என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் ரத்து
- வருகிற 20-ந்தேதி காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
- செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் என 2 நாட்கள் இரவு நேரத்தில் இயக்கப்படும் 15 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.30, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.40, 11.20, 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 4.15 மற்றும் இரவு 9.30, 11.20, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 10.40, 11.15, 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் 20-ந்தேதி காலை 4.15 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இன்று மற்றும் நாளை இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 3.55, 4.35 மணி மற்றும் 20-ந்தேதி காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை- எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்