search icon
என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • தற்போது அணையில் 17.68 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர ஏராளமான கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் பருவமழையை எதிர்பார்த்து பொதுமக்கள், விவசாயிகள் காத்து உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 822 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1120 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    மேலும் அணையின் நீர்மட்டம் 49.79 அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் 17.68 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 5-வது நாளாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், கரியகோவில், நத்தகரை, சங்ககிரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது.

    குறிப்பாக ஆத்தூரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை 2 மணி வரை கன மழையாக கொட்டியது. 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது.

    இதே போல நத்தக்கரை சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய சாரல் மழை இன்று காலையிலும் தூறலாக நீடித்தது.

    மழையை தொடர்ந்து சேலம் மநாகர் மற்றும் புறநகர் பகுதிகளில குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர். மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 96.4 மி.மீ. மழை பெய்துள்ளது. நத்தக்கரை-31, கரியகோவில்-26, சங்ககிரி-20, சேலம்-3.7, ஏற்காடு-4.4, ஆனைமடுவு-19, கெங்கவல்லி-6, தம்மம்படடி-10, ஏத்தாப்பூர்-2, வீரகனூர்-9, எடப்பாடி-4, மேட்டூர்-18.2, ஓமலூர்-4.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 253.9 மி.மீ. மழை பெய்துள்ளது., இன்று காலையும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 50.57அடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்மட்டம் 50.16 அடியாக சரிந்தது.
    • இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    சேலம்:

    தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று 126 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 207 கன அடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 50.57அடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்மட்டம் 50.16 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

    • மாநில தலைவர்செல்வப்பெருந்தகை , முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
    • நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். அவர் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக இன்று காலை தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு சேலம் ஒருங்கிணைந்த மாநகர் மாவட்டம், கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இரும்பாலை ரோடு ரெட்டிபட்டி பி.சி.சி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி கே.வீ.தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    மேலும் கட்சி வளர்ச்சி குறித்து கேட்டறிந்து காங்கிரஸ் தலைவர் ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பாஸ்கர் (மாநகர் ), அர்த்தனாரி (கிழக்கு), ஜெயக்குமார் (மேற்கு) ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இதில் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    • சங்ககிரி, சேலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது
    • ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பின்னர் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து பகல் 1 மணி வரை வெயில் அடிப்பதும், பின்னர் 2 மணியளவில் மழை பெய்வதும் வாடிக்கையாக உள்ளது . 4-வது நாளாக நேற்றும் பகல் 1 மணி வரை வெயில் அடித்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது . குறிப்பாக ஏத்தாப்பூர், சங்ககிரி, சேலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது .

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்று பெய்த மழையால் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இரவிலும் இந்த குளிர் நீடித்தது. இதனால் பொது மக்ககள் போர்வையை போர்த்தியபடியே தூங்கினர். மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரையும் தூறலாக நீடித்தது. இதனால் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் குளிரில் தவித்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக நேற்று ஏத்தாப்பூரில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி 23, சேலம் மாநகர் 5.4, ஏற்காடு 3.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் சேலம் மாநகரில் மழை தூறிய படியே இருந்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    • சங்ககிரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    ஈரோடு பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில் ராஜா. இவர் இன்று ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 22 பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி சென்று கொண்டிருந்தார்.

    சங்ககிரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தாறுமாறாக ஓடிய பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. பேருந்து ஓட்டுநர் செந்தில் ராஜாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகின. பேருந்தில் பயணம் செய்த 22 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பேருந்த ரோட்டில் தாறுமாறாக வந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது.
    • மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், பெரமனூர், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சேலம் சாலையில் வி.பி.எஸ். தியேட்டர் அருகே வேப்ப மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    மின் வாரியத்தினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வேரோடு சாய்ந்து கிடந்த வேப்பமரத்தை அறுத்து பொக்லைன் உதவியுடன் அகற்றி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஏற்காட்டில் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை 2 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கார் மற்றும் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டிற்கு வருகிறார்கள். இதனால் ஏற்காட்டில் அண்ணா பூங்கா, மான் பூங்கா, படகு குழாம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன்கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்காட்டில் தற்போது கடும் குளிர் நிலவுவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ரசித்து வருகிறார்கள்.

    ஏற்காட்டில் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இதனால் கடும் குளிர்ச்சியுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 26 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.1, கரியகோவில் 3, சேலம் 3.1 என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. மோகனூர் பகுதியில் நேற்று மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை கன மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. அதேபோல் ஆண்டகலுார் கேட், கவுண்டம்பாளையம், அத்தனுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. ராசிபுரத்தில் 30 நிமிடம் மழை பெய்தது.

    அதேபோல், பச்சுடையாம்பாளைம், பேளுக்குறிச்சி, மூலப்பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்று பலமாக அடித்ததால் சாரல் மழை மட்டுமே பெய்தது. மோகனூரில் 15 மிமீ, கொல்லிமலையில் 5 மிமீ, பரமத்திவேலூரில் 1 மிமீ என மாவட்டத்தில் 21 மிமீ மழை பெய்தது. இந்த மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை உழவுக்கு வசதியாக மழை பெய்துள்ளதால், இன்றிலிருந்து உழவு பணியை தொடங்க வாய்ப்புள்ளது.

    • சேலம் மாநகரில் 1 மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது.
    • இனி வரும் நாட்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதில் கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக சேலத்தில் 108 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்ததுடன் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மதியம் வரை வெயில் வாட்டிய நிலையில் பின்னர் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காடையாம்பட்டி, ஏற்காடு, சேலம் மாநகர் உள்பட பல பகுதிகளில் நேற்று கன மழை கொட்டியது.

    ஏற்காட்டில் 1½ மணி நேரத்திற்கும் மேல் கொட்டிய கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில தண்ணீர் தேங்கியது. ஏற்காட்டில் பெய்த மழையால் இன்றும் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் திடீரென பெய்த கன மழையால் ஏற்காட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேலம் மாநகரில் நேற்று மதியம் 1 மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது. இதனால் கிச்சிப்பாளையம் நாராயண நகர், தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை ஜெயா தியேட்டர், அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி, 4 ரோடு, 5 ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் , பெரமனூர் உள்பட பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் பல பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் தவித்தனர்.

    இதே போல தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கன மழை கொட்டியது. இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 17.4, சேலம் 12.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 64 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கடந்த சில நாட்களாக வெப்பத்தில் தவித்த மக்கள் தற்போது ரம்மியமான சூழல் நிலவுவதால் நிம்மதியாக தூங்கினர். மேலும் இனி வரும் நாட்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    • அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சேலம் சமூர் ஆர்வலர் புகாரின் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சமூக ஆர்வலர் வழக்கு தொடரப்படுகிறது.

    சேலம் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் அளித்த புகாரின்பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர, அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.

    அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    தொடர்ந்து, அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தி.மு.கவின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல, சோதனை.
    • சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.

    சேலம்:

    அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பிறந்த வாழ்த்து தெரிவித்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொது செயலாளராக எப்போதுமே எடப்பாடி பழனிசாமி தான். இன்றும், என்றும் எப்போதும் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அதில் எந்த மாற்றமும் இல்லை தி.மு.கவின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல, சோதனை மின் தட்டுப்பாட்டினை சீர் செய்யாமல் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.
    • மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலும் கொளுத்தி வருவதால், பொதுமக்கள் யாரும் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவானது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை அனலாக கொளுத்தியது. இரவிலும் காற்று குறைந்து வெப்ப அலை வீசியது. இதனால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று 1.30 மணி அளவில் இடியுடன் கூடிய கன மழை பெய்த தொடங்கியது. இந்த மழை மதியம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. கன மழையால் சேலம் 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புறநகர் பகுதிகளான எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி, தேவூர், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, அரசிராமணி, கல்வடங்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் காற்றினால் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தது.

    ஏற்காடு, ஏற்காடு அடிவாரம், கோரிமேடு, ஓமலூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது.

    பல நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. வெப்ப சலனம் நீங்கி இரவில் வீடுகளில் குளிர்ச்சி நிலவியது.

    மேட்டூரில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் மாலை 3 மணிக்கு மேட்டூர், ஆர்.எஸ்.புரம், பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் உள்ள 60 ஆண்டு பழமையான பெரிய வேப்பமரம் ஒன்று சாய்ந்து சாலையில் சென்ற அரசு பஸ் மீது விழுந்தது. இந்த பஸ் சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஆகும்.

    மரம் சாய்ந்து விழுந்ததில் பஸ்சின் முன்புற கண்ணாடிகள் உடைந்தன. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். சாலையோரம் மின் கம்பத்தில் உள்ள மின் கம்பி மீதும் வேப்பமர கிளைகள் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    நடுரோட்டில் பஸ்சின் மீது இந்த வேப்பம் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து சேலம், தர்மபுரி செல்லும் வாகனங்கள் தங்கமாபுரி பட்டணம், சிட்கோ, கருமலைக்கூடல் வழியே உள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேட்டூர் தீயணைப்பு குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர். ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ராசிபுரம், புதுச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல் குமாரபாளையத்தில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் குமாரபாளையம் நகரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதிகளான எம்.ஜி.ஆர். நகர், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், சீராம்பாளையம், ஆல ங்காட்டு வலசு, கல்லாங்காடு வலசு, சத்யா நகர், தட்டான் குட்டை, வேமன் காட்டு வலசு, வளையக்காரனூர், வட்டமலை, சடைய ம்பாளையம், சாமிய ம்பாளையம், கத்தேரி மற்றும் புளியம்பட்டி உள்பட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்ததையொட்டி பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையினால் குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்திற்கு எதிரே இருந்த நாகராஜன்- லட்சுமி தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர். பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நகரில் மின்சாரம் தடைபட்டது. 

    • பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

    சேலம்:

    முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.


    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முதலே தொண்டர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சால்வை, பூங்கொத்து உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து இன்று காலை முதலே எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள், திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியில் அ.தி.மு.க.தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    தொண்டர்கள் கொண்டு வந்த கேக்குகளை எடப்பாடி பழனிசாமி வெட்டினார். அவருக்கு கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்து மகிழ்ந்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர்.


    எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் எம்.எல்.ஏ., டாக்டர் சி விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் சோமசுந்தரம், மாதவரம் மூர்த்தி, ரவி எம்.எல்.ஏ., சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூ.சி.கே.மோகன், ராணிபேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் சசிரேகா, ஆவடி குமார், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் புரசை வி.எஸ்.பாபு, பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவராஜ், வர்த்தக அணி இணைச் செயலாளர் பன்னீர் செல்வம், மாணவரணி துணைச் செயலாளர் சல்மான் ஜாவித், திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் ஜாவித் அஹமத், அண்ணா தொழிற் சங்க பேரவை இணைச் செயலாளர் சூரிய மூர்த்தி, மாணவரணி துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் மணிமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர் செல்வம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வீரபாண்டியன், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், மாநகர போக்குவரத்து தெற்கு மண்டல அண்ணா தொழிற் சங்க செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், ஆறுமுகம் என்கிற சின்னையன், வக்கீல் சிம்லா முத்துசோழன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மகாபலிபுரம் சேர்மன் ராகவன் எடப்பாடி பழனிசாமி 70 வது பிறந்தநாளையொட்டி 70 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக் கொண்டுவந்தார். இதேபோல் மேச்சேரி கிழக்கு பேரவை செயலாளர் ராஜாவும் 70 கிலோவில் பிரம்மாண்ட கேக் கொண்டுவந்திருந்தார். இதே போல் மேச்சேரி பேரூர் செயலாளர் சி.ஜெ.குமார் 70 கிலோவில் பிரம்மாண்ட கேக்குள் கொண்டு வந்திருந்தனர். இந்த கேக்குகளை எடப்பாடி பழனிசாமி வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.

    ×