search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    • இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை.
    • இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது.

    இந்தி திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகாபடுகோனே கர்ப்பம் அடைந்ததாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

     இந்தநிலையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருவரது புகைப்படமும் இல்லை. இதை தொடர்ந்து இருவருக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இது பற்றி அவரது தரப்பு கூறுகையில்:-

    ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ஒரு அமைதியான பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். மற்றபடி அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    வாழ்க்கையில் இப்போது அவர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் மிகவும் அழகாக வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையை எதிர்நோக்கி இந்த தருணத்தில் காத்திருக்கின்றனர் என்றனர்.

    இந்நிலையில் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் ஒரு சுற்றுலாவில் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    • புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
    • துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன.

    இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

    அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

    சமீபத்தில் தான் படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனைத்தொடர்ந்து, பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்திற்காக புதிய வகை துப்பாக்கியின் புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படமும் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமல் மா.பொ.சி. எனும் படத்திலும் நடித்துள்ளார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    விமல் நடிக்கும் 'போகுமிடம் வெகுதூரமில்லை' ஃபர்ஸ்ட்-லுக் வெளியானது. பசங்க, களவாணி திரைப்படம் மூலம் மக்களை கவர்ந்தார் நடிகர் விமல்.

    தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் கில்லி, கிரீடம் போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்த விமல், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    மீனாட்சி சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் விமல் நடித்த அப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

    விமல் நடித்த வாகை சூடவா திரைப்படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற படங்களில் அதிகம் நடித்த ஒரே தமிழ் நடிகர் விமல். அவர் நேரடியாக தேசிய விருதை பெறவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் மதிப்புமிக்க தேசிய விருதை பெற்றுள்ளது.

    கிட்டதட்ட 3 ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்துவந்த விமல், அதன் பிறகு வெப் சீரிசிலும் நடித்தார். இதற்கிடையில் நடிகர் விமல், போஸ் வெங்கட் இயக்கும் மா.பொ.சி. எனும் படத்திலும் நடித்துள்ளார்.

    இதனையடுத்து, விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் `போகுமிடம் வெகுதூரமில்லை'என்ற திரைப்படம் உருவாகிறது. மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    சமூக அக்கறை கொண்ட பிரபல இயக்குனர் தன் ஒரு சில படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தாராம். இவரின் படங்கள் பல விருதுகளையும் குவித்ததாம். இவ்வாறு திரையுலகில் புகழை தன் வசம் கொண்டுள்ள இயக்குனர் தன் படத்தில் நடிக்க வந்த நடிகையை வலுக்கட்டாயமாக படுக்கையறைக்கு அழைத்தாராம்.

    நடிகை மறுத்தும் வந்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாராம். இதனால் பயந்து போன நடிகை படப்பிடிப்புக்கு வந்த ஒரே வாரத்தில் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகை இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என்றும் கூறிவிட்டாராம்.

    தன் காமெடியால் பிரபலமான முன்னணி நடிகர் ஒருவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். ஊர், உலகத்தில் நல்லவர் என்று பெயர் எடுத்த அந்த நடிகர் தன் நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளாராம். இதை கண்டுபிடித்த அந்த நண்பர் இனிமேல் என் முகத்திலேயே முழிக்காதீங்கனு நடிகரை அடித்து அனுப்பியுள்ளார். இந்த விஷய்ம் தெரிந்த ரசிகர்கள் இவர போய் நல்லவருன்னு நம்பிட்டு இருந்தோமே என்று தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்.

    பிரபல நடிகர் ஒருவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம். இவர் மீது திரைப்பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிக மதிப்பு உள்ளதாம். ஆனால், இந்த நடிகர் தன் மகளாக நினைக்க கூடிய நண்பரின் மகளை காதலிப்பதாக கூறி வெளிநாட்டிற்கு டேட்டிங்கிற்கு அழைத்து சென்று ஏமாற்றி விட்டாராம். இந்த செய்தி தான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

    பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட இசை வெளியீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியை குறிவைத்த நடிகர் மேடையிலேயே அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டாராம். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக நடிகர்கள் கொந்தளித்து பிரபல நடிகரை மன்னிப்பு கேட்க வற்புறுத்தினார்களாம். இந்த விஷயம் பெரிய சர்ச்சையாகிவிடக் கூடாதே என்று எண்ணிய நடிகர் மேடையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாராம்.

    திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறாராம். இசை என்றாலே அந்த பிரபலத்தை தேடி பலர் செல்ல நண்பர் ஒருவரும் தன் படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டாராம். ஆனால், இசையமைப்பாளரோ புகழ் போதையில் அதலாம் செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம்.

    இசையமைப்பாளர் ஏன் இப்படி சொன்னார் என்று யோசித்த நண்பருக்கு அதற்கு பிறகு தான் தெரிந்ததாம் இந்த செயலுக்கு பின்னால் பெரிய தலைகளின் தலையீடு உள்ளது என்று. இதனால் மனம் வெறுத்த நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாராம்.

    சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை ஒரு சில படங்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினாராம். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறாராம். இதனால் ரசிகர்கள் பலர் நடிகையிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அது சர்ச்சையாகியும் உள்ளதாம்.

    இப்படி பரபரப்பாக சுற்றும் நடிகை ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றாராம். அங்கு இயக்குனர் நடிகையை பார்த்ததும் படுக்கையறைக்கு அழைக்கவே பயந்து போன நடிகை விட்டா போதும் சாமி என்று அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடிவிட்டாராம். 

    பிரபல இயக்குனர் முன்னணி நடிகரின் படத்தை இயக்கி வந்தாராம். இந்த படத்தில் கவர்ச்சி நடிகை கதாநாயகியாக கமிட்டானாராம். படப்பிடிப்புக்கு நடுவே கதாநாயகிக்கு ரூட் விட்ட இயக்குனர் அவர் மீது ஆசை கொண்டாராம். ஆனால் அதை நேராக சொல்ல தைரியம் இல்லாமல் தன் செயல்களில் காட்டி வந்தாராம்.

    ஒரு நாள் இயக்குனரும், கதாநாயகியும் பட விழாவில் கலந்து கொண்டிருக்கும்போது அனைவருக்கும் முன்னாள் இயக்குனர், கதாநாயகிக்கு பசக் என்று முத்தம் கொடுத்துவிட்டாராம். இதனால் நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாராம்.

    பிரபல தொகுப்பாளினி பல முன்னணி நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாராம். அப்போது நடிகர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களுடன் பார்ட்டி, பப் என்று சுற்றி வந்தாராம். ஒரு நாள் முன்னணி நடிகருடன் பார்ட்டிக்கு சென்ற நடிகை தலைக்கேறும் அளவிற்கு குடித்துவிட்டு பார்க்கிங்கில் மயங்கி கிடந்தாராம்.

    இதனை பார்த்த அந்த முன்னணி நடிகர் தனக்கு தேவையானதை முடித்துவிட்டு நடிகையை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டாராம். அதன்பின் வந்த தொகுப்பாளினியின் நண்பர்கள் அவரை அழைத்து சென்றார்களாம்.

    தமிழ் திரையுலகின் இளம் நடிகை பட வாய்ப்பு தேடி அலைந்தாராம். அப்போது தயாரிப்பாளர் ஒருவரை அணுகிய நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அந்த தயாரிப்பாளர் ஒரு நாள் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கண்டீசன் போட்டாராம். இதை கேட்ட நடிகை எதுனாலும் என் மேனேஜரிடம் கூறுங்கள் என்று தவிர்த்துவிட்டாராம். ஆனால், அந்த தயாரிப்பாளர் தொடர்ந்து நடிகையை தொல்லை செய்யவே நடிகை அந்த படத்தை வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

    ×