search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண நாள்"

    • ஓராண்டு ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர்.

    விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

    திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

    இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

    இதற்கு மத்தியில் நாட்கள் ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஆம்.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து ஓராண்டு ஆகிறது. ஜூன் 9ம் தேதி (இன்று) தங்களது முதலாமாண்டு திருமண நாளை விக்னேஷ் சிவன்- நயன்தாரா கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    நேத்து தான் திருமணம் முடிந்ததுபோல் உள்ளது. திடீரென எனது நண்பர்கள் முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி வருகின்றனர்.

    லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    இன்னும் பயணிக்க வெகுதூரம் உள்ளது..!

    ஒன்றாகச் சாதிக்க நிறைய இருக்கிறது..!

    நம் வாழ்வில் உள்ள நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், கடவுளின் அனுகிரகத்துடனும் மிகப்பெரிய ஆசீர்வாதம், நம் திருமணத்தின் இரண்டாம் ஆண்டில் கொண்டு வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2019-ம் ஆண்டு விஷால் தனது முதல் திருமண நாளை உற்சாகமாக கொண்டாடினார்.
    • அடுத்தடுத்த திருமண நாள்களை விஷால் முதல் திருமண நாள் அளவுக்கு கொண்டாடவில்லை.

    எந்த ஒரு செயலையும் புதிதாக செய்யும் போது, ஆர்வமும், மீண்டும் அதனை எப்போது செய்யலாம் என்ற எண்ணமும் இருக்கும்.

    அதுவே பழகி விட்டால் அதன்மீது இருக்கும் ஆர்வமும் குறைந்து விடும். இது நாம் செய்யும் செயல்களுக்கு மட்டுமல்ல. நமது பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களை கூட மறந்து போவதுண்டு.

    அப்படி தனது திருமண நாளை மறந்து போன மும்பை வாலிபர் ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் மும்பை நகர மக்களை பதற வைத்துள்ளது.

    அந்த வாலிபரின் பெயர் விஷால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது.

    2019-ம் ஆண்டு விஷால் தனது முதல் திருமண நாளை உற்சாகமாக கொண்டாடினார். ஆனால் அடுத்தடுத்த திருமண நாள்களை அவர் முதல் திருமண நாள் அளவுக்கு கொண்டாடவில்லை. ஆனால் மறக்காமல் மனைவிக்கு வாழ்த்து மட்டும் சொல்லிவிடுவார்.

    இந்த நிலையில் தான் விஷாலின் 5-வது திருமண நாள் கடந்த வாரம் வந்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் மனைவியின் மீதான நாட்டம் குறைந்தது போன்றவற்றால் விஷால், தனது திருமண நாளை மறந்து போனார். அதோடு மனைவிக்கு வாழ்த்தும் சொல்லவில்லை.

    முதல் நாள் இரவு வரை கணவரிடம் இருந்து வாழ்த்து வரும் என காத்திருந்த மனைவி, மறுநாளும் அவர் வாழ்த்து சொல்லாததால் கடுப்பாகி போனார்.

    இதுபற்றி கல்பனா தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் கல்பனாவின் கணவரை திட்டி தீர்த்ததோடு, அலுவலகத்திற்கு சென்ற அவரை உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்தனர்.

    அவர் வந்ததும் திருமண நாளில் மனைவிக்கு வாழ்த்து சொல்ல மறந்தது ஏன்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதில் பிரச்சினை முற்றி அவர்கள் விஷாலை சரமாரியாக தாக்க தொடங்கினர். இதை தடுக்க வந்த விஷாலின் தாயாருக்கும் அடி-உதை விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த விஷால் மற்றும் அவரது தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மும்பை போலீசார் விஷாலின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    இதுபற்றி அறிந்த மும்பைவாசிகள், திருமண நாளை மறந்து போனது ஒரு தப்பாடா? எங்களை போன்ற பலர் இதை நினைத்து பார்ப்பதே இல்லை என்று கூறினர்.

    ×