search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    • மாலை வந்ததும் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று ஒரு மிக பெரிய குழப்பம் ஏற்படுகிறது.
    • வாங்க சிக்கன் நக்கெட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

    வீட்டில் அம்மாக்களுக்கு மாலை வந்ததும் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று ஒரு மிக பெரிய குழப்பம் ஏற்படுகிறது. அதுவும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்றதாகவும் இருக்க வேண்டும். அதற்கு தான் நாங்க ஒரு சிம்பில் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணியிருக்கோம் வாங்க சிக்கன் நக்கெட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையானவை:

    போன்லெஸ் சிக்கன் - 1/2 கிலோ

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    மைதா - 2 டீஸ்பூன்

    முட்டை - 2

    ப்ரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை:

    * சிக்கனை சுத்தம் செய்துவிட்டு மிகவும் மெல்லியத் துண்டுகளாகப் போடவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

    * வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

    * தண்ணீர் ஊற்ற வேண்டாம். சிக்கனில் உள்ள தண்ணீரிலேயே வெந்துவிடும்.

    * அடிப்பிடிக்காமல் சிக்கன் துண்டுகளை இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிவிட்டு வேக வைக்கவும்.

    * தண்ணீர் முழுவதும் சுண்டி, சிக்கன் வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.

    * மைதா, ப்ரெட் தூள் இரண்டையும் தனித்தனி கிண்ணங்களில் எடுத்துக்கொள்ளவும்.

    * முட்டையைத் தனியாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.

    * ஒரு சிக்கன் துண்டை எடுத்து மைதாவில் முழுவதும் புரட்டி, அடுத்து முட்டையில் முழுவதும் தோய்த்து, உடனே ப்ரெட் தூளில் போட்டு புரட்டி ஒரு தட்டில் வைக்கவும்.

    * இதுபோல் எல்லா சிக்கன் துண்டுகளையும் செய்து வைக்கவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொன்றாகவோ போட்டு ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்துவிடவும்.

    * இதனை தக்காளி கெச்சப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    • இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும்.
    • குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    அசைவ உணவில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இறால். அந்த இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்ப்போம்...

    தேவையான பொருட்கள்:

    இறால் - 1/2 கிலோ

    பிரியாணி அரிசி - 1/2 கிலோ

    வெங்காயம் - 2

    தக்காளி - 4

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்

    கொத்தமல்லி - 1கை

    புதினா - 1 கை

    தேங்காய் பால் - 1 கப்

    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு

    எண்ணெய் - 100 மில்லி

    நெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் இறாலையும், அரிசியும் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்.

    பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதில் பின்பு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கி அதில் இறால் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்பு இறால் தண்ணீர் விட ஆரம்பித்ததும் அதில் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா தூவி கிளறி அதில் ஒரு கப் திக்கான தேங்காய் பால், 2 கப் தண்ணீர் ஊற்றவும். பின்னர் இவை அனைத்து நன்கு கொதித்தவுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசியை போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.

    சுவையான இறால் தேங்காய் பால் புலாவ் ரெடி. குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    • பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
    • செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது.

    வீட்டில் செடி வளர்ப்பதற்கு கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்க்க வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நம் முன்னோர்களால் கூறப்பட்டிருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். சில செடிகளை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது என்றால், அதைக் கட்டாயமாக வீட்டிற்கு முன் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இதன்படி நிறைய பேரின் வீடுகளில் பொன் அரளிச் செடியை வீட்டிற்கு முன் வளர்த்து வருவார்கள். அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிப்பூவை தான் பொன் அரளிச்செடி என்று கூறுவோம். இந்த அரளிச்செடி வீட்டில் வளர்க்கலாமா? இதோடு சேர்த்து சிவப்பு அரளி செடியையும் வீட்டில் வைப்பது சரியா? தவறா? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


    இந்த சிவப்பு அரளி செடியை நாம் எல்லோரும், வாகனத்தில் செல்லும்போது சாலையின் நடுவில் (lamp post) அதிகமாக வளர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம்? என்று பல பேருக்கு தெரிந்திருக்காது. பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. காற்றில் இருக்கும் கெட்ட சக்தியை தனக்குள் ஈர்த்துக்கொண்டு நல்ல காற்றை வெளிப்படுத்துவது தான் இந்த செவ்வரளி செடியின் தன்மை. அதாவது கார்பன் மோனாக்சைட், கார்பன்-டை-ஆக்சைடு இவைகளை தனக்குள் ஈர்த்து சுத்தப்படுத்தி, சுத்தமான காற்றை வெளிப்படுத்துகிறது. இந்த அறிவியல் உண்மை காரணமாகத்தான் இந்த செடியை காற்று மாசுபடும் இடத்தில், வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையில் அதை வைத்துள்ளார்கள்.

    இதனால் இந்த செவ்வரளி செடியை நம் வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம் வீட்டிற்குள் வரும் காற்று சுத்தமாக வருவதற்கு இது ஒரு காரணமாக தான் இருக்கும். ஆனால் இந்த செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது. விஷத்தன்மை கொண்ட காயை குழந்தைகளோ அல்லது தெரியாதவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடக் கூடாது என்பதற்காக இந்த செடியை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள்.


    கூடுமானவரை இந்த சிவப்பு அரளிப்பூவை உக்கிரமான தெய்வங்களுக்கு சூட்டுவதால் வீட்டில் வைக்கக் கூடாது என்றும் கூறுவார்கள். இந்த இரண்டு காரணங்கள் தான். செவ்வரளி பூ முருகனுக்கும் மிக உகந்தது தான். சிவபெருமானும் தன் தலையில் செவ்வரளி பூ பூவை சூடி இருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் செவ்வரளி பூ செடியை முன் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். பின் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். எந்த ஒரு பயமும் வேண்டாம்.

    அடுத்தபடியாக பொன் அரளி பூவிற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பொன் அரளி பூவை நம் வீட்டில் வைப்பதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்றும், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டில் இடவசதி இல்லை என்றாலும் கூட, ஒரு சிறிய தொட்டியில் இந்த இரண்டு செடியையும் வைத்து வளர்த்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
    • உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் பூசணி ஜூஸ் சிறந்த காய்கறியாகும்.

    வெள்ளை பூசணிக்காய் போன்ற முழுக்க முழுக்க நீர்ச்சத்து இருக்கிற காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிப்பாக சில குழந்தைகள் இதை பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை. ஆனால் அதன் அற்புதமான நன்மைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள பூசணி குளிர்ச்சியான நீர்ச்சத்து பண்புகளை கொண்டுள்ளது.

    பூசணி ஜூஸில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

    பெரும்பாலான நாகரிகம் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையைக் கடைப்பிடிக்கின்றனர். பூசணி ஜூஸ் இவர்களுக்கு ஒரு மந்திர மருந்து போல் செயல்படுகிறது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குகிறது மற்றும் சிறுநீர்ப்பையின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

    இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாகவும் பூசணி பயன்படுத்தப்படுகிறது.


    மிசோரமில், லுஷே போன்ற பழங்குடியினர் கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய பூசணி ஜூஸ், சூப்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்.

    பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கூடுதல் எடையை விரைவாகக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது.

    இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், நீண்ட நேரத்திற்கு பசியை தூண்டுவதில்லை. அதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையைக் குறைக்க உதவி செய்கிறது.

    நிறைய பேருக்கு குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் உடலில் உண்டாகும் அதிகப்படியான சூட்டின் காரணமாக நிறைய உடலியல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

    இந்த உடல் சூட்டை அதிகரிப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் கூட மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அப்படி உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் பூசணி ஜூஸ் சிறந்த காய்கறியாகும். ஏனெனில் இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

    இது நீர்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், உடலில் சேரும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் விளைவை கட்டுப்படுத்தி அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

    பூசணிக்காய் ஜூஸில் கால்சியம், துத்தநாகம் (ஜிங்க்), பாஸ்பரஸ் போன்ற அனைத்து வகையாக முக்கிய ஊட்டச்சத்துக்களும், தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ள பூசணி ஜூஸ் ஆற்றல் மட்டங்களை பெரிதும் அதிகரிக்கிறது. இது உடல் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

    அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய மிகச்சிறந்த தீர்வாக இந்த பூசணிக்காய் ஜூஸ் இருக்கிறது. வயிற்றுப் பகுதியில் உண்டாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, பிற நோய்களைத் தாக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் ஊக்குவித்து, குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

    உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் இந்த பூசணிக்காய். மன அழுத்தம், மனப் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

    இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.

    அதோடு இன்சோம்னியா (insomnia) என்னும் தூக்கமின்மை மற்றும் மனப் பதட்டம் போன்ற பிரச்சினைகளைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.


    தேவையான பொருள்கள்:

    வெள்ளை பூசணி - 1 கப்

    இஞ்சி - ஒரு இன்ச் அளவு

    பூண்டு - 2 பல்

    உப்பு - சிறிதளவு

    எலுமிச்சை பழம் - 1

    தேன் - 1 ஸ்பூன்

    புதினா இலைகள் - 5

    செய்முறை:

    முதலில் பூசணிக்காயை தோல் சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பூசணி உடன் பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து பிளண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த ஜூஸை ஒரு கிளாஸில் வடிகட்டி ஊற்றி கொள்ளவும்.

    எலுமிச்சை ஜூஸ், உப்பு, தேன் மற்றும் புதினா இலைகள் உட்பட மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு கலக்கவும். பூசணி ஜூஸ் தயார். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய பலன்களைப் பெற முடியும்.

    • வறண்ட கண்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்களை எரிச்சலூட்டுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்தும்.
    • நரம்புகள் தான் நமது கண்களின் தெளிவாக பார்வைக்கு அவசியம்.

    அதிக காற்று, புகை, மற்றும் அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது நம்முடைய கண்கள் வறண்டுவிடும். முக்கியமாக தற்போது பலரும் பல மணிநேரம் செல்போன் பார்ப்பது, கணினி, அல்லது லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து பணிபுரிந்துவருவதால் கண்களில் தண்ணீர் வற்றி கண்கள் வறண்டு விடுகிறது.

    மனித உடலில் முக்கியமான பாகங்களில் ஒன்று தான் கண்.. கண்கள் இல்லையென்றால் நமக்கான வேலையைக்கூட நம்மால் செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்தை நாம் சந்திக்க நேரிடும். இதனால் தான் கண்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்..

    மற்ற நாடுகளை விட இந்தியர்களுக்குத் தான் தொற்று அல்லாத கண் பார்வை பிரச்சனை அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். இதை நாம் அலட்சியமாக விட்டுவிடும் போது தான், நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இந்நேரத்தில் தடுக்கக்கூடிய சில பொதுவான தொற்று அல்லாத கண் நோய்கள் என்னென்ன என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.


    நம்முடைய கண்களை எப்போதும் ஈரமாகவும், ஆரோக்கியமாகவும், நோய்த்தொற்று இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் கண்களில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போது கண்கள் வறட்சியமாக உலர் கண்கள் பிரச்சனையை நமக்கு ஏற்படுத்துகிறது. இதனால் வறண்ட கண்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்களை எரிச்சலூட்டுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்தும்.

    அதிக காற்று, புகை, மற்றும் அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது நம்முடைய கண்கள் வறண்டுவிடும். முக்கியமாக தற்போது பலரும் பல மணிநேரம் கணினி அல்லது லேப்டாப் முன்னிலையில் உட்கார்ந்து பணிபுரிந்துவருவதால் கண்களில் தண்ணீர் வற்றி கண்கள் ட்ரை ஆகிறது. எனவே தான் நீங்கள் வெளியில் செல்லும் போது எப்போதும் சன்கிளாஸ் அணிய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதோடு கண்கள் ட்ரை ஆவதைத்தடுப்பதற்கு வேலையின் இடையில் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

    கிளௌகோமா என்பது பார்வை நரம்புக்குத் தீங்கு விளைவிக்கும் கண் பாதிப்பாகும். நரம்புகள் தான் நமது கண்களின் தெளிவாக பார்வைக்கு அவசியம். இது நீரழிவு, கண் அதிர்ச்சி மற்றும் செயலற்ற தன்மை போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு முற்றும் போது உங்களுக்கு பார்வை இழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

    மருத்துவர்களின் கூற்றுப்படி, கிளௌகோமாவைத் தடுப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று வழக்கமான கண் பரிசோதனைகள் தான். மேலும் வழக்கமான உடற்பயிற்சி கண் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதோடு கண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டுகளை விளையாடும் போது கண்ணாடி அணிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


    வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் என்பது கண்களின் ஒரு பொதுவான கோளாறு ஆகும், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது கண்ணின் பின்பகுதியை பாதிக்கிறது. இதனால் உங்கள் எதிரில் உள்ள பொருட்களை நேரடியாகப் பார்ப்பது மிகவும் கடினம். இதோடு கண்களில் ஏற்படும் வயது தொடர்பான மாற்றங்கள் தான் கோளாறுக்கு வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் இதை முறையாக சிகிச்சை மேற்கொண்டு கண்டறியவில்லை என்றால், ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    பல்வேறு வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, வயது தொடர்பான மாகுலர் சிதைவை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இப்பிரச்சனையை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால், புகைப்பிடிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இதோடு வழக்கமான உடற்பயிற்சி, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைப் பராமரித்தல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்ற விஷயங்களை உங்களது வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இப்பிரச்சனை ஏற்படாமல் நீங்கள் தடுக்க முடியும்.


    தொற்று அல்லாத கண் பார்வை பிரச்சனைகளில் ஒன்று தான் கிட்டப்பார்வை. மரபுரீதியாக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொலைவில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியும். அதே சமயம் தூரத்தில் உள்ள பொருள்கள் மங்கலாகத் தெரியும். இதோடு இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும்.

    கிட்டப்பார்வைக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், கிட்டப்பார்வையை வளர்ப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்க நீங்கள் உங்களது அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக திரை இடைவெளிகளை எடுத்தல், டிஜிட்டல் சாதனங்களில் உங்களின் நேரத்தைக் கட்டுப்படுத்துதல், மங்கலான வெளிச்சத்தில் வேலை செய்யவோ படிக்கவோ வேண்டாம், வெளியில் நேரத்தை செலவிடுங்கள், வெளியில் செல்லும்போது சன்கிளாஸ் அணிதல், புகைப்பிடிப்பதை நிறுத்துதல், வழக்கமான கண் பரிசோதனை போன்றவற்றை நீங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    • அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.
    • குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.

    பல நாடுகளில் பல நாட்டவர்கள் உண்ணும்போது கைகளைப் பயன்படுத்துவதில்லை. வேறு உபகரணங்களைக் கொண்டே வாயில் உணவை எடுத்து வைக்கின்றனர். ஆனால் அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.

    உணவு உண்ணுதல் என்பது மனிதன் உயிர் வாழ்வதற்கான ஒரு மிக முக்கியமான வாழ்க்கை நடவடிக்கை. அதேசமயம், அது ஒரு சமூக நிலையில் ஏற்கப்படக்கூடிய முறைகளை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

    பல நபர்கள், எத்தனை வயதாகியும், சமூகத்தால் ஏற்கப்படக்கூடிய முறையில், உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றக்கூடிய நிலையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உண்ணும் முறை பார்க்கும் பலரை முகம் சுளிக்க வைக்கிறது.


    எனவே, இளமையில் கல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, குழந்தைப் பருவத்திலேயே, நாகரீகமான முறையில் உணவு உண்ணுதல் எப்படி என்பதை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

    சாப்பிடும்போது விரல்களை மட்டுமே பயன்படுத்தி உண்ணுமாறு கூற வேண்டும். சாப்பிடும்போதும், பிசையும்போதும் உள்ளங்கை வரை உணவு செல்லக்கூடாது.

    மேலும், உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, சரியான அளவில் உணவை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், தேவைக்கும் அதிகமான அளவில் உணவை எடுத்து வாயில் வைக்கும்போது, இடம் போதாமல் உணவு சிந்தும் நிலை ஏற்படுகிறது. இதைப் பிறர் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது.

    உணவை வாயில் வைத்தப் பின்னர், அதை மூடிய நிலையில் மெல்லுமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் சவக் சவக் என்ற அநாகரீகமான சத்தம் வராது.


    உண்ணும்போது, சற்று குனிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தட்டிற்கும், வாய்க்கும் இடையேயான இடைவெளி குறைந்து, உணவு தேவையற்ற இடங்களில் சிந்துவதை தவிர்க்க முடியும்.

    டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, தட்டிற்கு கீழே விரிப்பை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்ணும்போது, உங்களின் குழந்தை தேவையற்ற இடங்களில் தட்டை நகர்த்தாமல், முறையான இடத்தில் தட்டை வைத்து உண்ணப் பழகும்.

    தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ அல்லது எதையாவது படித்துக்கொண்டோ உண்பதற்கு, எந்த சூழலிலும் உங்களின் குழந்தையை அனுமதிக்க வேண்டாம்.

    குழந்தைகள் சாப்பிடும்போது அவசரப்படுத்தக்கூடாது. இது ஒரு தவறான பழக்கம்.


    டைனிங் டேபிளில் அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு, ஒரு கையை டேபிளிலேயே தட்டிற்கு அருகே வைத்துக்கொண்டு, இன்னொரு கையைப் பயன்படுத்தி உண்பதற்கும், கீழே அமர்ந்து உண்ணும்போது, இரண்டு கால்களையும் மடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து, ஒரு கையை கால்களின் மீது மடக்கி வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் சற்று குனிந்த நிலையில் இருந்து உண்பதற்கும் சொல்லித்தர வேண்டும்.

    சிறு குழந்தைகள் சாப்பிடும்போது, அவர்களின் கைகள் மற்றும் கண்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுவடைகிறது. மேலும், அதேசமயத்தில், அவர்கள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலான உண்ணும் பழக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர்.

    எதையும் உண்ணும் முன்னதாக, கைகளைக் கழுவும் பழக்கத்தை உங்களின் குழந்தை கட்டாயம் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் அனைத்திற்கும் அடிப்படை.

    • மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபடலாம்.
    • திடீர் மாரடைப்பு அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல் ஏற்படுகிறது.

    மாரடைப்பில் என்ன நடக்கும்?

    உங்கள் இதயம் எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜனின் காரணமாக நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது. கொலஸ்ட்ரால், கொழுப்பு மற்றும் பிற பொருட்களின் கலவையான பிளேக் அடுக்கு, இதய தசைகளுக்கு ஆக்ஸிஜன் மூலம் பரவும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது மாரடைப்பு ஏற்படலாம்.

    என்ன அறிகுறிகள் மாரடைப்பைக் குறிக்கின்றன?

    வழக்கமாக, மாரடைப்பு அறிகுறிகள் படிப்படியாக சில மணிநேரங்கள், நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பே உருவாகத் தொடங்கி சில காலம் நீடிக்கும். மேலும், மாரடைப்பின் போது இரத்த விநியோகம் தடைபட்ட பின்னரும் இதயம் துடிப்பதை நிறுத்தாது. மேலும், மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபடலாம்.

    மாரடைப்பின் போது சில குறிப்பிடத்தக்க அறிகுறிகள்:

    உங்கள் மார்பு அல்லது கைகளில் அழுத்தம், இறுக்கம், வலி, அழுத்துதல் அல்லது வலி உணர்வுகள், இது உங்கள் கழுத்து, தாடை அல்லது முதுகில் பரவக்கூடும்

    குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்

    மூச்சு விடுவதில் சிரமம், குளிர் வியர்வை, சோர்வு, திடீரென ஏற்படும் லேசான தலைச்சுற்றல்.


    மாரடைப்புக்குப் பிறகு உங்கள் இதயம் பாதிக்கப்படுகிறதா?

    இதயம் மிகவும் உறுதியான உறுப்பு. எனவே, தாக்குதலுக்கு ஆளான பிறகு, அதில் சில சேதம் அடைந்தாலும், மற்ற பாதி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், உங்கள் இதயம் பலவீனமான நிலைக்கு வரலாம், அதற்குப் பிறகு அதிக கவனிப்பு தேவைப்படலாம்.

    கார்டியாக் அரெஸ்டில் என்ன நடக்கும்?

    திடீரென இதய செயலிழப்பு ஏற்படும் போது திடீர் கார்டியாக் அரெஸ்ட் (SCA) ஏற்படலாம். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (அரித்மியா) காரணமாக, பம்ப் செய்யும் செயல் தொந்தரவு செய்யப்படுகிறது, மேலும் இதயத்தால் மூளை, நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை வழங்க முடியவில்லை. சில நொடிகளில், அந்த நபர் துடிப்பு இல்லாமல் மயக்கமடைந்தார். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அத்தகைய நிலை மோசமடைந்து மரணத்திற்கு வழிவகுக்கிறது.

    இது எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், இருப்பினும் இது பெரும்பாலும் வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களிடமோ அல்லது இதய நோய் உள்ளவர்களிடமோ அடிக்கடி நிகழ்கிறது. இதயத் தடுப்புக்கு மிகவும் பொதுவான காரணம் வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் ஆகும், இது மின் தூண்டுதல்கள் உங்கள் இதயத்தைத் துடிக்கச் சொல்லும்போது நிகழ்கிறது.

    கார்டியாக் அரெஸ்ட் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டும் மேலும் SCA அறிகுறிகள்:

    திடீர் இதயத் தடுப்பு அறிகுறிகள் உடனடி மற்றும் கடுமையானவை, உட்பட:


    எதிர்பாராத சரிவு, துடிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை, சுவாசம் இல்லை, மயக்கம், திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு வேறு சில அறிகுறிகளும் அறிகுறிகளும் தோன்றக்கூடும். இவை அடங்கும்:

    நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் காரணமாக பலவீனம்,

    படபடப்பு என்பது வேகமாக துடிக்கும், படபடக்கும் அல்லது இதயம் துடிக்கும் அறிகுறிகளாகும். இருப்பினும், திடீர் மாரடைப்பு அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல் ஏற்படுகிறது.

    SCAக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா?

    மருத்துவ ரீதியாக, கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகியவற்றுக்கு இடையே பரந்த வேறுபாடு இருந்தாலும் , இந்த இரண்டு நிபந்தனைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. அடிப்படையில், மாரடைப்பு என்பது மாரடைப்பின் தொடக்கமாக மாறக்கூடும், ஏனெனில் SCA மாரடைப்பிற்குப் பிறகு அல்லது ஒன்றிலிருந்து மீண்டு வரும்போது ஏற்படலாம். மாரடைப்பு என்பது மாரடைப்புக்கு ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம் என்றும் நாம் கூறலாம்.

    மாரடைப்பு தவிர, தடித்த இதய தசை, அரித்மியா, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் மற்றும் நீண்ட க்யூடி சிண்ட்ரோம் ஆகியவை திடீர் கார்டியாக் அரெஸ்ட்க்கான காரணங்களாக இருக்கலாம்.

    மாரடைப்பு அல்லது மாரடைப்பின் போது நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

    கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருந்தாலும் , அவசர சிகிச்சை நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம்:


    • அருகிலுள்ள மருத்துவ அவசரநிலையை அழைக்கவும்.

    • CPR ஐ உடனடியாக தொடங்கவும்.

    • நபருக்கு அருகில் படுக்க இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • நபரின் மார்பின் நடுவில் உங்கள் கைகளை வைக்கவும்.

    • குறைந்தது 100 முறை கீழ்நோக்கிய இயக்கத்தில் கடினமாகவும் வேகமாகவும் தள்ளுங்கள்.

    • பின்னர், மற்றொரு 100 சுருக்கங்களுக்கு கடினமாகவும் வேகமாகவும் அழுத்தவும்.

    • நீங்கள் தரையில் இருந்தால், அந்த நபரின் தலையை பின்னால் சாய்க்க அவரது தோளில் உங்கள் கைகளை வைக்கவும்.

    • தொழில்முறை அவசரநிலை வரும் வரை CPR செயல்முறையைத் தொடரவும்.

    வாழ்க்கை முறை மாற்றம், உணவு மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் மூலம், நோயாளிகள் நீண்ட காலமாக ஆரோக்கியமாக வாழலாம்.

    • உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.
    • கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.

    எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அது நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சியால் உண்டாகும் சிறந்த பலனை அடைவதற்கு நேரம் முக்கியம். அதிலும் உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.

    பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள அதிக கொழுப்பு கரைவதாகவும், இதுவே ஆண்கள் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது நிகழ்வதாக தெரியவந்துள்ளது.


    ஒவ்வொரு பாலினத்திற்கும் வேறுபடும் ஹார்மோன்கள் மற்றும் உறங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம், உணவு உண்ணும் நேரம் என அனைத்து உடல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நம் 'உடல் கடிகாரம்' ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    நல்ல ஆரோக்கியமான, சுறுசுறுப்பான 30 ஆண்கள் மற்றும் 26 பெண்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் 25 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 வாரங்கள் அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்ட்ரெச்சிங், ஓட்டம், ரெசிஸ்டன்ட் எனப்படும் எதிர்ப்பு பயிற்சி, தசையை வலுவாக்கும் பயிற்சிகள் என, பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் கண்காணிக்கப்பட்டன.


    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் ஒரு குழுவினர் காலை 8:30 மணிக்கு முன்னதாக உடற்பயிற்சி செய்தனர். மற்றொரு குழுவினர் அதே உடற்பயிற்சிகளை மாலை 6 மணி முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மேற்கொண்டனர். அனைத்து பங்கேற்பாளர்களும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுமுறையைக் கடைபிடித்தனர்.

    பங்கேற்பாளர்களின் ரத்த அழுத்தம் மற்றும் உடல் கொழுப்பின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகாலத்தில் பரிசோதித்து வந்தனர். மேலும், இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல் நெகிழ்வு தன்மை, பலம், ஏரோபிக் ஆற்றல் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டது.

    இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்பட்டுள்ளது.


    "ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு நேரம் சிறந்தது"

    "உங்களால் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியுமோ, அந்த நேரம்தான் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரமாகும். உங்களின் நேரத்திற்கு ஏற்ப உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

    வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்பும் மற்றும் தங்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயலும் பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்வதை இலக்காக வைக்க வேண்டும்.

    கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.

    எனினும், உடலின் மேல்பகுதியில் தசை பலத்தை அதிகரிக்க முயற்சிக்கும் பெண்கள் மற்றும் தங்களின் மனநிலை, உட்கொள்ளும் உணவை மேம்படுத்த விரும்பும் பெண்களும் மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.


    ஆண்கள் காலை, மாலை என எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களின் உடல்பலம் அதிகரிக்கும்.

    ஆனால், "தங்களின் இதயநலன், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) மற்றும் மனநலனை மேம்படுத்த விரும்பும் ஆண்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி சிறந்ததாக உள்ளது.

    மாலை நேர உடற்பயிற்சி வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துவதுடன், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்துகளையும் குறைக்கிறது.

    பெண்களுக்கு அதிகளவில் வயிற்றுப்பகுதியில் கொழுப்புகள் இருப்பதால், அவர்கள் காலையில் அதிகளவிலான கொழுப்பை எரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே கூறப்பட்டதுபோல உடல் கடிகாரமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

    • எள்ளில் இருக்கிற எண்ணெய் தோலுக்கு நல்ல பளபளப்பு தருது.
    • இத சரியான அளவுல நம்ம உணவுல சேர்த்துக்கிட்டு வந்தோம்னா நம்ம உடம்புக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.

    எள்ளுல இருபது சதவீதம் புரதமும் 50% எண்ணையும் 16 சதவீதம் மாப்பொருளும் இருக்கு.

    இத உடம்புக்கு சேர்த்துட்டு வந்தோம்னா அது உடலுக்கு நல்ல பலத்த கொடுக்கும். அது மட்டும் இல்லாம எள்ளுல இரும்புச்சத்து, துத்தநாகம் இதெல்லாம் அதிகமா இருக்கு.

    எள்ளில் இருக்கிற எண்ணெய் தோலுக்கு நல்ல பளபளப்பு தருது.

    அதே மாதிரி தோல்ல ஏற்படுற நோய்களான சொரி, சிரங்கு, படை மாதிரியான எல்லா நோய்களையும் எளிதா, விரைவா குணப்படுத்திடும்.

    மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் வைட்டமின் ஏ, பி போன்ற சத்துக்கள் எல்லாமே இதுல உள்ளடங்கி இருக்கு.

    இத சரியான அளவுல நம்ம உணவுல சேர்த்துக்கிட்டு வந்தோம்னா நம்ம உடம்புக்கு தேவையான பலன்கள் கிடைக்கும்.



    தேவையான பொருட்கள்:

    எள்ளு - 2 மேஜைக்கரண்டி

    வர மிளகாய் - 9

    தனியா - 1 மேஜைக்கரண்டி

    பச்சரிசி - 1மேசைக்கரண்டி

    துவரம் பருப்பு - 1மேசைக்கரண்டி

    சீரகம் - 1/2 மேஜைக்கரண்டி

    வெந்தயம் - 1/2 மேஜைக்கரண்டி

    சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு

    தக்காளி - 1

    கத்திரிக்காய் - 6

    முருங்கைக்காய் - 1

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுந்து - 1/2 தேக்கரண்டி

    கருவேப்பிலை - 2 கொத்து

    நல்லெண்ணெய் - 3 குழி கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் - 1/2 தேக்கரண்டி

    பூண்டு - 5 பல்

    ஒரு சிறிய லெமன் அளவு புளி கரைத்து கொள்ளவும்

    செய்முறை:

    முதலில் ஒரு கடாயை வைத்து அதில் வரமிளகாய், தனியா, அரிசி, துவரம்பருப்பு சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    பின் எள்ளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு வெந்தயம் உளுந்து நன்கு வதக்கி கொள்ளவும் பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    பின் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்

    நன்கு கத்தரிக் காய் முருங்கைக் காய் வேகும் வரை மூடி வைத்து கொதிக்க விட வேண்டும், கொதித்தபின் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்

    சுவையான எள்ளு குழம்பு தயார்.

    • கருஞ்சீரகத்தில் தைமோ என்ற வேதிப்பொருள் உள்ளது.
    • குறிப்பாக பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிறு உப்புசமாக காணப்பட்டு சிறுநீர் கழிப்பது போல் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

    உடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் நாம் உண்ணும் உணவே மருந்தாக உள்ளது. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வரிசையில் வெந்தயம், மிளகு, சீரகம் போன்றவற்றை தொடர்ந்து கருஞ்சீரகமும் இதில் அடங்கும்.

    ஆனால் இந்த கருஞ்சீரகத்தை அனைவராலும் எடுத்துக் கொள்ள இயலாது. அதுமட்டுமின்றி இதனை தினந்தோறும் சாப்பிடவும் கூடாது. சரியான அளவில் இதனை உட்கொள்வது மட்டுமின்றி தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் கருஞ்சீரகத்தை யாரெல்லாம் எடுக்கொள்ளலாம் யாரெல்லாம் எடுத்துக் கொள்ள கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

    கருஞ்சீரக பயன்கள்:

    கருஞ்சீரகத்தில் தைமோ என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் நமது உடலுக்கு தேவையான கால்சியம் இரும்புச்சத்து என தொடங்கி அனைத்து வித சத்துக்களும் உள்ளது. கருஞ்சீரகத்தை பாக்டீரியாக்களின் எதிரி என்றே நாம் கூறலாம். அத்தோடு ரத்தத்தை சுத்திகரிக்க மிகவும் பயன்படுகிறது. மேலும் நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவும். அதுமட்டுமின்றி புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை தடுக்கவும் பயன்படுகிறது.

    கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடலாம்:

    சர்க்கரை நோய் உள்ளவர்கள்:

    கருஞ்சீரகம் 50 கிராம்

    ஓமம் 100 கிராம்

    வெந்தயம் 1/4 கிலோ

    இவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு டீஸ்பூன் என்ற அளவில் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன் குடித்து வந்தால் சர்க்கரை முற்றிலும் குறையும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். பூச்சிக்கடியால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை 4 கிராம் என்ற அளவில் தினம்தோறும் தண்ணீரில் கலந்து ஒரு வாரத்திற்கு குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.


    குடற்புழு பிரச்சனை உள்ளவர்களும் இந்த கருஞ்சீரக தண்ணீரை குடிக்கலாம். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிறு உப்புசமாக காணப்பட்டு சிறுநீர் கழிப்பது போல் இருப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

    யாரெல்லாம் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது:

    புதிதாக திருமணமான பெண்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது. கருஞ்சீரகம் கரு உருவாகுவதை தடுக்கும் ஆற்றல் படைத்தது. எனவே குழந்தையை எதிர்நோக்கும் தம்பதியினர் இதனை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். அவர்கள் மட்டுமின்றி கருத்தரித்த பெண்களும் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    உயர்ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள கருஞ்சீரகம் உதவி புரிந்தாலும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது மேற்கொண்டு ரத்த அழுத்தம் குறைந்து பல சிக்கல்களை காண நேரிடும்.

    • ரோல் மாடலாக வேண்டும் என்றால் பெற்றோர்கள் சிலவற்றைக் கட்டாயம் குழந்தைகள் எதிரே தவிர்க்க வேண்டும்.
    • உணவு, நொறுக்குத் தீனிகளை சாப்பிடும்போது அவை தரையில் சிந்தாமல் சாப்பிட வேண்டும். பேசிக்கொண்டே சாப்பிடக் கூடாது.

    எந்தக் குழந்தையும் பிறக்கும்போது அதன் மனம் ஒரு வெள்ளை காகிதமாகவே உள்ளது. அது வளர வளர பெற்றோர் செய்யும் செயல்களே அந்த வெள்ளைக் காகிதத்தில் எழுத்துக்களாக மாறி பதிந்து அந்த குழந்தையின் நடத்தைகளாக உருவாகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் அவரவரின் பெற்றோர்களே ரோல் மாடலாக வேண்டும். அப்படி ரோல் மாடலாக வேண்டும் என்றால் பெற்றோர்கள் சிலவற்றைக் கட்டாயம் குழந்தைகள் எதிரே தவிர்க்க வேண்டும். அவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    சிலர் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்க மாட்டார்கள். உடுத்திய ஆடையை அறைக்குள் ஏதாவது ஒரு இடத்தில் கண்டபடி வீசுவார்கள். படுக்கையை விட்டு எழும்போது போர்வையை ஒழுங்காக மடித்து வைக்கமாட்டார்கள். வீட்டுக்குள் நுழையும்போது காலணிகளை ஒரே இடத்தில் கழட்டி வைக்க மாட்டார்கள். இதுபோன்ற பழக்க வழக்கங்களை பார்த்து வளரும் பிள்ளைகளும் அதனைப் பின்பற்ற தொடங்குவார்கள் என்பதை கவனத்தில் வைத்து இவை போன்ற ஒழுங்கற்ற செயல்களை செய்யக்கூடாது.



    உணவு, நொறுக்குத் தீனிகளை சாப்பிடும்போது அவை தரையில் சிந்தாமல் சாப்பிட வேண்டும். பேசிக்கொண்டே சாப்பிடக் கூடாது. வீட்டில் செய்யும் ஊட்டச்சத்தான உணவுப் பொருட்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் முதலில் பெற்றோர் தவிர்த்தால்தான் குழந்தைகளும் ஆரோக்கியமான வகையில் வளருவார்கள்.

    மன அழுத்தத்தில் இருக்கும் போது சில பெற்றோர்கள் நகம் கடிப்பது, அறையைக் தாழிட்டுக் கொள்வது போன்றவற்றை செய்வார்கள். இவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். நகம் கடிப்பது என்பது ஆரோக்கியமற்ற செயல் மற்றும் மற்றவர்கள் பார்வையில் அருவெறுப்பான செயலாகும். இதேபோல் அறைக்கதவை தாழிட்டுக் கொள்வது பின்னாளில் விபரீதத்தைத் தரும்.

    குழந்தைகள் முன்பு பெற்றோர் உச்சரிக்கும் வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை. குழந்தைகள் கற்றுக்கொள்வது பெற்றோர் பேசுவதைப் பார்த்துத்தான். ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றுக் கொள்வதற்கு குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை குழந்தைகள் கவனிப்பார்கள். அந்த வார்த்தைகளே அவர்களின் மனதில் பதியும். ஆகவே, குழந்தைகள் முன்பு பேசும்போது கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்து கத்திப் பேசாமல் அமைதியான முறையில் பேச பெற்றோர் பழக வேண்டும்.


    மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்யக்கூடாது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களையும் அதே போன்ற திறன்களுடன் வளர்க்க நினைக்கிறார்கள். இப்படிச் செய்யும்போது குழந்தைகள் தங்களுடைய தனித்தன்மையை கண்டறிய முடியாமல் போய்விடும். நம் குழந்தைகளின் அறிவுத்திறனை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் அவர்களிடம் என்ன திறன் இருக்கிறதோ அதை அப்படியே ஏற்று அதை ஊக்குவிக்கப் பழக வேண்டும். இந்தப் போட்டி மனப்பான்மையால் ஏற்படும் மன அழுத்தத்தால் வெற்றி பெற முடியாமல் போகும் குழந்தைகளுக்கு விரக்தி மற்றும் மனச்சோர்வு உண்டாகும். அதனால் தயவு செய்து ஒப்பீடு செய்ய வேண்டாம்.

    இவை போன்று காலை எழுந்தவுடன் பல் துலக்காமல் காபி குடிப்பது, மின் சாதனங்களை தேவையின்றி ஓடவிடுவது, புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள், தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிப்பது போன்ற பல செயல்களை செய்யாமல் இருக்கும் பெற்றோர்களே பிள்ளைகளுக்கு நல்ல ரோல் மாடலாக முடியும்.

    • சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
    • கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம்.

    ஆண்கள், பெண்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் சந்திக்கும் ஒரு தொல்லை, முடி உதிர்வு. குறிப்பாக, இந்த சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்தவகையில், கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த கேரட் ஹேர் மாஸ்கை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள்.

    உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால்தான், தலைமுடி ஆரோக்கியத்தை இழக்கும். எனவே, அதற்கேற்றவாரு செயற்கை பொருட்களைப் பயன்படுத்தாமல், நாம் வீட்டில் இருந்தப்படியே கூந்தலை கவனிப்பது மிகவும் அவசியம். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் தலை முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இது உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நல்ல முடி வளர்ச்சியைத் தூண்டவும் கேரட் உதவும். ஒருவேளை உங்களுக்கு கேரட் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம். இது அவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.


    கேரட் மாஸ்க் செய்ய தேவையானப் பொருட்கள்:

    கேரட் – 1 அல்லது 2

    வாழைப்பழம் – 1

    தயிர் – மூன்று டேபிள் ஸ்பூன்

    பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

    தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை:

    முதலில் கேரட்டுகளின் தோல்களை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் வாழைப்பழத்தை உரித்து, அதனையும் ஜாரில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும். இறுதியாக அந்தக் கலவையில், தயிர் மற்றும் பாதாம் சேர்த்து தலை முடியில் நன்றாக தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க வேண்டும். கோடைக்காலம் முழுவதும் வாரம் ஒருமுறை தொடர்ந்து இதனை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

    இந்த கேரட் மாஸ்க், உங்கள் முடி வறட்சி ஆகாமல் தடுக்கும். அதேபோல் உச்சந்தலையில் வெப்பத்தால் ஏற்படும் வறட்சியை போக்கி, பொடுகை நீக்கும். மேலும் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதோடு, முடி உதிராமாலும் பாதுகாக்கும்.

    ×