search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.52 crores"

    • புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சியில் தலைவர் ஜனார்த்தணன் தலைமையில் நகராட்சி கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டம் தொடங்கியதும் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச தொடங்கினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சியில் தலைவர் ஜனார்த்தணன் தலைமையில் நகராட்சி கூட்டம் நடை பெற்றது. இதில் துணை த்தலைவர் சிதம்பரம், நகராட்சி ஆணையாளர் சையது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேச தொடங்கினர்.

    தி.மு.க கவுன்சிலர் முரளிகிருஷ்ணன் பேசும் போது:

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல சிரமமாக இருக்கிறது. ஆகவே தேங்கி நிற்கும் மழை நீரினை அருகில் இருக்கும் கழிவு நீர் சாக்கடைக்கு போகும்படி செய்து தர வேண்டும் என்றார்.அதற்கு நகராட்சி ஆணையாளர் சையது உசேன் குழி போட்டு குழாய் அமைத்து செய்து தரப்படும் என்றார்.

    தி.மு. க. கவுன்சிலர் பூரணராமச்சந்திரன் பேசும் போது: நிலுவையில் உள்ள அனைத்து வரி பணத்தை விரைவில் வசூலிக்க வேண்டும் இல்லை யென்றால் நகராட்சிக்கு நஷ்டம் ஏற்படும் என்றார்.

    காங்கிரஸ் கவுன்சிலர் வெங்கடாச்சலம் பேசும் போது, எனது வார்டுகளில் உள்ள கிணறுகளில் மரங்கள் வளர்ந்துள்ளன. அதை சுத்தம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

    காங்கிரஸ் கவுன்சிலர் துரைசாமி பேசும்போது, காந்திநகர் அருகே பள்ளத்தில் செடி, கொடிகள் முளைத்து மிகவும் அடர்த்தியாக உள்ளது. மழைநீர் செல்வதற்கு வழி இல்லை. பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் அப்பகுதியில் வசிக்கும் வீட்டினுள் வந்து விடுகிறது. இதனால் புதர்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தர வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க கவுன்சிலர் புவனேஸ்வரி பேசும் போது, குப்பைகளை எடுத்து ச்செல்லும் வண்டிகள் குறைவாக உள்ளது. ஆகவே கூடுதலாக இயக்கவேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய துணைத்தலைவர் சிதம்பரம் புளியம்பட்டி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளு க்காக தேவையான நடவடி க்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    புன்செய்ப் புளியம்பட்டி பகுதிகளில் 3-வது குடிநீர் திட்ட பணிக்காக ரூ.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

    ×