search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபுரம்"

    • ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும்.
    • துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

    ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும்.

    ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும்.

    அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை.

    கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது.

    பிறகு தல விநாயகரை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.

    கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வழிபட வேண்டும்.

    இதைத் தொடர்ந்து துவார பாலகர்களை வழிபட்டு கருவறை முன்புள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

    பிறகு கருவறையில் இறைவனை கண்ணார கண்டு, மனதில் இருத்தி வழிபட வேண்டும்.

    அர்ச்சகர் தரும் திருநீறை கீழே சிந்தாமல் நெற்றியில் பூசுதல் வேண்டும்.

    கருவறையை 3 தடவை வலம் வந்து வழிபடுதல் வேண்டும்.

    சிவபுராணத்தை அல்லது இறைவன் திருநாமத்தை உச்சரித்தப்படி வலம் வருவது நல்லது.

    முதல் முறை வலம் வரும் போது அம்பாள் சன்னதி, உற்சவர், நடராஜரை வழிபட வேண்டும்.

    இரண்டாம் தடவை வலம் வரும்போது, முருகன், நவக்கிரகம், பைரவர், அறுபத்து மூவரை வழிபட வேண்டும்.

    மூன்றாம் முறை வலம் வரும்போது தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டீகேசுவரரை வழிபட வேண்டும்.

    சண்டீகேசுவரரை வழிபாடு செய்ததும் ஆலய வழிபாடு முழுமை பெறுவதாக அர்த்தம்.

    இதையடுத்து மீண்டும் கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.

    இது பொதுவான, முறைப்படியான ஆலய தரிசனமாகும்.

    இவை தவிர ரிஷிகளும், முனிவர்களும், நமது முன்னோர்களும் ஆலயங்களில் செய்யத் தக்கவை, தகாதவை என்று பல்வேறு தரிசன விதிகளை உருவாக்கி கொடுத்துள்ளனர்.

    • திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது.
    • ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவிலின் கிழக்கு கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டக் கூடாது என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோவில் பஞ்சபூதங்களின் அக்னித் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலின் ராஜகோபுரமாக உள்ள கிழக்கு கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு பெளா்ணமி தினத்திலும் இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனா்.

    அதேவேளையில், கூட்ட நெரிசலால் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால் கிழக்கு கோபுரத்தை தரிசனம் செய்கின்றனா்.இந்நிலையில், கோவிலின் கிழக்கு கோபுரத்தை 30 அடி உயரத்துக்கு மறைத்து வணிக வளாகம் கட்டினால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகவே, பக்தா்களின் வசதிக்காகவும், கோயிலின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் கோபுரத்தை மறைத்து வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார்.
    • தன் தவறை உணர்ந்த மன்னர், இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.

    வள்ளாள மகாராஜா திருவண்ணாமலை கோபுரத்தைக் கட்டி முடித்தவுடன் தன் சாதனையை எண்ணி கர்வமுற்றார்.

    அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவபெருமான், பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில்,

    முதல் ஒன்பது நாட்களும் வள்ளாள மகாராஜா கோபுரத்தின் வழியாக செல்ல மறுத்து விட்டார்.

    தன் தவறை உணர்ந்த மன்னர், இறைவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.

    அதன் பின் பத்தாவது நாளில் இக்கோபுரத்தின் வழியாக செல்ல இறைவன் ஒப்புக்கொண்டார்.

    சிவபெருமானின் இச்செயல் வள்ளாள மகாராஜாவிற்கு மட்டுமின்றி,

    அகந்தையுற்ற ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைந்துள்ளது.

    • 123 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
    • 84 கோபுர கலசங்களும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரசித்திபெற்ற மாயூரநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபுரம், சுவாமி- அம்பாள் கருவறை கோபுரங்கள், பரிவார தேவதைகள் கோபுரங்கள் உள்ளிட்ட 84 கோபுரங்கள் அமைந்துள்ளன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர் 3-ந் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    விழாவை முன்னிட்டு இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்காக 123 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று நடைபெற்றன.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல மோதாளங்கள் முழங்க மயிலாடுதுறை காவேரி நகர் பாலத்தில் இருந்து 84 கோபுர கலசங்களும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன. இதில் திருவாவடுதுறை கட்டளை தம்புரான் வெள்ளப்ப சுவாமிகள், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் கோயில் பணியாளர்கள் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

    • பொதுமக்கள் கொட்டும் மழையில் திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்
    • பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது

    கன்னியாகுமரி :

    திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட மேல்கரையில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் தலைவர் அஸ்வின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையில் திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

    அதில், எங்கள் ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அருகில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தொடர்ந்து ஏற்படும் கதிர் வீச்சு காரணமாக பறவை இனங்கள் அழிந்து விடும்.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி இங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதில் பேரூராட்சி கவுன்சிலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கண்காணிப்பு கோபுரத்தில் குடிநீர், சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
    • காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    ஊட்டி,

    தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ளது.

    இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருந்து வருவதால், தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் எல்லையில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் மாவோயிஸ்டு அச்சுறுத்தல் உள்ள போலீஸ் நிலையங்களை சுற்றிலும் பாதுகாப்பு சுவர்கள் கட்டப்பட்டு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் தேவர் சோலை அருகே வாச்சிக்கொல்லி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் வனவிலங்கு வேட்டை கும்பல்கள் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கண்காணிப்பு கோபுரத்தில் வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி பணியாற்றும் வகையில் குடிநீர், சமையலறை மற்றும் சூரிய மின்சக்தியில் செயல்படும் வகையில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கூடலூர் பகுதியில் பல மாதங்கள் தொடர்ந்து மழை பெய்வதால் வனப்பகுதியில் தங்கி இருந்து கண்காணிப்பு பணி மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

    இதனால் வாச்சிக்கொல்லி பகுதியில் கண்காணிப்பு கோபுரம் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. இதில் இரவு, பகலாக வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கி கண்காணிப்பு பணி மேற்கொள்வார்கள் என்றனர்.

    • அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது
    • பொதுமக்கள் போராட்டத்தால் அதிகாரிகள் நடவடிக்கை

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குருந்திரக்கோட்டை கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இங்கு தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதியின் மையப்பகுதியில் அமைக்கப்படும் இந்த செல்போன் கோபுரத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மாறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியதில் சிறிது காலம் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் சென்று முறையிட்டால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


    • கோபுரங்களில் செடி, கொடிகள் மண்டியும், சுற்றுச்சுவர்கள் சேத–மடைந்த நிலையிலும் காணப்படுகிறது.
    • ஒரு காலத்தில் நான்கு கால பூஜை ராஜமரியாதையுடன் நடந்த கோவில்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, ஆலத்தம்பாடி அருகே பழையங்குடி எனும் கிராமத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் கரிகால சோழன் காலத்துக்கு முற்பட்டு அரசியார் வேண்டு–கோள்படி சிவனுக்கு தோஷ பரிகாரத்துக்காக கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் வருமானம் ஏதும் இல்லாததால் முறையாக பராமரிக்கப்–படாமல் கோபுரங்களில் செடி, கொடிகள் மண்டியும், சுற்றுச்சுவர்கள் சேத–மடைந்த நிலையிலும் காணப்படுகிறது.

    மேலும், இங்கு பணி செய்யும் அர்ச்சகருக்கு கூட பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

    கோவிலை சுத்தம் செய்வதற்கு என யாரையும் நியமிக்கவில்லை என்ற விஷயம் பக்தர்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் நான்கு கால பூஜை ராஜமரியாதையுடன் நடந்த கோவிலில் தற்போது, ஒரு கால பூஜை நடைபெறுவதற்கே தடுமாறுகிறது.

    இக்கோவிலுக்கு என அறநிலையத்துறையால் தனியாக செயல் அலுவலர் யாரும் நியமிக்கப்படவில்லை.

    எனவே, இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலரும், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவருமான வக்கீல் நாகராஜன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு வந்ததார். தொடர்ந்து அங்கு சாமி தரிசனம் செய்து ஆய்வு செய்தார்.

    இதில் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ, கூடுதல் ஆணையர் (இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை) கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது அைமச்சர் சேகர்பாபு பேசியதாவது:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த புதிய அரசு பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவை யில் இருந்த திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்துவது, 12 ஆண்டுகள் கடந்து திருப்பணிகள் மேற்கொள்ளாத கோவில் களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் தமிழகத்தில் தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் என சுமார் 11,959 கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதி ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

    மேலும் குளங்கள், தேர்கள், நந்தவனங்கள் பராமரிப்பு, பழைய தேர்கள் புது ப்பிப்பது, புதுத்தேர்களை உருவாக்குவது என பல் வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இதே போல் தற்போது சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல் கோவில் மகா மண்டபம் மற்றும் சோபனமண்டபத்தில் கைப்பிடிகள் பித்தளையாக அமைக்க உத்தர விடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    ராஜ கோபுரம் கட்டுமான பணி ரூ.11.50 கோடி செலவில் 9 நிலை ராஜ கோபுரம் அமைக்க ப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மருத்துவமனையை அமைக்கப்படும். அந்த மருத்துவ மனையை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைய த்துறை இணைஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணை யர்திரு.அன்னக்கொடி, ஓய்வு பெற்ற தொல்பொருள் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன், இந்து சமயஅற நிலையத்துறை தாசில்தார் தாமோதரன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் அருள்குமார், கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டாங்கோவிலில் உள்ள சிவகேசரி அம்பாள் சமேத சுவர்ணபுரீஸ்வரர் கோவில் அப்பர் சாமிகளால் பாடல் பெற்ற தலம்.
    • கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள், செடி கொடிகள் வளர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே ஆண்டாங்கோவில் கிராமத்தில் ஸ்ரீசிவகேசரி அம்பாள் சமேத சுவர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற திருத்தலம். பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.

    தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோவில் கோபுரத்தில் மரக்கன்றுகள், செடி கொடிகள் வளர்ந்து சிதிலமடைந்துள்ளது. எனவே உடனடியாக கோவிலை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×