search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
    • ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல்.

    2005-ல் தெலுங்கில் வெளியான சூப்பர் என்கிற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷெட்டி.

    ரெண்டு படம் மூலம் தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அனுஷ்கா, தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

    ரஜினியுடன் லிங்கா, விஜயுடன் வேட்டைக்காரன், அஜித்துடன் என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தெய்வத் திருமகள், தாண்டவம், சிம்புவுடன் வானம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

    கடந்த சில வருடங்களாகவே மிகவும் குறைவான பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் அனுஷ்கா.

    இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ஒருவரை இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அனுஷ்காவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், திருமண தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இறுதியாக திருமணத்திற்கு அனுஷ்கா தயாராகிவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

    • நடிகர் சாந்துவும், நடிகை பவித்ராவும் கடந்த சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஒரு வாரத்திற்குள் இரண்டு பிரபலமான நடிகர்களை இழந்ததால் தெலுங்கு சின்னத்திரை அதிர்ச்சியில் உள்ளது.

    கன்னடம் மற்றும் தெலுங்கு டி.வி. தொடர்களில் பிரபலமானவர் நடிகை பவித்ரா ஜெயராம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின் போது காரில் இருந்த பவித்ராவின் சகோதரி, நடிகர் சந்திரகாந்த் என்கிற சாந்து மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பவித்ராவின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடிகர் சாந்து தற்கொலை கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி தொடரான "திரிநயனி"யில் பவித்ரா ஜெயராமின் கணவராக நடித்த சந்து, மணிகொண்டாவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    நடிகர் சாந்துவும், நடிகை பவித்ராவும் கடந்த சில காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ராவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களை பிரிந்துள்ளார். அதே போல் சந்துவுக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தாலும் குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்கிறார்.

    இருவரும் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு தங்கள் உறவை முறைப்படுத்த திட்டமிட்டனர், ஆனால் பயணத்திலிருந்து திரும்பி வரும் போது கார் விபத்தில் பவித்ரா இறந்தார்.

    ஒரு வாரத்திற்குள் இரண்டு பிரபலமான நடிகர்களை இழந்ததால் தெலுங்கு சின்னத்திரை அதிர்ச்சியில் உள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    நடிகர் விஜயின் 68-வது படமான 'கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'விசில் போடு' வெளியான நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5- ந்தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இதனால் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்காக நடிகர் விஜய் வெளிநாடுக்கு செல்ல சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், GOAT படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில், VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு விஜய்யின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் அவுட் புட்டை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

    இப்படத்தின் VFX பணிகள் அமெரிக்காவில் நடைபெறுவதால் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்காவில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
    • எஸ்.பி. சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
    • இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

    'காக்கா முட்டை' ,'விசாரணை', 'கொடி' ,'வட சென்னை' உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "மாஸ்க்". இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி. சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

    இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக்  இயக்குகிறார். இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக தனியார் நிறுவனம் வழங்கிய சிறந்த குறும்படத்திற்கான கோல்ட் மெடல் விருதை பெற்றுள்ளார்.

    இத்திரைப்படத்தின் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், வி.ஜே. அர்ச்சனா, சந்தோஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும் ,ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பகலறியான் படத்தின் கதையை கிஷோர்குமார் எழுதியுள்ளார்.
    • நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் படத்தில் நடித்த வெற்றி நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் "பகலறியான்". இது சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

    மே 24 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட இயக்குநர் பேரரசு பேசும் போது, "பகலறியான் என்றால் பகலை பார்க்காதவன் என்பது தான் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள்."

    "சினிமாவில் இசையமைப்பாளர்கள் எப்போதும் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையை பரபரப்பாக படமாக்கியுள்ளார்கள். நடிகர் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார்," என்று தெரிவித்தார்.

    இந்த படத்தில் அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலக்கதையை கிஷோர்குமார் எழுதியுள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் PMY ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்
    • இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

    கடந்த ஆண்டு வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து இருந்தார் விஜய் சேதுபதி. ஜனவரி மாதம் விஜய் சேதுபதியும் கட்ரீனா கைஃப் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதைத்தொடர்ந்து விடுதலை 2, மஹாராஜா படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்திற்கு ஏஸ் என்ற தலைப்பை வைத்துள்ளனர். விஜய் சேதுபதி ஒரு கையில் பகடையை உருட்டுவது போலவும் மறுக் கையில் சுருட்டை பிடித்தபடி போஸ்டர் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குட்டிப் பிசாசே பாடல் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது.
    • இந்த கதையை ஒப்புக்கொள்வார் என்று நினைக்கவே இல்லை.

    ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் அடுத்த வாரம் (மே 24) வெளியாக இருக்கும் படம் பிடி சார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கியுள்ளார். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்ட நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசும் போது, "நான்கு ஆண்டு இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது."

    "இது உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை ஒப்புக்கொள்வார் என்று முதலில் நினைக்கவே இல்லை. ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார்."

    "பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".
    • இப்படத்தை T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் கடந்த மாதம் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார்.

    அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது .

    ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக காஷ்மிரா மற்றும் அனிகா சுரேந்திரன், பிரனதி, பிரபு, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், முனீஸ் காந்த், மதுவந்தி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . இதையொட்டி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது.

    விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எங்கள் நிறுவனத்தில் இந்தப் படத்தை தயாரித்தது திருப்திகரமாக உள்ளது. இந்த கதையை ஆதி என்னிடம் கூறியவுடன் உடனே தயாரிக்க சம்மதம் சொன்னேன். இப்பொழுது படத்தை பார்க்கும் பொழுது முழு திருப்தி ஏற்படுகிறது.

    இந்த படத்தில் வருவது போல பி.டி. சாருக்கும், இங்கிலீஷ் டீச்சருக்கும் காதல் என்பது பல இடங்களில் நடந்து கொண்டிருப்பது தான்.என்னுடைய பள்ளி பருவ காலத்திலும் பிடி சாரும் இங்கிலீஷ் டீச்சரும் காதலித்தனர். அவர்கள் காதலை சேர்த்து வைத்து திருமணத்தையே நான் தான் செய்து வைத்தேன். அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் நல்ல செய்தி இருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இது இருக்கும் என்றார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஐசரி கணேஷ்,  ரஜினிகாந்த் நடிக்கும் 172-வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே என்று கேட்டதற்கு, இது தொடர்பாக ரஜினிகாந்த்தை சந்தித்தது உண்மை. அவரிடம் பேசி உள்ளோம் விரைவில் நல்ல செய்தி வெளியாகும், இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை.
    • எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. விடுதலை பாகம் 1 சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது.

    விடுதலை பாகம் 2 சில காட்சிகள் படமாக்க பட்ட நிலையில், விஜய் சேதுபதியை வைத்து இன்னும் 20 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகள் உள்ளது. விஜய் சேதுபதி பல்வேறு படங்கள் பல்வேறு மொழியில் நடித்து வருவதால் அவரால் 20 நாட்கள் கால் ஷீட் கொடுக்க இயலவில்லை. அதனால் படப்பிடிப்புகள் தாமதம் ஆகின்றன என தகவல் வெளியாகிய நிலையில் தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

     

    இந்நிலையில் படத்தை குறித்து மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளார். இது குறித்து விடுதலை 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகிய புகைப்படம் அதை உறுதி படுத்தியுள்ளது. எஸ்.ஜே சூர்யா எம்மாதிரி கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
    • கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.

    சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். 

    கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா கூறும்போது, "அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மீதும் பல குற்றச்சாட்டுகளை அடிக்கினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வீடியோ வெளியிட்டார்.

    தொடர்ந்து, கார்த்திக் சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது.

    அதில், "நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே... உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதான, நல்ல ஆச்சாரமான பிராமின் ஃபேமிலில இருந்துதான வந்த..." என்று கார்த்திக் பேசுகிறார்.

    சுசி லீக்ஸ் போலவே தற்போது அவரின் முன்னாள் கணவர் கார்த்திக்குமாரின் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆனால், பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை என்று கார்த்திக் குமார் விளக்கம் தெரிவித்தார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    சுசித்ராவை விவாகரத்து செய்த பிறகு, கார்த்திக் குமார் அம்ருதா என்கிற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.

    இந்நிலையில், சுசித்ரா கார்த்திக் குமார் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், வாழ்க்கை மிகவும் குறுகியது.. அது வாக்குவாதம் செய்வதற்கு அல்ல... ம*** போச்சு என்று சொல்லிவிட்டு.. அதை கடந்துவிட்டு போ என்றும்.. ஹாய் என் காதலே.." என்று கார்த்திக் குமாரை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்".
    • இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் புதிய படம் "ஹிட் லிஸ்ட்". கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார். இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜ குமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார், பி. வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் படக்குழுவை நடிகர் விஜய் , சூர்யா உள்ளிட்டோர் பாராட்டினர்.

    இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எகஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஒரு சைக்கோ கொலைக்காரன் வித்தியாசமான முறையில் கதாநாயகனின் குடும்பத்தை கொலை செய்கிறான். அதை எப்படி கதாநாயகன் காப்பாற்றுகிறார் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×