search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் உடன் வைக்கப்பட்டு இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஐபோன் 16 சீரிஸ் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

    அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் டம்மி யூனிட் புகைப்படம் மூலம் புதிய போன் மாடலின் விவரங்கள் ஓரளவுக்கு தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் இதுவரை வெளியான ஐபோன்களில் மிகவும் பெரியதாக இருக்கும் என்று தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் டம்மி யூனிட் புகைப்படத்தின் படி, இந்த மாடலில் 6.9 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோன் சீரிசில் பெசல்களை கணிசமான அளவுக்கு குறைக்க ஆப்பிள் நிறுவனம் பார்டர் ரிடக்ஷன் ஸ்டிரக்ச்சர் (பி.ஆர்.எஸ்.) எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    இந்த தொழில்நுட்பம் ஐபோன்களின் பெசல்களை முடிந்தவரை மெல்லியதாக மாற்றும். புதிய பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் அளவீடுகளில் எவ்வித மாற்றமும் இன்றி பெசல்களை குறைக்க உதவும் என்று தெரிகிறது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா சென்சார் தற்போதைய ஐபோனில் இருப்பதை விட அளவில் சற்று உயரமாக காட்சியளிக்கிறது.

    அந்த வகையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் 1/1.14 இன்ச் அளவு கொண்ட சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1/1.28 இன்ச் சென்சாரை விட பெரியதாக இருக்கும். 

    • போட் ஏர்டோப்ஸ் 800 மாடல் நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
    • ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்கள் பயன்படுத்தலாம்.

    போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் 800 இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்பட்ஸ் ட்ரூ வயர்லெஸ் டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இதில் 10 மில்லிமீட்டர் அளவில் டைட்டானியம் டிரைவர்கள் உள்ளன.

    இந்த இயர்பட்ஸ் குவாட் மைக் ENx தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அழைப்புகளின் போது மேம்பட்ட அனுபவத்தை கொடுக்கும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டு ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 100 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

     


    இத்துடன் 50ms வரை லோ லேடன்சி மோட், வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி மற்றும் அடாப்டிவ் EQ மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. சார்ஜிங் செய்ய யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் மாடலுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் 800 மாடல் இன்டர்ஸ்டெல்லார் புளூ, இன்டர்ஸ்டெல்லார் வைட், இன்டர்ஸ்டெல்லார் கிரீன் மற்றும் இன்டர்ஸ்டெல்லார் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 17 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான் வலைதளத்தில் மட்டுமே நடைபெற இருக்கிறது.

    • சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக்.
    • ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம்.

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ப்ளிப் போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வாடிக்கையான விஷயம் தான். அந்த வரிசையில் சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

    இதில் ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. மேலும், இதே ஸ்மார்ட்போன் 3C சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     


    சீன வலைதளமான வெய்போவில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனின் பேக் பேனலில் கவர் ஸ்கிரீன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் இரட்டை கேமரா மாட்யுல், இரு எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது. மேலும், லெக்யா லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    புதிய மிக்ஸ் ப்ளிப் போன் கோல்டன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் கீழ்புறத்தில் சியோமி லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2405CPX3DC மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சம் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி மிக்ஸ் ப்ளிப் போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, ஆம்னிவிஷன் OV60A 1/2.8 இன்ச் சென்சார், 2x ஆப்டிக்கல் ஜூம் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த மாடலில் 32MP செல்ஃபி கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மிகமெல்லிய தோற்றம், வீகன் லெதர் ஃபினிஷ் மற்றும் பில்ட்-இன் ஸ்டைலஸ் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் ஸ்டைலஸ் கொண்டு பயனர்கள் குறிப்பு எடுத்தல், டூடுல் உருவாக்குதல், புகைப்படங்களை எடிட் செய்தல் என ஏராளமான அம்சங்களை இயக்க முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் Full HD+ pOLED 120Hz ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அட்ரினோ GPU, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மை யு.எக்ஸ். ஓ.எஸ். மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி மாடல் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் காரமெல் லேட் மற்றும் ஸ்கார்லெட் வேவ் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 450 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • எட்ஜ் 50 அல்ட்ரா, எட்ஜ் 50 ப்ரோ மாடல்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம்.
    • இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய எட்ஜ் 50 பியூஷன் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஐரோப்பாவில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் எட்ஜ் 50 ப்ரோ மாடல்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

    அந்த வரிசையில், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் ஸ்மார்ட்போன் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்திய சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் ஸ்மார்ட்போன் மே 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் மோட்டோரோலா இந்தியா அதிகாகரப்பூர்வ சமூக வலைதள அக்கவுண்ட்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுதவிர ப்ளிப்கார்ட் தளத்திலும் டீசர்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் ஸ்மார்ட்போன் பாரஸ்ட் புளூ, ஹாட் பின்க் மற்றும் மார்ஷ்மல்லோ புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹெல்லோ யு.ஐ. வழங்கப்படுகிறது.

    இத்துடன் 6.7 இன்ச் கர்வ்டு pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம், இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. 

    • புதிய ஐபேட் ப்ரோ மாடல் இருவித அளவுகளில் கிடைக்கிறது.
    • ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டு அறிமுகம்.

    முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் மூலம் ஆப்பிள் முதல்முறையாக OLED டிஸ்ப்ளேக்களை வழங்கியுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடல் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட புதிய M4 சிப்செட் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பிராசஸர் ஆகும். இது முந்தைய பிராசஸர்களை விட அதிவேக செயல்திறன் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

     


    மென்பொருள் சார்ந்த எடிட்டிங் அம்சங்களை கொண்டிருக்கும் புதிய ஐபேட் ப்ரோ, மேம்பட்ட ஆடியோ எடிட்டிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் தலைசிறந்த கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கேமரா சென்சார் லேண்ட்ஸ்கேப் பக்கமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் ப்ரோவுடன் மேஜிக் கீபோர்டும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் கீபோர்டு மாடல் புதிய ஐபேட் ப்ரோவுடன் ஒற்றுப்போகும் வகையில் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    முற்றிலும் புதிய ஆப்பிள் பென்சில் - ஆப்பிள் பென்சில் ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் ஏராளமான புதிய வசதிகளை கொண்டிருக்கிறது. மேம்பட்ட ஐபேட் ப்ரோ 256 ஜி.பி., 512 ஜி.பி., 1 டி.பி. மற்றும் 2 டி.பி. என நான்குவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    • ஐபேட் ஏர் மாடல் இரண்டு அளவுகளில் கிடைக்கிறது.
    • ஐபேட் ஏர் அதிகபட்சம் 1 டி.பி. மெமரி கொண்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது லெட் லூஸ் (Let Loose) நிகழ்ச்சியில் முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆப்பிள் வரலாற்றில் முதல்முறையாக ஐபேட் ஏர் மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.

     

    நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன. 

    • அளவில் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
    • சுவாரஸ்யமான ஹிஞ்ச் டிசைனை உருவாக்கியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கி வருவது தொடர்பான தகவல்கள் பல ஆண்டுகளாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. மடிக்கக்கூடிய ஐபோன் தொடர்பாக இதுவரை ஏராளமான புகைப்படங்கள், ரெண்டர்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இது தொடர்பாக ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    சமீபத்தில் வெளியான தகவல்களிலும், ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்பட்டது. மேலும், இதற்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய சாதனம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இது அளவில் பெரியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமை சார்ந்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் கிளாம்ஷெல் டிசைன் கொண்ட புதிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமை விவரங்கள் மே 2 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

    காப்புரிமைகளின் படி ஆப்பிள் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய சாதனத்தில் சுவாரஸ்யமான ஹிஞ்ச் டிசைனை உருவாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. புதிய டிசைனின் படி புதுவித ஹிஞ்ச் காரணமாக இந்த சாதனம் தற்போது விற்பனை செய்யப்படும் மடிக்கக்கூடிய சாதனங்களை விட தடிமனாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இதன் காரணமாக ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், ஆப்பிள் நிறுவனம் மடிக்ககூடிய ஐபோன் மட்டுமின்றி மடிக்க்கூடிய ஐபேட் மாடலையும் உருவாக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. 

    • இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
    • தோற்றத்தில் சீன வேரியண்டை போன்றே காட்சியளிக்கும்.

    ஐகூ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தனது Z9x 5ஜி ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதை தொடர்ந்து இதன் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஐகூ Z9x 5ஜி மாடல் விவோ T3x 5ஜி ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது. இதன் டிசைன் மற்றும் தோற்றம் அதன் சீன வேரியண்டை போன்றே காட்சியளிக்கும்.


     

    சீன சந்தையில் கிடைக்கும் ஐகூ Z9x 5ஜி மாடலில் 6.72 இன்ச் 120Hz LCD ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒரிஜின் ஒ.எஸ். 4 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது.

    முன்னதாக இதேபோன்ற அம்சங்கள் கொண்ட விவோ T3x 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    • இந்த இயர்பட்ஸ் 50 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
    • இந்த இயர்பட்ஸ் 40ms வரை லோ லேடன்சி மோட் கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்- "பாப் பட்ஸ்" பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் 4 ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் மாடலை நாய்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

    புதிய நாய்ஸ் பாப் பட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள், குவாட் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அழைப்புகளின் போது மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கிறது.

    மேலும் இன்ஸ்டா சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 150 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். இத்துடன் ஹைப்பர் சின்க் கனெக்ஷன் தொழில்நுட்பம், 40ms வரை லோ லேடன்சி மோட், IPX5 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    நாய்ஸ் பாப் பட்ஸ் அம்சங்கள்:

    10mm டிரைவர்கள்

    ப்ளூடூத் 5.3

    டச் கண்ட்ரோல்

    அல்ட்ரா லோ லேடன்சி

    குவாட் மைக் மற்றும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்

    40 மணி நேரத்திற்கு பிளேபைக் டைம்

    இன்ஸ்டா சார்ஜ் தொழில்நுட்பம்

    ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம்

    IPX5 ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்

    புதிய நாய்ஸ் பாப் பட்ஸ் மாடல் மூன் பாப், ஸ்டீல் பாப், ஃபாரெஸ்ட் பாப் மற்றும் லிலக் பாப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 ஆகும். விற்பனை நாய்ஸ் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • மூன்று கேமரா சென்சார்கள் கொண்டிருக்கும்.
    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. டீசரின் படி புதிய ஸ்மார்ட்போன் லெதர் பேக் பேனல் கொண்டிருக்கும் என்றும் மூன்று கேமரா சென்சார்கள் கொண்டிருக்கும் என்றும் உறுதியாகி இருக்கிறது.

    இத்துடன் புதிய கேலக்ஸி F55 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி F55 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.



    டீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியான தகவல்களில் கேலக்ஸி F55 விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி M55 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    விலையை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி F55 மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ. 26 ஆயிரத்து 999 என்று துவங்கும் என்றும் இதன் டாப் எண்ட் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்படலாம்.

    • ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
    • 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சியோமி ஸ்மார்ட் லிவிங் நிகழ்ச்சியில் அந்நிறுவனம் ரெட்மி பேட் SE மாடலை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மாடலில் 11 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ள 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     


    கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி பேட் SE 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் ரெட்மி பேட் SE மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த டேப்லெட் கிராபைட் கிரே மற்றும் லாவெண்டர் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி துவங்குகிறது.

    ×