம் ஸுரஸத்ருஸுஹருதே நம!

    ஓம் கவயே நம!

    ஓம் துலாவ்ரூஷபராஸீஸாய நம!

    ஓம் துர்தராய நம!

    ஓம் தர்மபாலதாய நம!

    ஓம் பாக்யதாய நம!

    ஓம் பூரிவிக்ரமாய நம!

    ஓம் புண்ணியதாயகாய நம!

    ஓம் புராணபுருஷாய நம!

    ஓம் புஜ்யாய நம!

    ஓம் புருஹூதாதிஸந்ஜதாய நம!

    ஓம் அஜேயாய நம!

    ஓம் விஜிதாராதயே நம!

    ஓம் விவதாபரணோஜ்ஜவலாய நம

    ஓம் குந்தபுஷ்பப்ரதீகாஸாய நம!

    ஓம் பவ்யதாரித்ராய நம!

    ஓம் பவபாசவிமோசாய நம!

    ஓம் கௌடதேஸேஸ்வராய நம!

    ஓம் கோப்த்ரே நம!

    ஓம் குணிநே நம!

    ஓம் ஜ்யேஷ்டநக்ஷத்ரஸ்வபூதாய நம!

    ஓம் ஜயேஷ்டாய நம!

    ஓம் ஸ்ரேஷ்டாய நம!

    ஓம் ஸுசிஸ்மிதாய நம!

    ஓம் அபவர்கபரதாய நம!

    ஓம் அநந்தாய நம!

    ஓம் ஸந்தாநபலதாயகாய நம!

    ஓம் ஸர்வைஸ்வர்யப்ரதாய நம!

    ஓம் ஸர்வகீர்வரணஸந்துதாய நம!

    • இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார்.
    • அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.

    வயல்கள், அழகிய வீடுகள், அலங்கரிக்கப்பட்ட இடங்கள், படுக்கையறை போன்றவற்றில் வாசம் செய்பவர்.

    பால் உணர்ச்சியை தூண்டும் கிரகம். மழைக்கு காரகர்.

    மனித உடலில் கழுத்து, தொண்டை, மார்பு, இடுப்பு பக்கம் அசுத்த ரத்த குழாய்கள் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

    சுக்கிரன் ஜாதகத்தில் அமையும் இடத்தை பொருத்து பால்வினை நோய்கள், சர்க்கரை வியாதி, கண்நோய், வீரியமின்மை, சிறுநீர் வழி வியாதிகள் உண்டாகிறது.

    ஒற்றை கண்ணை உடையவர்.

    மகாபலி சக்ரவர்த்தியிடம் திருமால் வாமனராக வந்து மூன்றடி மண் கேட்ட பொழுது சுக்ராச்சாரியார் அவ்வாறு கொடுக்க வேண்டாம் என்று தடுத்தார்.

    மகாபலி அவர் சொல்லைக்கேளாமல் நீர்வார்த்து மூன்றடி மண் கொடுக்க முற்படும்பொழுது நீர்வார்க்குன் கெண்டியின் மூக்கினுள் வண்டாக சுக்கிரர் உருவெடுத்து நீர் வராமல் அடைத்துக் கொண்டார்.

    இதை கண்ட மகாபலி இவரால் இடையூறு வருவதால் தனது பவித்திரத்தை கெண்டியின் மூக்கினுள் செருகினார்.

    அது சுக்கிரரின் ஒரு கண்ணில் குத்த அதனால் சுக்கிரன் ஒரு கண்ணை இழந்தார்.

    • நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்கிறார்.
    • பிருகு முனிவருக்கும், புலோமிசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

    நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்கிறார்.

    பிருகு முனிவருக்கும், புலோமிசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர்.

    உச்சநிலை கிரகம், மூலக்கிரகம் என்றும் கூறப்படுவதுண்டு.

    நீர்க்கிரகம், பெண்கிரகம், வெண்மை நிறமுடையவராதலால் வெள்ளி என்ற பெயரும் உண்டு.

    அசுரர்களுக்கு குரு என்பதால் 'அசுரகுரு' என்ற பெயரும் உண்டு.

    தன்னை வழிபடுபவர்களுக்கு நன்மதிப்பையும், சுகபோகங்களையும், அதிர்ஷ்டத்தையும் அளிப்பவர்.

    இவர் கலா ரசிகர். அழகானவர், கலாவல்லவர், கவிஞர், சுக்ரநீதி என்ற நீதி சாஸ்திரத்தை எழுதியவர்.

    சுக்கிரனுக்குரிய நாள் வெள்ளிக்கிழமை.

    இது இரு கண்ணுடைய நாள். திசை கிழக்கு.

    ஒரு ராசியை கடக்க ஆகும் காலம் ஒரு மாதம்.

    ஒருவருடைய ஜாதகத்தில் மனைவியின் நிலை, இசை, நாட்டியம் போன்ற கலைகள், இன்பம் ஆகியவை சுக்கிரனை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

    இவர் வாகனகாரகன் என்றும் சொல்லப்படுகிறார்.

    வாகனங்கள் வைத்து ஆளக்கூடிய அம்சத்தை தருபவர். 

    • சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.
    • ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சுக்கிரக் கிரகம் களத்திரகாரகன் என்றழைக்கப்படும் கிரகம் ஆகும்.

    ஒருவரது திருமண வாழ்வை நிர்ணயிக்கும் கிரகமாகச் சுக்கிரன் திகழ்கிறது.

    சூரியனார்கோயிலில் சூரியனுக்கு வடக்கில் தெற்கு முகமாக நின்ற திருக்கோலத்தில் காணப்பெறும் சுக்கிர பகவான் வலது கையால் அபய முத்திரையினையும் இடது கையைத் துடையில் ஊன்றியவாறும் காட்சி அளிக்கின்றார்.

    சுக்கிர பகவானுக்கு அசுரகுரு, உஷனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சுக்கிரன், சுங்கன், சைக்கியன், திங்கள், தைத்யமந்திரி, பளிங்கு, பார்க்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள் என்றும் வேறு பெயர்கள் உண்டு.

    ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதியான இவருக்குரிய அதிதேவதை இந்திராணி, வாகனம் முதலை, தானியம் மொச்சை, வெண்தாமரை, வெள்ளைநிற ஆடை, வைரம், மொச்சைப் பொடி அன்னம், அத்தி சமித்து, வெள்ளி, உலோகம் ஆகியன இவருக்கு உரியன ஆகும். 

    • நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.
    • தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

    மகாலட்சுமி மந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி

    ஆகச்ச ஆகச்ச,

    மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

    மஹாலக்ஷ்மி மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

    மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி

    ஏஹ்யேஹி ஸர்வ

    ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே

    கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.

    ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.

    பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள்.

    இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை மனம் உருகி சொன்னால் சிறப்பான பலன் தரும் என்பது ஐதீகம்.

    இதனை சொல்லும் முன், மகாலட்சுமியின் படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி குல தெய்வத்தை முதலில் வணங்கி அதன் பிறகே, மந்திரம் சொல்லி வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும்.

    நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்கவேண்டும்.

    தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

    இப்பூஜையின் நிறைவில் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தந்து வருவது சிறப்பாகும்.

    வீட்டில் மகாலட்சுமி வசம் செய்யும் துளசியுடன் கூடிய மாடம் இருந்தால் இதேபோல் அதற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் சற்று கூடுதல் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருவன் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிர பகவான் உச்சமோ பெற்றிருக்க வேண்டும்
    • செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை இம்மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்

    கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே

    வசமானய ஸ்வாஹா

    ஒருவர் தனது வாழ்வியலில் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தால் அவருக்கு "சுக்கிரத் திசை" என சிலர் கூற நாம் கேள்விப் பட்டிருப்போம்.

    ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய "ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:

    சுக்கிர பகவான் மந்திரம்

    "ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.

    ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்"

    சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்

    வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!

    வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

    அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

    சுக்ர காயத்ரீ மந்திரம்

    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

    தநுர் ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

    • ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள்.
    • அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது.

    ஒருநாள் ஹரதத்தரின் மனைவி, அரிசியை முற்றத்தில் வைத்து விட்டு அடுக்களையில் வேலையாக இருந்தாள்.

    அப்போது அங்கு வந்த ஒரு நாய் அந்த அரிசியை உண்ணத் துவங்கியது.

    அதைக் கண்டு கோபம் கொண்ட கமலாட்சி, அந்த நாயை விரட்டுவதற்காக அரிவாள் மனையை அதன் மீது வீசி எறிந்தாள். நாயும் வெட்டுப்பட்டு இறந்தது.

    ஹரதத்தர் இறந்த அந்த நாய்க்கு விபூதி பூசி விட்டு அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார்.

    அதனால் அந்த நாய் நற்கதி பெற்று விமானமேறி தேவலோகம் அடைந்தது.

    தனது தாயார் காளை மாட்டை கோலால் அடித்து விரட்டிய பாவத்தையும், மனைவியார் நாயைக் கொன்ற பாவத்தையும் தீர்ப்பதற்காக ஒரு ஸ்லோகம் எழுதத் தொடங்கினார்.

    பிராயச்சித்தம் என்ன வென்று விளங்காததால் இரண்டே வரிகள் எழுதித் தொடங்கப்பெற்ற ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்யாமல் காவிரிக்கு நீராடச் சென்றார்.

    வீட்டிற்குத் திரும்பியதும் தான் எழுதிய ஓலைச்சுவடியைக் கொண்டுவந்து பிரித்துப் பார்த்தால் அந்த ஸ்லோகத்தின் மீதி இரண்டு வரிகள் எழுதப்பட்டிருந்தன.

    பஞ்சட்சர ஜபம் செய்வதே பிராயச்சித்தம் என்ற பொருள் உடையவை அவ்வரிகள்.

    இதை யார் எழுதியது என்று மனைவியிடம் கேட்ட போது அதற்கு அவர், தாங்கள் தானே திரும்பி வந்து எழுதி வைத்து விட்டுக் காவிரிக்கு சென்றீர்கள்? என்றார்.

    தம் உருவில் வந்து எழுதியது அக்னீசுவரரே என்று ஹரதத்தருக்கு அப்போது தான் புலப்பட்டது.

    ×