search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை செல்வன்"

    கொடநாடு விவகாரத்தியில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சிக்க வைக்க தி.மு.க. நடத்திய சதி அம்பலமாகியுள்ளதாக வைகைசெல்வன் தெரிவித்துள்ளார். #EdappdiPalaniswami #KodanadEstate
    சென்னை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும், துணை முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ். மீதும் களங்கம் சுமத்தும் நோக்கில், தி.மு.க.வின் அரசியல் பின்னணியோடு, கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில், தெகல்கா பத்திரிகை திட்டமிட்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டது.

    தற்போது, அந்த கும்பல் வெட்கித் தலை குனியும் வகையில், கொடநாடு குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட இரு குற்றவாளிகளின் சதித்திட்டத்தோடு அரங்கேற்றிய உரையாடல்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்துள்ளன.



    நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் மீது களங்கம் சுமத்தும், தி.மு.க.வின் கபட நாடகங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

    கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு கிரிமினல் குற்றவாளிகளும், கேரளாவில் உள்ள ஒருவரை சந்தித்து தாங்கள் தப்பிப்பதற்கு வழி சொல்ல வேண்டும் என உதவி கேட்பதும், அதற்கு அந்த நபர், இருவரிடமும், தமிழக முதல்வருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறினால் மட்டுமே, உங்களை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முடியும் என ஆலோசனை சொல்கிற விதமாக, வீடியோ பதிவுகள் வெளியாகி இருப்பது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க.வின் அதிகாரமும், வன்முறையும் எல்லை கடந்து போனதால்தானே நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் மக்கள் தூக்கியெறிந்து விட்ட நிலையில், எதிரிகளும், துரோகிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, கழக அரசை கவிழ்த்தி விடத் துடிக்கும் தி.மு.க.வின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.

    கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில், தெகல்கா பத்திரிகையாளரைப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு, தூத்துக்குடி, பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், ஆளுகின்ற அ.தி.மு.க அரசே காரணம் என பழி சுமத்தி, ஆட்சியை கவிழ்த்து விடத் துடிக்கிறார்கள்.

    ஆயிரம் பொய் சொல்லி, அ.தி.மு.க அரசை கவிழ்க்க முடியாது. உண்மைகள் ஒரு போதும் தூங்குவதுமில்லை, பொய்கள் ஒரு போதும் வாழ்ந்ததுமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EdappdiPalaniswami #KodanadEstate #VaigaiChelvan
    தினகரன் அணி ஒரு பிராய்லர் கோழி என கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகை செல்வன் கூறியுள்ளார். #Vaigaichelvan #ADMK #TTVDhinakaran

    சேலம்:

    அ.தி.மு.க. 47-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் சேலம், அஸ்தம்பட்டி மணக்காட்டில் நடந்தது.

    இந்த பொதுகூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகை செல்வன் பேசும்போது, தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் கடன் தாரர்கள் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். இவர்களால் கட்சியை நடத்த முடியுமா? அதே போல் தினகரனும் ஓட்டு போட்டவர்களுக்கு கடன் வைத்துள்ளார். ரூ.20 ரூபாய் கொடுத்து ரூ.10 ஆயிரம் தருவதாக உறுதி கூறி ஓட்டையும் பெற்று கொண்டு ஏமாற்றி வருகிறார். இவர்களா தமிழகத்தை ஆள போகிறார்கள்?

     


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்.கள் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். பதவி தருவதாக கூறி தினகரன் அவர்களை ஏமாற்றிவிட்டார்.

    தினகரன் அணி ஒரு பிராய்லர் கோழி. முட்டை போடாது, குஞ்சு பொறிக்காது, கறிக்கு மட்டும் தான் உதவும். தினகரனுக்கு அரசியல் தெரியவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்காக முள்கிரீடத்தை சுமக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினர். #Vaigaichelvan #ADMK #TTVDhinakaran

    ×