search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் பங்க்"

    • பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்து உள்ளனர்.
    • ஆண்கள், பெண்கள் என 20 பேர் கொண்ட கும்பலுடன் வந்த பங்கில் வேலை செய்பவர்களை சராமரியாக தாக்கினர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் அடையாளம் தெரியாத வாலிபர்கள் 2 பேர் அங்கு பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பங்கிற்கு அடிக்கடி வந்து, அங்கு பெட்ரோல் போடும் வேலையில் இருந்த இளம்பெண் நிஷா வயது.21 என்பவரிடம் பேச்சு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சக ஊழியர்களான தனுஷ் வயது.38, இனியன் வயது.28, இருவரும் அந்த வாலிபர்களிடம் அடிக்கடி இங்கு வந்து பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்து உள்ளனர், பெண்ணிடம் பேசும் காட்சி இங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கூறி அந்த வாலிபர்களை கண்டித்துள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு வாலிபர்களும் எங்கள் ஏரியாவில் பெட்ரொல் பங்க் வைத்து கொண்டு எங்களுக்கே அறிவுரை சொல்கிறாயா? என தகராறு செய்து உறவினர்கள் ஆண்கள், பெண்கள் என 20 பேர் கொண்ட கும்பலுடன் வந்த பங்கில் வேலை செய்பவர்களை சராமரியாக தாக்கினர். அங்கிருந்த கண்ணாடி டோர், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தியதுடன் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தனுஷ், இனியன், மற்றொரு பெண் ஊழியர் வாசுகி ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    காயமடைந்த 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சினிமாவில் நடக்கும் காட்சிகள் பெட்ரோல் பங்கில் 1 மணி நேரம் நடந்த இந்த சம்பவங்கள் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தன. பிறகு பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கல்பாக்கம் போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவினை வைத்து தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து.
    • பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கந்தன்சாவடி பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுத்து நிறுத்தினர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.
    • நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டில் ரத்தின தங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு எறும்பு காட்டை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 55) உட்பட 7 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 பேர் பகலிலும் 3 பேர் இரவிலும் பணியாற்றி வருகின்ற னர். நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விற்ற ரூ.20 ஆயிரத்தை விஸ்வ நாதன் தனது தலையணையின் அடிப்பகுதியில் வைத்து விட்டு இரவு சுமார் 11 மணிக்கு தூங்கி னார். அப்போது ராஜாக்கமங்க லம் துறையை சேர்ந்த 17 வயது சிறுவனும், புன்னைநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும் பெட்ரோல் போடு வது போல் வந்து விஸ்வநாதனின் தலையணை அடியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.

    விஸ்வநாதன் கண் விழித்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் கொள்ளை யடிக் கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடி யாக அவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரத்தின தங்கத்திற்கு தகவல் அளித்தார்.

    இச்சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையா ளரின் கணவர் ராம்கோபால் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படையினர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற 2 சிறுவர்களையும் கைது செய்த னர். பெட்ரோல் பங்கில் திருடு வதற்கு முன்னதாக இருவரும் தாராவிளை மகேஷ் (வயது 45) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், புஷ்ப ஆண்டனி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடியதை ஒப்புக்கொண்டனர். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஏழு பேருக்கு தொடர் சிகிச்சை.
    • காயமுற்ற மூன்று பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதி.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 30 வயது இளைஞர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் கந்தசாமி என்பதும், இவர் பெட்ரோல் பம்ப்-இல் பணியாற்றி வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

    இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த நான்கு பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், மூன்று பேர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், பங்க் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    • சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
    • மழை காரணமாக பெட்ரோல் பங்கில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒதுங்கி நின்றதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தின் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

    மழை காரணமாக பெட்ரோல் பங்கில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒதுங்கி நின்றதாக கூறப்படுகிறது. மேற்கூரை இடிந்துவிழுந்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த மூன்று பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இடிந்து விழுந்த மேற்கூரையை அகற்றும் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.
    • கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர்.

    சென்னை:

    கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களிடம் குறைவான அளவே புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள் நாளை மறுநாளுக்கு(செப்டம்பர் 30-ந்தேதி) பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது.

    இதனை தொடர்ந்து வங்கிகள் மூலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கியது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் இந்த நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர்.

    இந்த சூழலில் காலக்கெடு முடிவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பஸ்களில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று கண்டக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றால், அதற்கு கண்டக்டர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதேபோல் சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.

    கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதே போல பெட்ரோல் பங்குகளிலும் இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

    தமிழகத்தில் மொத்தம் 5,900 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    • மூங்கில் துறைப்பட்டில் டிராக்டரில் சிக்கி இளம் பெண் பலியானார்.
    • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே இளையாங்கன்னி பகுதியை சேர்ந்த அருள் மனைவி ரேவதி(35) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ரேவதி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி, அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
    • நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.

    ஆவடி:

    ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த சில நாட்களாக திருமுல்லைவாயில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக இந்த பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டு இருக்கும் டேங்கிற்குள் தண்ணீர் கசிந்தது.

    இதனை அறியாமல் வழக்கம் போல் வாகனங்களுக்கு ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பினர். சிறிது தூரம் சென்றும் சில மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நின்றன.

    தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்டதால் பழுது ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சமாதானம் செய்து வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
    • விழாவில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது

    நாகர்கோவில் : 

    தோவாளை 4 வழிச்சா லையில் புதிதாக கிளா ஸ்கோ பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. அகத்தியர் முனி குழ ந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பேட்ரிக் சேவியர், பங்குதந்தைகள் பிரைட் (தேவசகாயம் மவுண்ட்), ஸ்டீபன் (குறு ம்பனை), புரூனோ (வட சேரி), கோட்டாறு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகி யோர் அர்ச்சிப்பு செய்தனர். ஜாஷ்வா அனைவரையும் வரவேற்றார். அமைச்சர் மனோதங்கராஜ் புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார். டீசல் வினியோக எந்திரத்தை எச்.பி.சி.எல். மதுரை துணை பொது மேலாளர் செல்ல பிரபு திறந்து வைத்து முதல் விற்ப னையையும் தொடங்கி வை த்தார். அதனை குமரி விற்ப னை அலுவலர் டிம் ஜெ ய்ரூஸ் பெற்று க்கொ ண்டார். பெட்ரோல் வினி யோக எந்திரத்தை மேயர் மகேஷ் திறந்து வைத்தார். அதனை எச்.பி.சி.எல். மதுரை ரீடெய்ல் என்ஜி னீயரிங் தலைமை மேலாளர் சுரேஷ்குமார் பெற்று க்கொண்டார்.

    நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., சகாயநகர் ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல், கவுன்சிலர் ஜெனட் சதீஷ்கு மார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளாஸ்கோ பெட்ரோல் பங்க் நிர்வாக இயக்குனர் போஸ்கோ நன்றி கூறினார். முன்னதாக விழாவில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிளாஸ்கோ பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.
    • பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், தோசிப்புடி நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் அருகே உள்ள குடோனில் பட்டாசு பதுக்கி வைத்து இருந்தனர்.

    நேற்று அதிகாலை பதுக்கி வைத்திருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய பட்டாசுகள் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் விழுந்தது. இதனை கண்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உயிர்பிழைக்க அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த நிலையில் பட்டாசுகள் அங்குள்ள பெட்ரோல் பம்ப் மீது விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் பெட்ரோல் பங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    பெட்ரோல் பங்கில் இருந்து தீப்பிழம்பு வானத்தை முட்டும் அளவு கிளம்பியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என எண்ணி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    தீயை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

    பெட்ரோல் பங்க் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த அரிசி ஆலை முழுவதுமாக சேதம் அடைந்தது. வெடி சத்தம் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

    தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசு பதுக்கி வைத்தவர்கள் யார்? குடோனில் பட்டாசு வைக்க அனுமதி வாங்கி உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.
    • ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக சிறைத் துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக திறக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.

    நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் பங்க்குகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கு மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    பெட்ரோல் பங்க் மூலம் சிறைத் துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.

    இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கும் வகையில், புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ. 1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த பெட்ரோல் பங்க்குகளை பெண் கைதிகள் மட்டுமே இயக்க உள்ளனர்.

    'இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கக் கூடிய பெட்ரோல் பங்க் புழலில் தான் திறக்கப்படுகிறது. இது ஒரு மாதத்தில் திறக்கப்படும்' என்று சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

    இந்த பெட்ரோல் பங்க்கின் ஒரு பகுதியில் கைதிகள் தயாரிக்கும் பொருள்களும் விற்பனை செய்யப்படும்.

    பெட்ரோல் பங்க் கட்டுமானப் பணிகளை தமிழக சட்டம், நீதி, சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அவருடன் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன் ஆகியோர் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் ரகுபதி, புழல் சிறை வளாகத்தில் நடைபெற்ற 'சிறைகளின் கலை' என்ற புதிய திட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார்.

    இந்தத் திட்டத்தின்படி, கைதிகளுக்கு தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    • சில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகின்றன.
    • 2,000 ரூபாயை பெட்ரோல் பங்க் மேலாளர் வாங்க மறுத்துவிட்டார்.

    சென்னை:

    2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், அவற்றை செப்டம்பர் மாதத்துக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து பலரும் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.

    சில இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மோட்டார் சைக்கிளில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல் ஒரு சம்பவம் சென்னையிலும் நடந்துள்ளது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரி பிரசாத் (வயது 31). இவர் பெரம்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு உள்ளார்.

    கையில் சில்லரை இல்லாததால் அங்கிருந்த ஊழியரிடம் 2,000 ரூபாய் கொடுத்தார். அதனை அந்த பெட்ரோல் பங்க் மேலாளர் வாங்க மறுத்துவிட்டார். மேலும் ஹரிபிரசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சில்லரை இல்லாவிட்டால் மோட்டார் சைக்கிளில் போட்ட பெட்ரோலை உறிஞ்சி எடுத்துவிடு என்று ஊழியரிடம் கூறியதாக தெரிகிறது.

    இதனையடுத்து அந்த ஊழியர் பெட்ரோலை உறிஞ்சி எடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ×