search icon
என் மலர்tooltip icon
    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    சென்னை:

    அட்சய திருதியை நாளான மே 10-ந்தேதிக்கு பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,850-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 54,800-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96.50-க்கும் பார் வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டி போட்டு உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    • விஜயசாந்தி பா.ஜ.க.வை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
    • தென்னிந்தியாவின் அரசியல் எப்போதும் சுயமரியாதைக்கான பொது உணர்வுகளால் வழி நடத்தப்படுகிறது.

    திருப்பதி:

    நடிகை விஜயசாந்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு பல மாதங்களாக அவர் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. மேலும் அரசியல் குறித்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை.

    தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் விஜயசாந்தி பா.ஜ.க.வை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது :-

    தென்னிந்தியாவின் அரசியல் எப்போதும் சுயமரியாதைக்கான பொது உணர்வுகளால் வழி நடத்தப்படுகிறது. இந்த கொள்கை நீண்ட காலமாக தொடர்கிறது. இந்திய நிலப்பரப்பில் தென்னிந்திய மாநிலங்கள் தேடும் சுயமரியாதையை பா.ஜ.க. புரிந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் தெலுங்கானாவிற்கு பி.ஆர்.எஸ். கட்சி தேவை இல்லை என்ற பா.ஜ.க.வினர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    • மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் உறுப்பினரா சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.
    • அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது

    புதுடெல்லி:

    மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி நியமிக்கப் படுகிறார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது.
    • பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய நேர்காணலில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    இதற்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது. வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை - பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

    பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.

    10 ஆண்டு சாதனைகளை சொல்ல எதுவும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படும் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்துகிறார்.

    பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.

    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட படி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கியுள்ளார் பிரதமர் மோடி.

    உண்மைகளை மறைத்து, மகளிர் இலவச பயணத்திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • மர்ம நபர்கள் சில விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
    • தமிழ் மாநிலக் குழுவின் ‘எக்ஸ்’ தள கணக்கு நேற்று முடக்கப்பட்டது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் 'எக்ஸ்' தள கணக்கு நேற்று முடக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 'எக்ஸ்' தள பக்கத்தை 'ஹேக்' செய்த மர்ம நபர்கள் அதில் சில விளம்பரங்களை வெளி யிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு 'எக்ஸ்' தள பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்படும் செய்திகள் ஏதும் கட்சி சார்ந்தது அல்ல. 'எக்ஸ்' தளத்தை தொடர்புகொண்டுள்ளோம். இந்த பக்கம் விரைவில் மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் சம்மேளன தலைவர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    போக்குவரத்துக் கழகங்களின் நிதிப்பற்றாக் குறையை 2022-ம் ஆண்டு முதல் ஈடுசெய்வது என அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பரிந்துரைகளும் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை உரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட தொகைகள் சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகம் செலவு செய்துவிட்டது.

    இதன் காரணமாக பணி ஓய்வின் போது தொழிலாளர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கால பலன்கள் வழங்கப்படவில்லை. சுமார் 18 மாதங்களாக 6000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். எனவே ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    மேலும் கடந்த 102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வும் மறுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியமும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் 90 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    போக்குவரத்துக் கழகங்களில் கடந்த பல ஆண்டுகளாக வாரிசு வேலை முறையாக வழங்கப்படவில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அனைவருக்கும் வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும்.

    ஊதிய ஒப்பங்நதம் நிறைவு பெற்று 9 மாத காலம் முடிந்துவிட்டது. எனவே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்.

    பணியாளர்களை காண்ட்ராக்ட் முறையில் நியமனம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.

    இவற்றை தொழிலா ளர்கள் மத்தியில் விளக்கி சொல்லும் அடிப்படையில் ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி முடிய வாயிற்கூட்டங்கள் நடத்துவது என்றும் ஜூன் 24-ந் தேதி காலை 10 மணி முதல் 25-ந் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் 24 மணிநேரம் உண்ணா விரதம் மேற்கொள்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • தனக்கு திருமண சடங்கில் பதற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என வாலிபர் புலம்பி உள்ளார்.
    • விமான பணிப்பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்கு ஒத்திகையை வாலிபருக்காக ஏற்பாடு செய்தனர்.

    நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.

    வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணிக்கும் ஆண் பயணி ஒருவர் தான் மணமகன் என்றும் திருமணம் செய்துகொள்ள பயணிப்பதாகவும் சக பயணிகளுடன் கூறியுள்ளார்.

    மேலும் தனக்கு திருமண சடங்கில் பதற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என புலம்பி உள்ளார். அப்போது அதனை கேட்ட விமான பணிப்பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்கு ஒத்திகையை அந்த வாலிபருக்காக ஏற்பாடு செய்தனர். விமான பணிப்பெண் ஒருவர் புதுபெண்போல அலங்கரிக்கப்பட்டு அந்த வாலிபருடன் திருமண சடங்கில் ஈடுபட்டார். பின்னர் இருவரும் முத்தங்களை பரிமாறி திருமண சடங்கை நிறைவு செய்தனர்.


    • முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
    • ‘பிளே-ஆப்’ சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார்?

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழ்ந்து விட்டன.

    வாழ்வா-சாவா ஆட்டம்

    'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா? நானா? என்ற போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் இரு அணிக்கும் வாழ்வா-சாவா போராட்டமாகும். முக்கியமான இந்த ஆட்டத்துக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றன.

    சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டாலோ அடுத்த சுற்றுக்குள் தகுதி பெற்று விடும். ஆனால் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

    பெங்களூரு அணி எப்படி?

    பெங்களூரு அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.387 ஆக உள்ளது. தனது முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தொடர்ச்சியாக தோல்வி கண்டு தத்தளித்த பெங்களூரு அணி கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது. தொடக்கத்தில் படுமோசமாக இருந்த அந்த அணியின் பந்து வீச்சு இப்போது நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் ஒரு சதம் 5 அரைசதம் உள்பட 661 ரன்கள் சேர்த்து தொடரில் அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (3 அரைசதம் உள்பட 367 ரன்), ரஜத் படிதார் (5 அரைசதம் உள்பட 320 ரன்), தினேஷ் கார்த்திக் (2 அரைசதம் உள்பட 301 ரன்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், லோக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். கேமரூன் கிரீன் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் பொருட்டு இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜாக்ஸ் (230 ரன்), ரீஸ் டாப்லே (4 விக்கெட்) ஆகியோர் நாடு திரும்பியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    நிலையற்ற சென்னை

    5 முறை சாம்பியனான சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் +0.528 ஆக இருக்கிறது. வெளியூரில் இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 2-ல் மட்டுமே வெற்றி கண்டு நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை அணி சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 583 ரன்), டேரில் மிட்செல் (2 அரைசதத்துடன் 314 ரன்) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் சொதப்பி வருகிறார்கள்.

    அத்துடன் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 389 ரன்) கடந்த 4 ஆட்டங்களில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பேட்டிங் வலுப்பெற அவர்கள் நிலைத்து நின்று கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சிமர்ஜீத் சிங் நம்பிக்கை அளிக்கின்றனர். முஸ்தாபிஜூர் ரகுமான், பதிரானா விலகலால் ஏற்பட்டுள்ள பலவீனத்தை சரிக்கட்ட ஷர்துல் தாக்குர் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    பெங்களூருவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க மல்லுக்கட்டும்.

    அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்த பெங்களூரு அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானது என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூரு அணி 10 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இரவு 7.30 மணிக்கு...

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மேக்ஸ்வெல், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் அல்லது யாஷ் தயாள், கரண் ஷர்மா, முகமது சிராஜ், லோக்கி பெர்குசன்.

    சென்னை: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி அல்லது ஷர்துல் தாக்குர், டோனி, மிட்செல் சான்ட்னெர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இந்தியா, ரஷியா இடையே விசா இன்றி பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    இந்தியா, ரஷியா இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தாண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதுதொடர்பாக, ரஷிய மந்திரி நிகிதா கொன்ராட்யேவ் கூறுகையில், இந்தியா-ரஷியா இடையிலான பயணத்தை எளிதாக்க இரு நாடுகளிடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான ஒப்பந்தம் இந்தாண்டுக்குள் இறுதி செய்யப்படும். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும் என தெரிவித்தார்.

    • சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும்.
    • போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.

    நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் ஒரு காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இதேபோல் தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.

    இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ டியூபர் உள்பட 117 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும். அவர்களின் இதய துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.


    பின்னர் போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.

    ×