search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.
    • எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினியை கட்டுப்படுத்தலாம்.

    உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.

    இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும். முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.

    அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி சிப் நோலன் ஆர்பா என்ற நபரின் மூளையில் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், டெலிபதி சிப் பொருத்திக் கொள்ள இரண்டாவது நபர் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று நியூராலிங்க் அறிவித்து இருக்கிறது.

    "எங்களின் டெலிபதி சைபர்நெடிக் சிப் கொண்டு நீங்கள் உங்களது மொபைல் போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், மூளையில் சிப் பொருத்திக் கொண்ட நோலன் தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.

    இம்மாத துவக்கத்தில் சிப் பொருத்தி 100 நாட்களை கடந்த நிலையில் நோலன், தற்போது எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினி மற்றும் ஐபேட் உள்ளிட்டவைகளை இயக்கி கேம்களை விளையாடுவதோடு பிரவுசிங் செய்கிறார்.

    • ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.
    • கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாக அமைந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் மேம்பட்ட ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும், புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்கான விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.

    இந்த வீடியோவில் கணினிகள், லேப்டாப்கள், பெயிண்ட், இசை கருவிகள் என கலை சார்ந்த பொருட்கள் அனைத்தையும் அழகாக அடுக்கி வைத்து, அவற்றை ராட்சத நசுக்கு இயந்திரம் கொண்டு நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பர வீடியோவுக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.

    ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஆப்பிள் விளம்பர வீடியோ தொடர்பான சர்ச்சை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் ஐபேட் ப்ரோ விளம்பர விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆப்பிள் வெளியிட்ட வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையிலும், கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாகவும் அமைந்துள்ளது.

    சாம்சங் தற்போது வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், கீழே உடைந்து இருக்கும் ஏராளமான பொருட்களில் பெண் ஒருவர் இசைக்கருவியை எடுத்து வந்து இருக்கையில் அமர்கிறார். பிறகு அருகில் உள்ள டேப் ஒன்றில் இசைக்கருவியை இயக்கும் குறிப்புகளை பார்த்துக் கொண்டே இசைக்கருவியை வாசிக்க ஆரம்பிக்கிறார்.

    வீடியோவில் அந்த பெண் பயன்படுத்தும் டேப்லெட் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் மாடல் ஆகும். இந்த வீடியோ முடிவில் கிரியேடிவிட்டியை நசுக்கிவிட முடியாது (creativity can never be crushed) எனும் வாசகமும் இடம்பெறுகிறது. இத்துடன் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலும் காண்பிக்கப்படுகிறது. சாம்சங் வெளியிட்ட புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் உடன் வைக்கப்பட்டு இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

    அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் மூலம் புதிய போன் மாடலின் விவரங்கள் ஓரளவுக்கு தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் இதுவரை வெளியான ஐபோன்களில் மிகவும் பெரியதாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் புகைப்படத்தின் படி, இந்த மாடலில் 6.9 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோன் சீரிசில் பெசல்களை கணிசமான அளவுக்கு குறைக்க ஆப்பிள் நிறுவனம் பார்டர் ரிடக்ஷன் ஸ்டிரக்ச்சர் (பி.ஆர்.எஸ்.) எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    இந்த தொழில்நுட்பம் ஐபோன்களின் பெசல்களை முடிந்தவரை மெல்லியதாக மாற்றும். புதிய பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் அளவீடுகளில் எவ்வித மாற்றமும் இன்றி பெசல்களை குறைக்க உதவும் என்று தெரிகிறது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா சென்சார் தற்போதைய ஐபோனில் இருப்பதை விட அளவில் சற்று உயரமாக காட்சியளிக்கிறது.

    அந்த வகையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் 1/1.14 இன்ச் அளவு கொண்ட சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1/1.28 இன்ச் சென்சாரை விட பெரியதாக இருக்கும். 

    • புதிய ஐகூ ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒ.எஸ். கொண்டுள்ளது.

    ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் Full HD+ 120Hz ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஐகூ Z9x 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     


    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 14 மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 14, கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஐகூ Z9x ஸ்மார்ட்போன் ஸ்டாம் கிரே மற்றும் டொர்னடோ கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஐகூ Z9x ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 மற்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை மே 21 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர்.
    • பல பில்லியன் டாலர்கள் இழக்கும் சூழல் உருவானது.

    உலகின் முன்னணி தேடுப்பொறி நிறுவனம் கூகுள். உலகளவில் ஏராளமான பயனர்கள் கூகுள் நிறுவன சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இணையம் சார்ந்து கூகுள் நிறுவனம் ஏராளமான சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வாறு கூகுள் வழங்கி வரும் ஸ்டோரேஜ் சார்ந்த சேவை தான்- கூகுள் கிளவுட்.

    கூகுள் கிளவுட் சேவையை கொண்டு பயனர்கள் தங்களின் மிகமுக்கிய தரவுகள் அனைத்தையும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலம். தெரியாத்தனமாக கிளவுட் சேவையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர். இதே போன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    இந்த சம்பவத்தில் ஓய்வூதிய நிதி சேவையை வழங்கி வரும் யூனிசூப்பர் நிறுவன பயனர்கள் சுமார் ஐம்பது லட்சம் பேரின் ஓய்வூதிய நிதி இருப்பு கொண்ட விவரங்கள் தவறுதலாக கூகுள் கிளவுட் சர்வெர்களில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது. இதை கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியனும் உறுதிப்படுத்தி இருந்தார்.

    மேலும், விவரங்கள் தெரியாமல் அவிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவன பயனர்களுக்கு சொந்தமான பல பில்லியன் டாலர்கள் இருப்பு கொண்ட அக்கவுண்ட்கள் பாதிக்கப்பட்டன.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓய்வூதிய நிதி நிறுவனம் யூனிசூப்பர். இந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களால் தங்களது ஓய்வூதியை நிதி சார்ந்த அக்கவுண்டை ஒருவார காலத்திற்கு இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால் பயனர்கள் ஓய்வூதிய நிதி நிலவரத்தை பார்க்க முடியாமலும், சிலரது அக்கவுண்டில் பணம் குறைந்து இருப்பதுமான பிரச்சினைகள் ஏற்பட்டது.

    ஓய்வூதிய நிதி சார்ந்த பிரச்சினை தொடர்பாக யூனிசூப்பர் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே தகவலை யூனிசூப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் சுன் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.

    மேலும், இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவனம் தனது தரவுகளை கூகுள் கிளவுட் மட்டுமின்றி மேலும், சில நிறுவனங்களின் சர்வெர்களில் ஸ்டோர் செய்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பிரச்சினையின் பாதிப்புகள் பெருமளவுக்கு குறைந்துள்ளது.

    இதுதவிர கூகுள் கிளவுட் தரப்பில் இதுபோன்ற பிரச்சினை எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிந்து இருப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

    • அந்நிறுவனம் ஏராளமான டீசர்களை வெளியிட்டு வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது GT 6T ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மே 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் தொடர்பாக அந்நிறுவனம் ஏராளமான டீசர்களை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் புதிய ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் சந்தையிலேயே முதல்முறையாக இரட்டை VC கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ரியல்மி GT 6T மாடலில் வழங்கப்படும் 9-அடுக்கு கூலிங் சிஸ்டம் ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை தடுக்கும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் கவர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் இதில் 120 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் ரியல்மி தெரிவித்து இருந்தது. இதை கொண்டு ஸ்மார்ட்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பயன்படுத்த முடியும்.

    ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 120Hz LTPO ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    • ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் ரூ. 1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14 ஆயிரத்து 499 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

     


    தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலுக்கு ரூ. 1250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்து 749 என மாறி இருக்கிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 750 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என மாறிவிடும். இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் சில்வர், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

    • போட் ஏர்டோப்ஸ் 800 மாடல் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
    • ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்கள் பயன்படுத்தலாம்.

    போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் 800 இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இதில் 10 மில்லிமீட்டர் அளவில் டைட்டானியம் டிரைவர்கள் உள்ளன.

    இந்த இயர்பட்ஸ் குவாட் மைக் ENx தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அழைப்புகளின் போது மேம்பட்ட அனுபவத்தை கொடுக்கும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டு ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

     


    இத்துடன் 50ms வரை லோ லேடன்சி மோட், வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி மற்றும் அடாப்டிவ் EQ மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. சார்ஜிங் செய்ய யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் மாடலுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் 800 மாடல் இன்டர்ஸ்டெல்லார் புளூ, இன்டர்ஸ்டெல்லார் வைட், இன்டர்ஸ்டெல்லார் கிரீன் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 17 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான் வலைதளத்தில் மட்டுமே நடைபெற இருக்கிறது.

    • ஜியோபைபர் மற்றும் ஏர்பைபர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • அன்லிமிடெட் டேட்டா, ஓ.டி.டி. பலன்கள் வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய ஜியோ சலுகை "அல்டிமேட் ஸ்டிரீமிங் பிளான்" என்று அழைக்கப்படுகிறது. இந்த போஸ்ட்பெயிட் சலுகை ஜியோபைபர் மற்றும் ஏர்பைபர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாதம் ரூ. 888 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோவின் புதிய போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஓ.டி.டி. பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    அதன்படி இந்த சலுகையில் நெட்ப்ளிக்ஸ் (பேசிக்), பிரைம் வீடியோ (லைட்), ஜியோசினிமா பிரீமியம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 பிரீமியம், சன் நெக்ஸ்ட், ஹோய்சொய், டிஸ்கவரி பிளஸ், ஆல்ட் பாலாஜி, இரோஸ் நௌ, லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரோமீ, டாகுபே, எபிகான் மற்றும் இடிவி வின் என 15-க்கும் அதிக ஓ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

    மேலும், இந்த சலுகையில் ஐ.பி.எல். "தன் தனா தன்" பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் பயனர்களுக்கு 50 நாட்கள் வரை இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. எனினும், ஐ.பி.எல். சலுகை மே 31 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்.

    • சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக்.
    • ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம்.

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ப்ளிப் போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான். அந்த வரிசையில் சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

    இதில் ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும், இதே ஸ்மார்ட்போன் 3C சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     


    சீன வலைதளமான வெய்போவில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் பேக் பேனலில் கவர் ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் இரட்டை கேமரா மாட்யுல், இரு எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும், லெக்யா லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    புதிய மிக்ஸ் ப்ளிப் போன் கோல்டன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் கீழ்புறத்தில் சியோமி லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2405CPX3DC மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சம் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, ஆம்னிவிஷன் OV60A 1/2.8 இன்ச் சென்சார், 2x ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த மாடலில் 32MP செல்ஃபி கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.
    • விளம்பர வீடியோவுக்கு ஆன்லைனில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மாடல்களை சமீபத்தில் அப்டேட் செய்தது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் OLED டிஸ்ப்ளே, புதிய 13 இன்ச், M4 சிப்செட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்காக ஆப்பிள் நிறுவனம் விளம்பர வீடியோ வெளியிட்டது.

    விளம்பர வீடியோவின் படி மிகப்பெரிய நசுக்கு இயந்திரம் ஒன்று இசை வாத்தியங்கள், கணினிகள், ஆர்கேட் இயந்திரங்கள், பெயிண்ட், சிற்பங்கள், கேமராக்கள் மற்றும் ஏராளமான பொருட்களை நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் நசுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் புதிய ஐபேட் ப்ரோ என்று ஆப்பிள் நிறுவனம் வீடியோ மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறது.

     


    ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபேட் ப்ரோ விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தில் எங்களது டி.என்.ஏ.-வில் கிரியேட்டிவிட்டி உள்ளது. இதன் மூலம் சாதனங்களை அழகாக வடிவமைத்து, உலகளவில் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எங்களின் குறிக்கோள் பயனர்கள் தங்களது கற்பனை மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த ஏராளமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகும். இந்த வீடியோவில் எங்களது மார்க் தவரிவிட்டது, மன்னித்துவிடுங்கள்," என்று தெரிவித்துள்ளது.

    • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மிகமெல்லிய தோற்றம், வீகன் லெதர் ஃபினிஷ் மற்றும் பில்ட்-இன் ஸ்டைலஸ் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் ஸ்டைலஸ் கொண்டு பயனர்கள் குறிப்பு எடுத்தல், டூடுல் உருவாக்குதல், புகைப்படங்களை எடிட் செய்தல் என ஏராளமான அம்சங்களை இயக்க முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் Full HD+ pOLED 120Hz ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அட்ரினோ GPU, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மை யு.எக்ஸ். ஓ.எஸ். மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி மாடல் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் காரமெல் லேட் மற்றும் ஸ்கார்லெட் வேவ் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 450 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×