search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாகீர் கான்"

    • 2-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக ஜாகீர் கான் மற்றும் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர்.
    • அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் 2-வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் ஆகியோர் செயல்பட்டனர். அப்போது இந்திய கேப்டன் டோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக ஜாகீர் கானிடம் பீட்டர்சன் கூறினார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.

    இது குறித்து அவர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:-

    கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான டோனி. அவர் கம்ரான் அக்மலுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன் என்பது உங்களுக்கு தெரியும். அவர் அங்கே கெவின் பீட்டர்சன் இருப்பதை பற்றி என்னிடம் கூறினார்.

    கெவின் பீட்டர்சன்: ஆம்.. நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.

    ஜாகீர் கான்: அதனால் கெவின் பீட்டர்சன் ஒரு பட்டப் பெயரை யுவராஜுக்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.

    கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். நாங்கள் சில மகத்தான போட்டி போட்டுள்ளோம்.

    (தொடர்ச்சி) களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டியும் நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும் போது இதுதான் நடக்கும். அப்போது நீங்கள் ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பதும் அதைப்பற்றிய நல்ல விஷயமாகும். அஸ்வின் அதே விஷயத்தை பென் ஸ்டோக்ஸிடம் கேரியர் முடிந்ததும் செய்வார். அவர்களும் இதே போல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

    என்று பேசினார்கள். 

    • ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் முறை ஆகியன முற்றிலும் மாறுபட்டது.
    • அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

    இந்நிலையில் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் மிரட்டும் ஆண்டர்சனை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் ஸ்விங் செய்யும் ஜஹீர் கான் என்னைப் பொறுத்த வரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் முறை ஆகியன முற்றிலும் மாறுபட்டது. அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார். ஒருவேளை இந்தியாவில் அவர் விளையாடியிருந்தால் இந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. எனவே அவரை விட ஜாகிர் கான் சிறந்தவர்.

    மேலும் 2014 வெலிங்டன் போட்டியில் கேட்ச் விட்டதற்காக தம்முடைய குருவான ஜாகீர் கானை அனைவரும் நினைப்பது போல் திட்டவில்லை என்று தெரிவித்தார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    அன்றைய நாளில் என்னை நானே திட்டிக் கொண்டேன். மாறாக கேட்ச் விட்டதற்காக யாரையும் திட்டவில்லை. அந்த நிலையில் என்னுடைய குருவான அவரை நான் திட்டுவேனா? அப்படி நான் கனவில் கூட நினைத்ததில்லை. இருப்பினும் அந்த போட்டியில் மெக்கல்லம் பெரிய ரன்களை அடித்ததால் நான் கடுப்பானேன். ஜஹீர், ஷமி மற்றும் நான் ஃபிளாட்டான பிட்ச்சை கொண்ட அந்தப் போட்டியில் ஒவ்வொரு 4 ஓவருக்கு ஒருமுறை மாற்றி மாற்றி வீசியது விரக்தியை ஏற்படுத்தியது.

    என்று கூறினார்.

    ×