என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayashanti"

    • 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் மகளிர் பிரிவு பொதுச்செயலாளராக விஜயசாந்தி பணியாற்றினார்.
    • தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் விஜயசாந்தி நடித்துள்ளார்.

    திருப்பதி:

    நடிகை விஜயசாந்தி பா.ஜ.க. தேசிய செயற்குழு பொறுப்பு வகித்து வந்தார். அவர் பா.ஜ.க.வில் இருந்து நேற்று விலகினார்.

    தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு பெரிய அடியாக இது கருதப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்காமல் இருந்த விஜயசாந்தி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு அனுப்பினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரசில் இணைய உள்ளார். தெலுங்கானாவில் ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் இவர்.

    முன்னாள் எம்.பி.க்கள் கோமதிரெட்டி, ராஜகோபால் ரெட்டி, ஜி.விவேகானந்த் மற்றும் மற்றொரு தலைவர் எனுகு ரவீந்தர் ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து விலகினர்.

    இதில் ராஜகோபால் ரெட்டியும் விவேகானந்தரும் காங்கிரசில் இணைந்தனர்.

    தெலுங்குத் திரைப்படங்களில் அதிரடி வேடங்களில் நடித்ததற்காக 'லேடி அமிதாப்' என்று பிரபலமான விஜயசாந்தி, 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கட்சியின் மகளிர் பிரிவு பொதுச்செயலாளராகப் பணியாற்றினார்.

    தெலுங்கானாவுக்கு தனி மாநிலம் கோரி போராடுவதற்காக, 2005-ல் பா.ஜ.க.வில் இருந்து விலகி தெலுங்கானா என்ற தனி அமைப்பை உருவாக்கினார். பின்னர் அவர் சந்திரசேகர ராவ் கட்சியில் இணைந்து 2009-ல் மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    ஆகஸ்ட் 2013-ல், தெலுங்கானா மாநிலம் உருவாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, டி.ஆர்.எஸ். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விஜயசாந்தியை இடைநீக்கம் செய்தது.

    பின்னர் காங்கிரஸில் சேர்ந்த அவர், 2014 தேர்தலில் மேடக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2020-ல் பா.ஜ.க.வுக்குத் திரும்பினார். தற்போது அதில் இருந்து விலகியுள்ளார்.

    விஜயசாந்தி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    • கடந்த சட்டசபை தேர்தவில் 19 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
    • நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 2018 மற்றும் 2019 தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

    ஐதராபாத்:

    தென்னிந்திய சினிமாக்களில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை விஜயசாந்தி. பாரதிய ஜனதாவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இவர், பின்பு அம்மா தெலுங்கானா என்ற பெயரில தனிக்கட்சியை தொடங்கினார்.

    அதன்பிறகு தனது கட்சியை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைத்துக்கொண்டார். பின்பு கடந்த 2014-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை விஜயசாந்தி, காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்த அவர், கடந்த 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைந்தார்.

    அதில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசில் அவர் தேர்தல் பிரசார குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரசுக்கு சென்றிருப்பது, பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து நடிகை விஜயசாந்தி கூறியிருப்பதாவது:-

    எனது அரசியல் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவுக்கு எதிரான போராட்டம். ஆனால் பாரதிய ஜனதாவும், பி.ஆர்.எஸ்.(பாரத் ராஷ்டிர சமிதி)-ம் ரகசிய உறவில் உள்ளனர். அதனால் தான் சந்திரசேகரராவ் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், மத்திய அரசு அவரிடம் விசாரணை கூட நடத்தவில்லை.

    இப்போது அவருக்கு எதிராக கடுமையாக போராடுவது காங்கிரஸ் மட்டும் தான். அதனால் தான் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். கடந்த சட்டசபை தேர்தவில் 19 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 2019-ல் அவர்களில் 12 பேர் பி.ஆர்.எஸ்.-ல் சேர்ந்தனர்.

    அப்போது சந்திரசேகர ராவுக்கு எதிராக காங்கிரசால் போராட முடியாது என்பது தெரிந்ததால், பாரதிய ஜனதாவில் சேர்ந்தேன். தற்போது ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் பலமாக போராடி வருகிறது.

    நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 2018 மற்றும் 2019 தேர்தலில் நான் போட்டியிடவில்லை. வருகிற லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவு செய்யும். சந்திரசேகரராவ் என்னை பின்தொடர்ந்து அழிக்க பார்க்கிறார்.

    இவ்வாறு நடிகை விஜயசாந்தி கூறியிருக்கிறார்.

    • விஜயசாந்தி பா.ஜ.க.வை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
    • தென்னிந்தியாவின் அரசியல் எப்போதும் சுயமரியாதைக்கான பொது உணர்வுகளால் வழி நடத்தப்படுகிறது.

    திருப்பதி:

    நடிகை விஜயசாந்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு பல மாதங்களாக அவர் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. மேலும் அரசியல் குறித்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை.

    தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் விஜயசாந்தி பா.ஜ.க.வை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது :-

    தென்னிந்தியாவின் அரசியல் எப்போதும் சுயமரியாதைக்கான பொது உணர்வுகளால் வழி நடத்தப்படுகிறது. இந்த கொள்கை நீண்ட காலமாக தொடர்கிறது. இந்திய நிலப்பரப்பில் தென்னிந்திய மாநிலங்கள் தேடும் சுயமரியாதையை பா.ஜ.க. புரிந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் தெலுங்கானாவிற்கு பி.ஆர்.எஸ். கட்சி தேவை இல்லை என்ற பா.ஜ.க.வினர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    • தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
    • காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுடன் சேர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    திருப்பதி:

    பிரபல நடிகை விஜய சாந்தி. தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை விஜயசாந்தி நேற்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுடன் சேர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பின்னர் அவர் கூறுகையில் தெலுங்கானா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி. எம்.எல்.சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    சென்னை:

    சினிமா, அரசியல் இரண்டிலும் தடம் பதித்தவர் நடிகை விஜயசாந்தி.

    ஐதராபாத்தில் வசித்து வரும் இவர் இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இதற்கு முன்னர் பாரதிய ஜனதாவில் இருந்தார்.

    ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ படம் விஜயசாந்தியை பட்டி தொட்டியெல்லாம் தெரிய வைத்தது. ரஜினி, கமலுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் இப்போது முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவோடு நெருங்கிய நட்பு பாராட்டிய விஜயசாந்தி, சென்னை வரும்போது போயஸ்கார்டன் சென்று அவரை சந்தித்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த அதிரடி பேட்டி வருமாறு:-



    எனது திரைப்படங்களை பார்த்து ஜெயலலிதா பல முறை என்னை பாராட்டியுள்ளார். இதனால் எங்களுக்குள் நட்பு அதிகரித்தது. போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். 2 காலிலும் கட்டை விரல்களில் நகங்கள் நீக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். நான் ஆறுதல் கூறி நம்பிக்கையுடன் பேசினேன்.

    அப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருந்தது. ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.

    அரசியல் தொடர்பாகவும் என்னோடு மனம் விட்டு பேசுவார். சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனையால், ஜெயலலிதா பதவி இழந்திருந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.

    அப்போது ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு நம்பிக்கையான ஒருவரை எதிர் பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் அப்போதைய சூழலில் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெலுங்கானாவுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று கூறி விட்டேன்.

    இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா அதன் பின்னரே ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினார். நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் அப்போது ஓ. பன்னீர்செல்வம் இருந்தார்.

    சசிகலாவுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. நமக்கு வேண்டப்பட்டவர் கஷ்டத்தில் இருக்கும் போது, அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். அவரது கணவர் நடராஜன் மறைந்ததும் மன்னார்குடி சென்று அஞ்சலி செலுத்தினேன்.

    பெங்களூர் சிறையில் சசிகலாவையும் சந்தித்து பேசினேன். இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்தி. மோடியின் சூழ்ச்சி.

    ரஜினி சீக்கிரம் அரசியலுக்கு வர வேண்டும். தமிழக மக்களின் சார்பில் நானும் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். கமலை பொறுத்த வரையில் அரசியலுக்கு வந்து விட்டார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை என்று நடிகை விஜயசாந்தி அறிவுரை வழங்கியுள்ளார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
    ஐதராபாத்:

    நடிகை விஜயசாந்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றவர்.

    1980 களில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தென்னிந்திய படங்களில் ஆக்‌‌ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிரடி நாயகியாக வலம் வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.

    ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால்பதித்தவர் தற்போது அதில் மும்முரமாக இயங்கி வருகிறார்.

    ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விஜயசாந்தியிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-


    திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும். அதுவும் கடின உழைப்பு. அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கானாவுக்காக இருபது ஆண்டுகள் போராடி இருக்கிறேன்.

    இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது. ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். நிற்கவேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விஜயசாந்தி பிரசாரம் செய்துவரும் நிலையில், விரைவில் நக்மா பிரசாரம் செய்ய உள்ளார். #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

    முதல்வர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.

    இதையடுத்து தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    சந்திரசேகரராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.



    தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகையும், நிர்வாகியுமான நக்மா பிரசாரம் செய்கிறார். இதே போல் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார்.

    நடிகை விஜயசாந்தி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மெகபூபா நகர் மாவட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து காங்கிரசுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் திவிரமாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma

    ×