search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள்"

    குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கொக்கனேரி, மேட்டுத் தெருவை சேர்ந்த வர் ஜியாபத்(வயது53).இவரது மனைவி ரியாஸ்பி (42). இருவரும் கருத்து வறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.ரியாஸ்பி அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி ஜியாபத் தனது மனைவி ரியாஸ்பியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

    இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜியாபத் தனது மனைவி ரியாஸ்பிைன கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வாழக்கு பதிவு செய்து ஜியாபத்தை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    விசாரணையின் முடிவில் மனைவியை கொலை செய்த ஜியாபத்துக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதையடுத்து ஜியாபத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அரசு தரப்பில் வழக்குரைஞர் சி.சின்னதம்பி ஆஜராகினர்.

    • சேலம் மேற்கு அஞ்–சல் கோட்டத்தில ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் வீட்–டில் இருந்–த–ப–டியே பயோ–மெட்–ரிக் முறையை பயன்–ப–டுத்தி டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஏற்–பாடு செய்–துள்–ளது.
    • இதற்கு சேவை கட்–ட–ண–மாக ரூ.70 தபால்–கா–ர–ரி–டம் செலுத்த வேண்–டும்.

    சேலம்:

    சேலம் மேற்கு அஞ்–சல் கோட்ட கண்–கா–ணிப்–பா–ளர் அலு–வ–ல–கம் வெளி–யிட்–டுள்ள செய்–திக்–கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-

    நேரில் சென்று ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் படும் சிர–மங்–களை தவிர்க்–கும் வகை–யில் அஞ்–சல் துறை–யின் கீழ் செயல்–படும் இந்–தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் வீட்–டில் இருந்–த–ப–டியே பயோ–மெட்–ரிக் முறையை பயன்–ப–டுத்தி டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஏற்–பாடு செய்–துள்–ளது. இதற்கு சேவை கட்–ட–ண–மாக ரூ.70 தபால்–கா–ர–ரி–டம் செலுத்த வேண்–டும்.

    ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் தங்–கள் பகுதி தபால்–கா–ர–ரி–டம் ஆதார் எண், செல்–போன் எண், பி.பி.ஓ. எண் மற்–றும் ஓய்–வூ–திய கணக்கு விவ–ரங்–களை தெரி–வித்து, கைவி–ரல் ரேகை பதிவு செய்–தால், ஒரு சில நிமி–டங்–களில் டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழை சமர்–பிக்க முடி–யும்.

    இந்த டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சேவையை பெற விரும்–பும் ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் அரு–கில் உள்ள அஞ்–ச–ல–கம் அல்–லது தங்–க–ளது பகுதி தபால்–கா–ரரை தொடர்பு கொள்–ள–லாம். மத்–திய அரசு ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் மட்–டு–மின்றி தொழி–லா–ளர் வருங்–கால வைப்பு நிதி நிறு–வ–னம் மூலம் ஓய்–வூ–தி–யம் பெறு–ப–வர்–களும், இந்த வச–தியை பயன்–ப–டுத்தி வீட்–டில் இருந்–த–ப–டியே தங்–கள் பகுதி தபால்–கா–ர–ரி–டம் ஆயுள் சான்–றி–தழை சமர்ப்–பித்து பயன்–பெ–ற–லாம்.

    இவ்–வாறு அதில் கூறப்–பட்–டுள்–ளது.

    ×