என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்படும்.
- பிக்சல் சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல் ஓ.எஸ். ஆண்ட்ராய்டு 16 ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் அமெரிக்க நாட்டின் கோடை கால இறுதியிலோ அல்லது செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்படும்.
எனினும், அடுத்த ஆண்டு வெளியிடப்பட இருக்கும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் 2025 இரண்டாவது காலாண்டு வாக்கில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான தகவல்களில் ஜூன் 3 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட்-க்கு (AOSP) மாற்றப்படும் என்றும் அதே நாள் தகுதி வாய்ந்த பிக்சல் சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு ஓஎஸ்-இன் கோர் இடம்பெற்று இருக்கும் சோர்ஸ் கோட் ஆர்கிவ் தான் AOSP ஆகும். இதில் தான் டெவலப்பர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு சார்ந்த கஸ்டம் ஓஎஸ் உருவாக்க முடியும். அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய பிக்சல் 10 சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் ஆண்ட்ராயடு வெர்ஷன் எவ்வித பிழைகள் இன்றி பயனர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
முன்கூட்டியே வெளியிடப்படுவது மட்டுமின்றி ஆண்ட்ராய்டு 16 வெர்ஷனில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை பயனர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் விதத்தை அடியோடு மாற்றிவிடும்.
- வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார்.
- உணர்வதற்குள் அவரது கையில் தீ காயங்கள் ஏற்பட்டது.
சீனாவில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை அடுத்த சான்சியில் பெண் ஒருவர் பயன்படுத்தி வந்த ஐபோன் மாடல் அவர் உறங்கிக் கொண்டு இருந்த போது வெடித்தது. இதனால் அவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆப்பிள் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது ஆப்பிள் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது உறக்கத்தில் இருந்த பெண்ணின் கை தவறுதலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் மீது பட்டது. உடனே ஐபோன் மாடல் வெடித்தது. இதனை சம்பந்தப்பட்ட பெண் உணர்வதற்குள் அவரது கையில் தீ காயங்கள் ஏற்பட்டது.
இதில் பெண்ணுக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டதோடு, ஐபோன் மாடல் முழுமையாக சேதமடைந்துள்ளது. இதுதவிர சம்பவம் நடந்த அறையின் சுவர்களில் கரும்புகையால் ஏற்பட்ட சுவடு மற்றும் மெத்தை தீயில் எரிந்துள்ளது. இதில் வெடித்து சிதறிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை அந்த பெண் கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில் பேட்டரி இயக்கத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே ஐபோன் வெடித்து இருக்கும் என்று தெரியவந்துள்ளது. தனது ஐபோன் ஏன் வெடித்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ளும், தனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் வீட்டில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற முடியும் என்று பாதிக்கப்பட்ட பெண் நம்பிக்கை கொண்டுள்ளார்.
- குறுந்தகவல் அனுப்ப முடியவில்லை என்று பலர் புகார்.
- இன்ஸ்டாகிராம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராம் சேவை உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கியுள்ளதாக பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக செயலியில் வைத்து குறுந்தகவல் அனுப்ப முடியவில்லை என்று பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வலைதளங்கள் செயலிழப்பது குறித்து தகவல் வெளியிடும் டவுன்டிடெக்டர் இன்று மாலை 5.14 முதல் இன்ஸ்டாகிராம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மெட்டா நிர்வகித்து வரும் இன்ஸ்டா செயலி முடங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளனர். பலர் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் அல்லது அதன் தாய் நிறுவனமான மெட்டா சார்பில் இன்ஸ்டாகிராம் முடங்கியது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், செயலிழப்பு நடந்து இருப்பதாக தெரிகிறது.
- ஜெர்மனியைச் சேர்ந்த பில்லி பாய் நிறுவனம் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பயன்பாட்டில் உள்ளது
காண்டம் [Condom] என்பது கரு உருவாகாமல் இருக்க உடலுறவின் போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உறை ஆகும். ஆனால் தற்போது டிஜிட்டல் காண்டம் என்ற புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு பிரச்சனை மனிதர்களுக்குக் கொண்டு வந்தாலும் அதற்கான தீர்வும் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. கேமராவில் ரகசியமாகப் படம் பிடித்து மிரட்டுவது உள்ளிட்ட அபாயங்கள் பெருகி வருவதால் அதை தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருளே இந்த டிஜிட்டல் காண்டம்.
ஜெர்மனியைச் சேர்ந்த பில்லி பாய் என்ற நிறுவனம் உருக்காக்கியுள்ள கேம்டம் [Camdom] என்ற செயலி டிஜிட்டல் காண்டம் என்று குறிப்பிடப்படுகிறது. யாரேனும் அத்துமீறி வீடியோ பதிவு செய்தால் இந்த செயலியிலிருந்து அபாய Alarm அடிக்கும்.

அந்த வகையில் தம்பதிகள் பாதுகாக்கப்படுவதால் இது டிஜிட்டல் காண்டம் என்று அறியப்படுகிறது. இந்த செயலி தற்போதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளில்பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
- துபாயில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை வாங்கியுள்ளனர்
அதிக ஓடிடி தளங்களின் வருகையால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருவதால் மற்றொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டது. அதன்படி அம்பானியின் ரிலையன்ஸ் நடத்தும் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த இரண்டு தளங்களும் இணைந்தால் அதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயர் வைக்கப்படும். ஹாட்ஸ்டார் ஜியோ சினிமாவுடன்தான் இணையும் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்த டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் [Jio- hotstar.com] என்ற இணையதள முகவரியை [domain] முன்கூட்டியே கண்டது வருடமே வாங்கி வைத்தார்.
இந்த முகவரியை சொந்தமாக்கினால் மட்டுமே தற்போது ஒருங்கிணைத்து ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உருவாக்க உள்ள ஓடிடி அந்த பெயரில் செயல்பட முடியும். இந்நிலையில் அந்த முகவரியை அவர் ரிலையன்ஸிடம் நல்ல விலைக்கு விற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அந்த முகவரிக்கு ரூ.1 கோடி வரை அந்த டெவலப்பர் விலை வைத்திருந்தார் என்ற தகவல்களும் வெளியாகின.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் துபாயை சேர்ந்த இருவருக்கு டெல்லி டெவலப்பர் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இருவரும் குழந்தைகள் என்பது இந்த விவகாரத்தை அதிக சுவாரஸ்யமாகியுள்ளது. துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜைனம் மற்றும் ஜீவிகா என்ற சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளனர்.
இவர்கள் இருவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்குக் கல்வி ரீதியாக உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வாங்கி உள்ள ஜியோ ஹாட்ஸ்டார் இணைய முகவரியை அதற்கு பயன்படுத்த உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.
- வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுகிறது.
ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஓடிபி [OTP] எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கி சேவைகள், டெலிகாம் சேவைகள் என பல துறைகளில் ஓடிபி இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஓடிபி மெசேஜ் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று டெலிகாம் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.

ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அந்த அந்த விதிப்படி எல்லா ஓடிபி மெசேஜ்களையும் டிராய் கண்காணிக்கும். அப்படி டிராக் செய்யப்பட்ட ஓடிபிகள் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் பயனர்களுக்கு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும்.
இதனால் தங்களுக்கு அனுப்பும் ஓடிபிகளை பயனர்களால் பார்க்க முடியாது. வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுத்தப்படும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஓடிபிகளை நேரடியாக அல்லாமல் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் ஓடிபி எண்களை அனுப்புகிறது.
எனவே அவ்வாறு செயல்படும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடியதாக இல்லாவிட்டால், அந்த மெசேஜ்கள் தடைபடும். தற்போதுள்ள பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இந்த சிக்கல் உள்ளது.
குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் சார்ந்திருக்கும் டெலி மார்கெட்டிங்கில் இந்த சிக்கல் உள்ளதால் அந்த அவற்றின் ஓடிபி சேவைகள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இந்நிறுவனங்கள் டிராய் இடம் கோரிக்கை வைத்துள்ளது.
- ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்துள்ளது.
- மூன்று ரீசார்ஜ்களில் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ஏர்டெல். அவ்வப்போது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதுவகை ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகளுடன் விபத்து காப்பீடு வசதி வழங்கப்படுகிறது. இதற்காக ஏர்டெல் நிறுவனம் ஐசிஐசிஐ லாம்பார்டு உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 239, ரூ. 399 மற்றும் ரூ. 999 சலுகைகளில் விபத்து காப்பீடு வசதி வழங்குகிறகு.
இதில் ரூ. 239 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள், காப்பீடுக்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
ரூ. 399 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள், காப்பீடுக்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
ரூ. 999 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி 80 நாட்கள், காப்பீடுக்கான வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் விபத்து காப்பீடு பயன்பெறுவது எப்படி?
விபத்து காப்பீடுகளில் பயன்பெற 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இதற்கு முதலில் ஏர்டெல் வலைதளம் சென்று அக்கவுண்டில் சைன்-இன் செய்ய வேண்டும். அடுத்து இங்கிருந்தே விபத்து காப்பீடு தொடர்பான கோரிக்கையை எழுப்ப முடியும். ஒருவேளை அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை 121 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- கூடுதல் கட்டணமும் இன்றி அதிவேக இணைய வசதி.
- தனியார் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்க உள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லோகோவுடன் ஏழு புது சேவைகள் பி.எஸ்.என்.எல்.-இல் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய லோகோவில் "கனெக்டிங் இந்தியா" நீக்கப்பட்டு "கனெக்டிங் பாரத்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டதோடு ஸ்பேம்-இல்லா நெட்வொர்க், தேசிய அளவில் வைபை ரோமிங் சேவை, பி.எஸ்.என்.எல். ஹாட்ஸ்பாட் மூலம் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஃபைபர் சார்ந்த இன்ட்ராநெட் டிவி சேவை வழங்கப்படுகிறது. இதில் 500 நேரலை டிவி சேனல்கள், FTTH பயனர்களுக்கு பே டிவி ஆப்ஷன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. மேலும் டிவி ஸ்டிரீமிங் FTTH டேட்டாவில் கழிக்கப்படாது.
இதுதவிர சிம் கியோஸ்குகளையும் பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் எளிதில் சிம் வாங்குவது, போர்ட் செய்வது தொடர்பான சேவைகளை பயன்படுத்த முடியும். இதுதவிர சி-டி.ஏ.சி. மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து தனியார் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்க உள்ளன. இதனை மைனிங்கிற்காக பயன்படுத்தலாம்.
இந்த நெட்வொர்க் மேம்பட்ட ஏ.ஐ., ஐ.ஓ.டி. செயலிகளை சப்போர்ட் செய்யும். இறுதியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் டி2டி கனெக்டிவிட்டி சொல்யூஷன் வழங்கப்படுகிறது. இது செயற்கைக்கோள் மற்றும் டெரஸ்ட்ரியல் மொபைல் நெட்வொர்க்குகளை ஒருங்கிணைக்கிறது.
- இந்த மாடலில் 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய ஐபேட் மினி மாடல் 3 மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மினி மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய ஐபேட் மினி மாடலில் ஏ17 ப்ரோ சிப்செட், ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபேட் மினி மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த டேப்லெட் மாடல் ஐபேட் ஓ.எஸ். 18 கொண்டிருக்கிறது. இத்துடன் 12MP பிரைமரி கேமரா, ட்ரூ டோன் ஃபிளாஷ், 12MP அல்ட்ரா வைடு செல்பி கேமரா, ரெட்டினா ஃபிளாஷ், டூயல் மைக்ரோபோன்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

டச் ஐடி சென்சார் கொண்டிருக்கும் புதிய ஐபேட் மினி மாடலில் கனெக்டிவிட்டிக்கு 5ஜி, ஜிகாபிட்-கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி 3 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 19.3 வாட் பேட்டரி வங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபேட் மினி மாடல் ஸ்டார்லைட், ஸ்பேஸ் கிரே, புளூ மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி விலை ரூ. 49 ஆயிரத்து 900 என்றும் 128 ஜிபி வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் 256 ஜிபி மெமரி மாடல் விலை 59 ஆயிரத்து 900 என்றும் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 512 ஜிபி வைபை 79 ஆயிரத்து 900 என்றும் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேம்பட்ட ஐபேட் மினி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 23 ஆம் தேதி துவங்குகிறது.
- குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது.
- இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததில் இருந்து ஏழு நாட்கள் ஆகும்.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. சமீபத்தில் தனது ரீசார்ஜ் கட்டணங்கள் விலையை உயர்த்திய ஜியோ நிறுவனம் இடையில், புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக சர்வதேச (ISD) ரீசார்ஜ் பேக்குகளை அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் புதிய ISD ரீசார்ஜ் சலுகைகளின் விலை ரூ. 39 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ. 99 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐஎஸ்டி மினிட் பேக் என அழைக்கப்படும் புதிய சலுகைகள் பயனர்களுக்கு எவ்வித கூடுதல் பலன்களும் இன்றி குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது.

குறுகிய காலக்கட்டத்திற்கு சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வோருக்காக இந்த ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ. 39 விலையில் கிடைக்கும் சலுகையில் 30 நிமிடங்கள் வரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதே போன்று வங்கதேசத்திற்கு ரூ. 49 விலையில், 20 நிமிடங்கள் வரை பேசலாம்.
சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள 15 நிமிடங்களுக்கு ரூ. 49 செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பேச 15 நிமிடங்களுக்கு ரூ. 69 செலுத்த வேண்டும்.
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அழைப்பு மேற்கொள்ள 10 நிமிடங்களுக்கு 79 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் பூடானுக்கு 15 நிமிடங்கள் பேச ரூ. 89 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரூ. 99 ரீசார்ஜ் செய்யும் போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, துருக்கி, குவைத் மற்றும் பஹ்ரைனுக்கு பத்து நிமிடங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
இந்த பிரீபெயிட் ரீசார்ஜ்கள் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததில் இருந்து ஏழு நாட்கள் ஆகும்.
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அசெம்பில் செய்யப்பட இருந்தன.
- இந்த தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யவே போராடுகிறது
தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள டாடா உற்பத்தி ஆலையில், சில தினங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அந்த ஆலையில் உற்பத்தி பணிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் வைத்து தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் அசெம்பில் செய்யப்பட இருந்தன.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்ட பாகங்களை சீனா அல்லது வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் ஆலையில் இருந்து ஏற்பாடு செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ஆலையில் டாடா நிறுவனம் ஐபோனின் பேக் பேனல்கள் மற்றும் இதர பாகங்களை உற்பத்தி செய்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வழங்க இருந்தது.
ஹாங்காங்கை சேர்ந்த கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, "அக்டோபர் இறுதியில் இருந்து நவம்பர் மாத தொடக்கம் வரையிலான காலக்கட்டம் இந்திய பண்டிகைக் காலம் என்பதால் ஐபோன் 14 மற்றும் 15 மாடல்களின் உள்ளூர் விற்பனை 1.5 மில்லியன் யூனிட்கள் என்று கணிக்கப்படுகிறது. எனினும், ஆப்பிள் இந்த தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்யவே போராடுகிறது," என தெரிவித்துள்ளது.
உள்ளூர் விற்பனையைத் தவிர, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் ஐபோன்களை ஏற்றுமதி செய்கிறது. மேலும் சில பகுதிகள் மொத்தமாக $250 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ளவை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டாடா நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
- பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் இன்று உலகளவில் முடங்கி போனது.
- சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4, 5 மற்றும் அதற்கும் முன் வந்த மாடல்களில் இதனால் பாதிப்பு ஏற்பட்டது.
பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் இன்று உலகளவில் முடங்கி போனது. சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4, 5 மற்றும் அதற்கும் முன் வந்த மாடல்களில் இதனால் பாதிப்பு ஏற்பட்டது. நெட்வொர்க் முடங்கிய காரணத்தால் உலகளவில் உள்ள மக்களால் பிளே ஸ்டேஷனில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
சோனியின் பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் முடங்கியதை அடுத்து, பலரும் அவர்களது இணைய பக்கத்தில் பதிவிட்டனர். இதற்கு பதிலளித்த சோனி நிறுவனம், "நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் நீங்கள் கேம், ஆப்ஸ் போன்றவற்றை பிளே ஸ்டேஷனில் இயக்குவதில் சிக்கல் ஏற்படலாம்."
"எங்களது தொழில்நுட்ப குழு கூடிய விரைவில் இதை சரி செய்வதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன," என கூறியுள்ளது. இதனால் பிளே ஸ்டேஷன் உபயோகிக்கும் பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.






