search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "at a cost of"

    • சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு வந்ததார். தொடர்ந்து அங்கு சாமி தரிசனம் செய்து ஆய்வு செய்தார்.

    இதில் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ, கூடுதல் ஆணையர் (இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை) கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது அைமச்சர் சேகர்பாபு பேசியதாவது:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த புதிய அரசு பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவை யில் இருந்த திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்துவது, 12 ஆண்டுகள் கடந்து திருப்பணிகள் மேற்கொள்ளாத கோவில் களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் தமிழகத்தில் தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் என சுமார் 11,959 கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதி ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

    மேலும் குளங்கள், தேர்கள், நந்தவனங்கள் பராமரிப்பு, பழைய தேர்கள் புது ப்பிப்பது, புதுத்தேர்களை உருவாக்குவது என பல் வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இதே போல் தற்போது சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல் கோவில் மகா மண்டபம் மற்றும் சோபனமண்டபத்தில் கைப்பிடிகள் பித்தளையாக அமைக்க உத்தர விடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    ராஜ கோபுரம் கட்டுமான பணி ரூ.11.50 கோடி செலவில் 9 நிலை ராஜ கோபுரம் அமைக்க ப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மருத்துவமனையை அமைக்கப்படும். அந்த மருத்துவ மனையை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைய த்துறை இணைஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணை யர்திரு.அன்னக்கொடி, ஓய்வு பெற்ற தொல்பொருள் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன், இந்து சமயஅற நிலையத்துறை தாசில்தார் தாமோதரன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் அருள்குமார், கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சியில் தலைவர் ஜனார்த்தணன் தலைமையில் நகராட்சி கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டம் தொடங்கியதும் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச தொடங்கினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சியில் தலைவர் ஜனார்த்தணன் தலைமையில் நகராட்சி கூட்டம் நடை பெற்றது. இதில் துணை த்தலைவர் சிதம்பரம், நகராட்சி ஆணையாளர் சையது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச தொடங்கினர்.

    தி.மு.க கவுன்சிலர் முரளிகிருஷ்ணன் பேசும் போது:

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல சிரமமாக இருக்கிறது. ஆகவே தேங்கி நிற்கும் மழை நீரினை அருகில் இருக்கும் கழிவு நீர் சாக்கடைக்கு போகும்படி செய்து தர வேண்டும் என்றார்.அதற்கு நகராட்சி ஆணையாளர் சையது உசேன் குழி போட்டு குழாய் அமைத்து செய்து தரப்படும் என்றார்.

    தி.மு. க. கவுன்சிலர் பூரணராமச்சந்திரன் பேசும் போது: நிலுவையில் உள்ள அனைத்து வரி பணத்தை விரைவில் வசூலிக்க வேண்டும் இல்லை யென்றால் நகராட்சிக்கு நஷ்டம் ஏற்படும் என்றார்.

    காங்கிரஸ் கவுன்சிலர் வெங்கடாச்சலம் பேசும் போது, எனது வார்டுகளில் உள்ள கிணறுகளில் மரங்கள் வளர்ந்துள்ளன. அதை சுத்தம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

    காங்கிரஸ் கவுன்சிலர் துரைசாமி பேசும்போது, காந்திநகர் அருகே பள்ளத்தில் செடி, கொடிகள் முளைத்து மிகவும் அடர்த்தியாக உள்ளது. மழைநீர் செல்வதற்கு வழி இல்லை. பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் அப்பகுதியில் வசிக்கும் வீட்டினுள் வந்து விடுகிறது. இதனால் புதர்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தர வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க கவுன்சிலர் புவனேஸ்வரி பேசும் போது, குப்பைகளை எடுத்து ச்செல்லும் வண்டிகள் குறைவாக உள்ளது. ஆகவே கூடுதலாக இயக்கவேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய துணைத்தலைவர் சிதம்பரம் புளியம்பட்டி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளு க்காக தேவையான நடவடி க்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    புன்செய்ப் புளியம்பட்டி பகுதிகளில் 3-வது குடிநீர் திட்ட பணிக்காக ரூ.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

    ×