search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது.

    ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பெண்களுக்கு கன்னம், மேல் உதடு, தாடை பகுதிகளில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கிறது. இது போன்ற முடி வளர்ச்சி அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. இது குறிப்பாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வருகிறது. ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இதற்கு பெண்கள், த்ரெட்டிங், வேக்சிங் அல்லது ட்வீசிங் போன்றவற்றை செய்து தற்காலிகமாக முடியை நீக்கி வருகின்றனர். ஆனால், இதற்கு நிறைந்த தீர்வாக ஹார்மோன் பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

    பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - இது ஹார்மோன் குறைபாடு பிரச்சனையாகும். இதனால் பெண்களின் மாத விடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். இதில் ஆண்களின் ஹார்மோன் ஆன ஆண்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனை வரும். இது போன்ற முடி வளர்ச்சி, மாத விடாய் சுழற்சியில் மாறுபாடு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.


    நாளமில்லா சுரப்பி கோளாறுகள் - நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது. இதனால் பெண்களுக்கு உடல் பருமன், வயிற்றை சுற்றி கொழுப்பு சேருதல், மற்றும் நீரிழுவு நோய் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    மரபணு காரணம் - மரபணு காரணமாக அம்மா, அக்கா, அத்தை ஆகியோர்க்கு இந்த பிரச்சனை இருந்தால், இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    முதுமை - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முடி வளரும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக செயல்படும். அதனால் கூட இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை முதுமையில் வரும்.

    கர்ப்ப காலம் - பெண்கள் உடலில் பல படிநிலைகளில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கிறது. பருவம் அடைதல், கர்ப்ப காலம், உடல் பருமன், மாத விடாய் சுழற்சி நிற்கும் ஆகிய நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அதனால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி வரலாம்.


    அட்ரீனல் சுரப்பி கட்டிகள் - அட்ரீனல் ஹார்மோன் குறைபாடுகளால், உடலில் ஆண்ட்ரொஜென் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும். இதன் காரணமாக கருப்பையில் கட்டிகள் வளரும். மேலும் தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனையும் இருக்கும்.

    முடி வளர்ச்சி இருக்கிறது என்பதை உறுதி செய்தவுடன், மருத்துவரை அணுகி எந்த காரணத்தால் இப்படி முடி வளர்கிறது என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.

    • பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
    • செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது.

    வீட்டில் செடி வளர்ப்பதற்கு கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்க்க வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நம் முன்னோர்களால் கூறப்பட்டிருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். சில செடிகளை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது என்றால், அதைக் கட்டாயமாக வீட்டிற்கு முன் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இதன்படி நிறைய பேரின் வீடுகளில் பொன் அரளிச் செடியை வீட்டிற்கு முன் வளர்த்து வருவார்கள். அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிப்பூவை தான் பொன் அரளிச்செடி என்று கூறுவோம். இந்த அரளிச்செடி வீட்டில் வளர்க்கலாமா? இதோடு சேர்த்து சிவப்பு அரளி செடியையும் வீட்டில் வைப்பது சரியா? தவறா? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


    இந்த சிவப்பு அரளி செடியை நாம் எல்லோரும், வாகனத்தில் செல்லும்போது சாலையின் நடுவில் (lamp post) அதிகமாக வளர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம்? என்று பல பேருக்கு தெரிந்திருக்காது. பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. காற்றில் இருக்கும் கெட்ட சக்தியை தனக்குள் ஈர்த்துக்கொண்டு நல்ல காற்றை வெளிப்படுத்துவது தான் இந்த செவ்வரளி செடியின் தன்மை. அதாவது கார்பன் மோனாக்சைட், கார்பன்-டை-ஆக்சைடு இவைகளை தனக்குள் ஈர்த்து சுத்தப்படுத்தி, சுத்தமான காற்றை வெளிப்படுத்துகிறது. இந்த அறிவியல் உண்மை காரணமாகத்தான் இந்த செடியை காற்று மாசுபடும் இடத்தில், வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையில் அதை வைத்துள்ளார்கள்.

    இதனால் இந்த செவ்வரளி செடியை நம் வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம் வீட்டிற்குள் வரும் காற்று சுத்தமாக வருவதற்கு இது ஒரு காரணமாக தான் இருக்கும். ஆனால் இந்த செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது. விஷத்தன்மை கொண்ட காயை குழந்தைகளோ அல்லது தெரியாதவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடக் கூடாது என்பதற்காக இந்த செடியை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள்.


    கூடுமானவரை இந்த சிவப்பு அரளிப்பூவை உக்கிரமான தெய்வங்களுக்கு சூட்டுவதால் வீட்டில் வைக்கக் கூடாது என்றும் கூறுவார்கள். இந்த இரண்டு காரணங்கள் தான். செவ்வரளி பூ முருகனுக்கும் மிக உகந்தது தான். சிவபெருமானும் தன் தலையில் செவ்வரளி பூ பூவை சூடி இருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் செவ்வரளி பூ செடியை முன் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். பின் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். எந்த ஒரு பயமும் வேண்டாம்.

    அடுத்தபடியாக பொன் அரளி பூவிற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பொன் அரளி பூவை நம் வீட்டில் வைப்பதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்றும், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டில் இடவசதி இல்லை என்றாலும் கூட, ஒரு சிறிய தொட்டியில் இந்த இரண்டு செடியையும் வைத்து வளர்த்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.
    • ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    வீட்டில் இருந்தவாறு குறைந்தபட்ச வருமானத்திலிருந்து அதிகபட்ச வருமானம் வரை தரும் பெண்களுக்கு ஏற்ற பிசினஸ்.

    இன்று அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனாலையே பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடித்துவிட்டு வருமானம் ஈட்டுவதற்கான வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

    மேலும் வீட்டிலேயே கடுமையான உழைப்பை செலுத்திய பெண்களால் பிறகு வேலைக்காக வெளியே செல்வது இயலாத காரியம் என்பதால் வீட்டில் இருந்தவரை வருமானம் ஈட்டும் தொழில்களை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குறைந்த நேரத்தில், முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.

    • இந்த நிலையில் வீட்டில் இருந்தவாறு அதிக வருமானத்தை பெற பெண்களுக்கு ஏற்ற தொழில்கள், வீட்டிலேயே பேக்கரி தொடங்கி சாக்லேட், கேக் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு வகைகள், முறுக்கு தயாரித்து வியாபாரம் செய்யும் பெண்கள் சீசனுக்கு மட்டும் இல்லாமல், முழு நேரத் தொழிலாக ஹோம் பேக்கரி தொடங்கி பயன்பெற முடியும்.


    • கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும், தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு பணிகளை மேற்கொண்டால் போதிய வருமானம் கிடைக்கும்.

    • சிறிய நகை உற்பத்தி, செயின், கம்மல் போன்ற பல்வேறு வகைகளில் நகை வடிவங்களை சிறிய அளவில் வீட்டிலிருந்தவாரு தயாரித்தால் அக்கம் பக்கத்தினரிடம் விற்பனை செய்தே வருமானம் ஈட்ட முடியும்.


    • வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் டைப்பிங் வர்த்தக நடவடிக்கையாக பயன்படுத்த முடியும். கணினியில் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் கொண்ட பெண்களுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.

    • தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான பெண்கள் வீட்டில் தையல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.


    • மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வீட்டிலேயே மிக எளிமையாக தயாரிக்கலாம். இவையும் பயன்தரும் வணிக நடவடிக்கைகள் ஆகும். மேலும் ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    • தற்போது ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால் வீட்டில் ஆர்கானிக் சோப்பு மற்றும் ஆர்கனைச் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதும் ஏற்ற வணிக நடவடிக்கையாகும்.


    • மேலும் தற்போதைய நவீன சமூகத்தில் அழகு கலை பெண்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் வீட்டிலேயே அழகு கலை சார்ந்த செயல்பாட்டை செய்யும் பெண்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர் வீடு தேடி சென்று சில மணி நேரங்கள் செலவிட்டு அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறான வணிக நடவடிக்கைகள் தற்போது பெண்களுக்கு ஏற்ற முக்கியமான பிசினஸ்க்காக உருவெடுத்து இருக்கின்றனர்.

    • பி.சி.ஒ.எஸ் இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுக்க வேண்டும்.
    • ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நீர்க்கட்டி பிரச்சனை என்னும் பாலிசிஸ்டிக் ஓவரியன் இருக்கும் பெண்களுக்கு இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு செய்கிறது என்கிறது ஆய்வுகள். பி.சி.ஒ.எஸ் பிரச்சனை கொண்டு இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் சில கார்போஹைட்ரேட்டுகள் போன்ற உணவுகளை விட இன்சுலின் அளவு அதிகமாகவோ அல்லது விரைவாகவோ இவை உண்டாக்காது.

    குறைந்த கிளைசெமிக் உணவுகளில் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் அடங்கும்.

    அழற்சி எதிர்ப்பு உணவு பெர்ரி, கொழுப்பு நிறைந்த மீன், இலைகள் கொண்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகள் எடுத்துகொள்ளலாம்.

    இதய நோய்களின் ஆபத்து அல்லது தாக்கத்தை குறைக்க உயர் ரத்த அழுத்த உணவை தவிர்த்து உணவு முறைகளை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவையும் பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    மீன், கோழி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றூம் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் கொண்ட டயட்டை 8 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றியவர்கள் மற்றவர்களை காட்டிலும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தொப்பை கொழுப்பு குறைவதை கண்டதாக 2015-ம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான பி.சி.ஓ.எஸ் உணவில் இயற்கை உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், உயர் நார்ச்சத்து கொண்ட உணவுகள், சால்மன், டுனா, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்கள், காலே, கீரைகள், அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், சிவப்பு திராட்சை, பெர்ரி பழங்கள், கருப்பட்டை, அடர் சிவப்பு பழங்கள், காய்களில் ப்ரக்கோலி, காலிஃப்ளவர், உலர்ந்த பீன்ஸ் வகைகள், பயறு வகைகள், ஆலிவ் எண்ணெய், அவகேடோ மற்றும் தேங்காயெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், பைன் கொட்டைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட கொட்டைகள், கருப்பு சாக்லேட், மசாலாவில் இலவங்கப்பட்டை போன்றவை ஆரோக்கியமான உணவு முறையில் பின்பற்ற வேண்டியவை.

    கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரீபைண்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், திடமான கொழுப்புகள், அதிகப்படியான சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    • பி.சி.ஓ.எஸ். பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.
    • மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டும்.

    பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்கிற சினைப்பை நீர்க்கட்டியில் உண்டாகும் பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளால் இந்த குறைபாடு நிகழ்கிறது. இது டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரத்தல், கருப்பை விரிவாதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற காரணங்களால் உண்டாகிறது.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அறிகுறிகள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    முகப்பரு

    அசாதாரண முடி வளர்ச்சி (முகத்தில், கன்னத்தில்,மீசை முடி)

    கூந்தல் உதிர்வு

    தோல் நிறம் மாறுதல்

    உடல் எடை அதிகரிப்பு

    பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் குழந்தை பேறை எதிர்நோக்கும் போது முதலில் பி.சி.ஓ.எஸ் -ஐ கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அது கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்கலாம்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டியதுதான். கருவுறுதலுக்கு முதல் தேவை மாதவிடாய் சுழற்சி சீராவதுதான்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் கொண்டிருப்பவர்கள் தங்களது உயரத்துக்கேற்ற எடையை அதாவது பி.எம்.ஐ கொண்டிருக்க வேண்டும். உடல் பருமனாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதனோடு உணவு முறையை சரியாக எடுத்துகொண்டால் கருவுறுதல் சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்.

    பி.சி.ஒ.எஸ் (PCOS or PCOD) பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் கருமுட்டை வெளிவரும் சமயம், அவை வெளிவரும் நேரம், எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கருவுறுதல் சாத்தியமாகலாம் என்பதை அறிய எளிதாக இருக்கும். அதனால் பி.சி.ஓ. எஸ் இருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு என்பதும் எளிதில் கிட்டகூடும்.

    • முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
    • மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.

    அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

    புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.

    நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.

    இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.

    ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

    சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

    உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.

    • பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    என்னது பிஸ்கெட்டை வைத்து சாக்லேட் பர்ஃபியா, அதெப்படி என்று தானே யோசிக்கிறீங்க... நம்ம வீட்டில் இருக்கும் பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்ல குழந்தைகளே எளிமையா இதனை செய்ய முடியும். அரைமணிநேரத்திலேயே இதனை செய்து முடித்துவிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கெட்- ஒரு பாக்கெட்

    கோ கோ பவுடர்- அரைகப்

    பொடித்த நட்ஸ்- ஒரு கப்

    வெண்ணெய்- 50 கிராம்

    சர்க்கரை- அரைகப்

    செய்முறை:

    இந்த சாக்லேட் பர்ஃபி செய்வதற்கு கிரீம் இல்லாத பிஸ்கெட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பிஸ்கெட்டை எடுத்து அதனை சிறிது சிறிதாக உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பு மிக்சியில் போட்டு பொடித்துவிடக்கூடாது.

    அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிடித்த சர்க்கரை, கோ கோ பவுடர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை கெட்டியாகும் போது வெண்ணெய் சேர்க்க வேண்டும்.

    வெண்ணெய் சேர்த்தவுடன் இந்த கலவை சிறிது கெட்டியாகத்தொடங்கும். இந்த நேரத்தில் இந்த கலவையை எடுத்து நாம் ஏற்கனவே உடைத்து வைத்துள்ள பிஸ்கெட் கலவையில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

    இந்த கலவையை வெண்ணெய் தடவிய கேக் மோல்டில் கொட்டி சரி சமமாக சமப்படுத்த வேண்டும். பின்னர் இதனை மூடி ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து பரிமாறலாம். கோடை விடுமுறையை கொண்டாடும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். 

     

    • சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

    சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள். இந்த சாக்லேட்டை வைத்து பல விதமான ஸ்வீட் வகைகளும், ஐஸ்கிரீம் வகைகளையும், கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். உங்க வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு இந்த ராகி சாக்லேட் கேக்கை செய்து கொடுத்து அசத்துங்கள். வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    ராகி மாவு- ஒரு கப்

    கோ கோ பவுடர்- அரை கப்

    முட்டை- 2

    நாட்டுசர்க்கரை- ஒரு கப்

    பேக்கிங் சோடா- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் பவுடர்- கால் டீஸ்பூன்

    ஆயில்- ஒரு குழு கரண்டி

    வெனிலா எசன்ஸ்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு மிக்சி ஜாரில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டு. பின்னர் அதில் ஆயில், கோ கோ பவுடர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அதே மிக்சி ஜாரில் ஜலித்து வைத்துள்ள ராகி மாவு, நாட்டு சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர், தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை வெண்ணெய் தடவிய ஒரு கேக் மோல்டில் ஊற்றி ஓவன் அல்லது குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான, ஊட்டச்சத்து நிறைந்த ராகி சாக்லேட் கேக் தயார். கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.

     

    • கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது.
    • வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேல் தடவி வரலாம்.

    கண்களைச் சுற்றி கருவளையங்கள் யாருக்கும், எந்த வயதிலும் வரலாம். இதற்கு காரணம், வயது முதிர்வு, பரம்பரை, சில பொருட்களுக்கு ஒவ்வாமை, சரியான தூக்கமின்மை, சருமத்தில் மெலனின் அதிகமாக இருப்பது, ரத்தசோகை, சிகரெட், மது பழக்கம், மன உளைச்சல், அடிக்கடி ஹேர்டை பயன்படுத்துவது போன்றவற்றால் கருவளையம் ஏற்படும்.

    இரண்டு கண்களுக்கும் கீழ் கருமை வந்தால் பயப்படத் தேவையில்லை. சில வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள். அவை பலன் அளிக்காவிட்டால் சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தியுங்கள். ஆனால் ஒரு கண்ணுக்கு கீழே மட்டும் கருமை வந்தால் உடனடியாக சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள்.

    கருமையைப் போக்க சில வழிமுறைகள்:

    1) கண்களில் கருமை நிறமிருக்கும் இடங்களில் குளிர்ந்த நீரில் நனைத்த துணியை ஒற்றி எடுங்கள் 2) தூங்கும்போது தலையை சற்று தூக்கி வைத்துப்படுங்கள். இதனால் கண்ணின் கீழ் இமை வீங்குவது குறையும்

    3) போதுமான நேரம் நன்றாகத் தூங்குங்கள்

    4) மது, சிகரெட் பழக்கத்தை நிறுத்தவும்

    5) சூரிய ஒளியில் வேலை பார்க்கும்போது புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்து கொள்ளுங்கள். குளுமையை உண்டாக்கும் கிரீம்களைத் தடவிக் கொள்ளுங்கள்

    6) வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேலே தடவி ஒத்தடம் இடுங்கள்

    7) ஆரோக்கியமான, சத்தான உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது. எனவே கவலைப்படாதீர்கள். வீட்டு வைத்தியம் பலன் தராவிட்டால் உடனே சருமநோய் சிகிச்சை நிபுணரை சந்திப்பது சிறந்தது.

    • அனைவருக்கும் பனீர் பக்கோரா மிகவும் பிடிக்கும்.
    • பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது.

    நூடுல்ஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் பனீர் சேர்த்து என்றால் விட்டு வைக்கவே மாட்டார்கள். பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது. பனீரையும், நூடுஸ்சையும் வைத்து பன்னீர் பக்கோரா செய்தால் அவ்வளவுதான் செய்த உடனேயே காலியாகிவிடும். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த டிஷ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    பனீர்- ஒரு கப் துருவியது

    நூடுல்ஸ் - 2 பாக்கெட்டுகள்

    கான்பிளார் - 2 தேக்கரண்டி

    வெங்காயம் - கால் கப்

    குடைமிளகாய் - 1

    முட்டைக்கோஸ் - 1 கப்

    பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

    பச்சை கொத்தமல்லி - 2 தேக்கரண்டி

    சீஸ் - அரை கப்

    உப்பு - தேயான அளவு

    செய்முறை

    முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, நூடுல்ஸ் மசாலாப் பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். பின்னர் நூடுல்ஸ் வெந்ததும் எடுத்து தனியே வைக்க வேண்டும்.

    நூடுல்ஸ் ஆறிய பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பச்சை கொத்தமல்லி, மிளகாய் தூள், ரவை, பூண்டு விழுது, சீஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உருண்டைகளுக்கு நடுவே விருப்பப்பட்டால் சீஸ் துண்டுகளையும் வைத்து மூடி வைக்கலாம்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை விட்டு பொறித்து எடுக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி, கொத்தமல்லி சாஸுடன் பரிமாறவும்.

    மிச்சம் வைக்காமல் அனைத்தும் உடனேயே காலியாகிவிடும்.

     

    • உடல் சோர்வடையாமல் வைத்திருக்க உதவி செய்யும்.
    • மாம்பழ சீசனுக்கு ஏற்ற மாம்பழ லஸ்ஸி சுவைத்து பாருங்கள்.

    வெயில் காலம் வந்தாலே உடல் சூட்டைக் குறைக்கவும், உடலை சோர்வடையாமல் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இளநீர், மோர், பதநீர், நீர் ஆகாரம் போன்றவற்றைத் தான் அதிகளவில் சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இத்தகைய உணவுகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

    அதுவும் இந்த மாம்பழ சீசனில் மாம்பழ லஸ்ஸி டிரை பண்ணலனா எப்படி. வாங்க மாம்பழ லஸ்ஸி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மாம்பழம் - 1 கப் (நறுக்கியது)

    சர்க்கரை - 1/2 கப்

    தயிர் - 1/2 கப்

    ஏலக்காய் - 2

    ஐஸ் கியூப் - 8-9

    புதினா இலைகள் - 4-5 (அழகுபடுத்த)

    பாதாம் - அழகுபடுத்துவதற்கு

    முந்திரி - அழகுபடுத்துவதற்கு

    பிஸ்தா - அழகுபடுத்த

    செய்முறை:

    மாம்பழத்தை தயாரிக்க, 1 முதல் 2 பழுத்த மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு 1/2 கப் தயிர், மாம்பழ துண்டுகள், 1/2 கப் சர்க்கரை மற்றும் 8 அல்லது 9 ஐஸ் கியூப்ஸ், 2 ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இதனை ஒரு பவுளில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து எடுத்து புதினா இலைகள், பாதாம், பிஸ்தா அல்லது முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். 

     

    • சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், கருமையையும் போக்கும்.
    • முதுமைத் தோற்றம் ஏற்படுவதை தடுக்கும்.

    கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் அழகின் நன்மைகள் பற்றி தெரிமா? கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். மேலும் பல திரையுலக நட்சத்திரங்களின் அழகின் ரகசியம் என்னவாக இருக்குமென்றால் அது கிரீன் டீயாகத் தான் இருக்க முடியும்.

    பலரிடம் கிரீன் டீயைப் பற்றி கேட்டால் அனைவரும் சொல்வது, "கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும். அதுமட்டுமல்லாமல், முகம் பொலிவாக இருக்கும்" என்பது தான்.

    கிரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயிக்கத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த கிரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், என்ன மாதிரியான அழகு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

    கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும். அதற்கு கிரீன் டீயை குடித்தாலோ அல்லது அதனை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தாலோ, அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும்.

    பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்சின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே கிரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்சின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

    கிரீன் டீயை சருமத்திற்கு தேய்த்தாலோ அல்லது குடித்தாலோ, அவை சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதுமட்டுமின், இவை சருமத்தின் நிறம் மாறாமலும் தடுக்கும்.

    எப்போது சருமத்தில் டாக்சின்கள் அதிகம் இருக்கிறதோ, அப்போது தான் சருமம் பொலிவின்றி காணப்படும். ஆகவே இத்தகைய டாக்சின்களை முற்றிலும் போக்கும் திறன் கிரீன் டீயில் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் கிரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.

    ×