மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்
Published on

அரியலூர்,  

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கொக்கனேரி, மேட்டுத் தெருவை சேர்ந்த வர் ஜியாபத்(வயது53).இவரது மனைவி ரியாஸ்பி (42). இருவரும் கருத்து வறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.ரியாஸ்பி அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி ஜியாபத் தனது மனைவி ரியாஸ்பியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

இதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜியாபத் தனது மனைவி ரியாஸ்பிைன கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வாழக்கு பதிவு செய்து ஜியாபத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணையின் முடிவில் மனைவியை கொலை செய்த ஜியாபத்துக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதையடுத்து ஜியாபத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசு தரப்பில் வழக்குரைஞர் சி.சின்னதம்பி ஆஜராகினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com