search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவிகள்"

    • ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மாநகர போலீசார் சார்பில் போலீஸ் அக்கா திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக கல்லூரிக்கு ஒரு பெண் போலீஸ் வீதம் 60 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    போலீஸ் அக்கா திட்டத்துக்கான போலீசார் அடிக்கடி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று அங்கு படித்து வரும் மாணவிகளுடன் கலந்துரையாடி பொது இடங்களில் வாலிபர்கள் தொந்தரவு கொடுத்தால் உடனடியாக தெரிவிக்கும்படி தங்களின் செல்போன் நம்பரை கொடுத்து தைரியப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக எண்ணற்ற கல்லூரி மாணவிகள் போலீஸ் அக்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை வெளிப்படையாக தெரிவிப்பதால் போலீசார் அதிரடியாக செயல்பட்டு சம்பவ இடங்களில் குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்ய முடிகிறது.

    கோவையில் கல்லூரி மாணவிகளுக்கான போலீஸ் அக்கா திட்டம் மட்டுமின்றி மாநகரில் இயங்கி வரும் பள்ளிகளில் காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகளின் பெற்றோரை போலீசார் நேரடியாக சந்தித்து பேசி, அந்த பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க செய்து வருகின்றனர்.

    கோவை மாநகரில் அமலில் இருக்கும் போலீஸ் அக்கா மற்றும் ஆபரேஷன் ரீபூட் ஆகிய திட்டங்கள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கல்லூரி மாணவிகளின் பிரச்சனைகளை நட்புரீதியில் தெரிவிக்க ஏதுவாக செயல்படுத்தப்பட்டு உள்ள போலீஸ் அக்கா திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு மட்டும் 400-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளது. மேலும் மாணவிகள் தெரிவித்து உள்ள கருத்துக்களின்படி அனைத்து பஸ்களிலும் கேமரா பொருத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. பெண்கள் குறித்த புகார்கள் வந்தால் உடனடியாக போலீசார் புறப்பட்டு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கண்ட பணிகள் நடைபெறுகிறது.

    பெண்களுக்கு தேவையான உடனடி நடவடிக்கைகள், சட்டரீதியான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிசெய்வது ஆகிய 3 கோணங்களில் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இதற்கான நடைமுறைகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக பதிவுசெய்யப்படுகின்றன.

    பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் ஆபரேஷன் ரீபூட் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் போலீசார் நேரடியாக சென்று பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உப்பு க்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த பால்கரு ப்பையா மகள் பால்பாக்கி யம் (வயது 15). இவர் அங்குள்ள பச்சையப்பா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் முத்து வீரி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் பாலக்கோம்பை கென்னடி நகரைச் சேர்ந்த கருப்பையா மகள் கீர்த்தனா (19). இவர் வீரபாண்டியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் சந்திரசேகர் (19). இவர் டிரம்ஸ் செட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று டிரம்ஸ் செட் அடிக்கும் பணிக்காக வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள்-இளம் பெண் உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது தம்பி மகள் நகரிகா (21). இவரை ஜெயலட்சுமி தனது வீட்டில் பராமரித்து வந்தார். சிவகாசி ரோட்டில் உள்ள கல்லூரியில் நகரிகா எம்.பி.ஏ. படித்து வருகிறார். தினமும் ஜெயலட்சுமியின் கணவர் நகரிகாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கல்லூரி பேருந்தில் அனுப்பி வைத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற நகரிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. கல்லூரியை தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அம்மாபட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் ஆனைக்கு ட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வி. இவரது மகள் அபிராமி (19). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பூலாங்கால் பகுதியை சேர்ந்தவர் சிவமணி. இவரது மகள் இந்திரா (19). பிளஸ்-2 முடித்து விட்டு வெளியூரில் நர்சிங் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்தவர் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தார். சிவமணி அதனை கண்டித்து சிம்கார்டை எடுத்து வைத்து கொண்டார். இந்த நிலையில் திடீரென அபிராமி மாயமானார். பின்னர் அவரது தாயாரின் செல்போனில் என்னை தேட வேண்டாம் என செய்தி அனுப்பியிருந்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது அதில் பேசிய நபர் தஞ்சாவூர் செல்ல வேண்டும் என கூறி ஒரு பெண் தன்னிடம் செல்போனை வாங்கி செய்தி அனுப்பியதாக தெரிவித்தார். பின்னர் அந்த பஸ் கண்டக்டரை தொடர்பு கொண்ட போது அந்த பெண் தஞ்சாவூரில் இறங்கி சென்று விட்டதாக கூறியுள்ளார். பரலச்சி போலீசில் சிவமணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள படந்தால் பகுதியை சேர்ந்தவர் அனுசுயா. இவரது மகன் முத்துப் பாண்டி. ராணுவத்தில் பணிபுரிகிறார். மருமகள் துர்கா (27), பேத்தி ஹரிப்பிரியா(4) அனுசுயாவுடன் வசித்து வந்தனர். இந்தநிலையில் பெங்களூருவில் உள்ள கணவரின் சகோதரி சகுந்தலா வீட்டிற்கு செல்வதாக கூறி மகளுடன் துர்கா சென்றார். ஆனால் அவர் பெங்களூருக்கு செல்லவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் காளீஸ்வரி (19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வெளியே புறப்பட்ட பெற்றோரிடம் படிப்புக்காக செல்போன் வேண்டும் என வாங்கி வைத்துள்ளார். மீண்டும் அவர் திரும்பி வந்து பார்த்த போது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் கற்பகம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கல்லூரி மாணவிகள் உள்பட 3 இளம்பெண்கள் மாயமாகி விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அரசப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது 17 வயது மகள் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் காளியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் எஸ்.என்.புரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலையரசி. இவர் கணவரை பிரிந்து மகள் சுவேதா என்ற சுந்தரேஸ்வரியுடன்(20) வசித்து வருகிறார். சுந்தரேஸ்வரி சிவகாசி அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் கலையரசி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள நாசர் புளியங்கு ளத்தை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகள் பேச்சி(21). என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் ஆதித்தநேந்தலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்தவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் வீரபாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராமப்புறங்கள்,விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
    • பெருமாள்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பகுதியில் இருந்தும், மாநகரத்தில் விரிவாக்கப் பகுதியில் இருந்தும் தினமும் பாளை பகுதியில் உள்ள கல்லூரி களுக்கும், பள்ளிகளுக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிப்பதற்காக வந்து செல்கின்றனர்.

    மாநகர பகுதிக்குள் குறிப்பாக டவுன், பேட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட அளவு பஸ்கள் இயக்கப்பட்டா லும் மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள கிராமப்புறங்களில் மற்றும் விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் இந்த பஸ்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவ-மாணவிகள், பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் என கூட்டமாக காணப்படுகிறது.

    அந்த வகையில் இன்று காலை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் இருந்து டவுனுக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெருமாள்பு ரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவ -மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். இதனை அந்த வழியாக வந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் ஒருவர் பார்த்து உடனடியாக அந்த பஸ் டிரைவரை பஸ்சை நிறுத்த சொல்லி அதில் தொங்கிக் கொண்டிருந்த மாணவிகளை படிக்கட்டில் இருந்து பஸ்சுக்குள் போகுமாறு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் பஸ்சை கிளம்ப அறிவுறுத்தினார். தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலைகளில் மாநகர பகுதியில் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த வேலைகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகாசி தனியார் கல்லூரி வரலாற்று துறை மாணவர்கள் கீழடி, விஜயகரிசல்குளம், சிவகளை உள்ளிட்ட அகழாய்வு மையங்கள் மற்றும் வரலாற்று தொன்மை வாய்ந்த பல்வேறு இடங்களுக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வரலாற்று துறை மாணவர்களுக்கு கல்வெட்டுகள் குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டெழுத்து, தமிழி, கிரந்தம் உள்ளிட்ட எழுத்துக்களை கண்டறிவது, படிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வடபத்ரசயனர் சன்னதியில் மாணவிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வடபத்ரசயனர் உட்பிரகாரத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுப்பது குறித்து வரலாற்று ஆய்வாளர் உதயகுமார், உதவியாளர் முத்துபாண்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    இதில் வரலாற்று துறை தலைவர் ம்யா, பேராசிரியர்கள் வெண்ணிலா, கலைவாணி மற்றும்

    150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 606 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • இதனை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் சிவ கங்கை மாவட்டத்தில் முதற் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, வங்கிகளின் முதன்மை மேலாளர்கள் விமல்காந்த், (இந்தியன் வங்கி), ராமகிருஷ்ணன் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் பணி அனுபவ பயிற்சி பெற்று வருகிறார்கள்.
    • அவர்கள் விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள ஏகாபுரம் கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்தும் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் சார்பாக, விவசாயிகளுக்கு பருத்தியில் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தனர்.

    இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த , பஞ்சகாவியா ,தசகாவியா ,ஐந்திலைக் கரைசல் ஆகியவற்றை தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்பாடுகளை விளக்கினர். மேலும் ,பருத்தியில் விளைச்சலை அதிகரிக்க இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வது குறித்தும் எடுத்துக்கூறினர்.

    • திருமங்கலம் அருகே கல்லூரி மாணவிகள் மாயமானார்கள்.
    • தாய் ரேணுகா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சுவ லட்சுமி(23).

    ராமையா குடும்பத்தினர் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். ராமையா கடந்த 1½ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சுவலட்சுமி அமெரிக்காவில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    செமஸ்டர் தேர்வு முடிந்து 4 மாதத்திற்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார். திரும்பவும் அமெரிக்க செல்ல வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். ஆனால் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 13ந் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தாய் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லாண்டி. இவரது மகள் தனசுபா (வயது19). இவர் உசிலம்பட்டி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாய் ரேணுகா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளையான்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
    • இதில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

     மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராம பகுதியில் சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தலின்படி, இளையான்குடி பேரூராட்சி அலுவலகம், சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்ட கணக்கெடுப்பு முகாமை நடத்தியது. முள்ளியரேந்தல், நெடுங்குளம் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய ஊராட்சிகளில் இந்த முகாம் நடந்தது. மாணவிகள் வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை பதிவு செய்து பேரூராட்சி அலுவலர்களிடம் மனுக்களாக வழங்கினர். இதில் இளையான்குடி பேரூராட்சி அலுவலர்களுடன் இணைந்து கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் செய்யது இப்ராஹிம், இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன் ஆகியோர் உடன் சென்றனர். இந்த பணியில் ஈடுபட்ட மாணவிகளை கல்லூரி முதல்வர் அப்பாஸ்மந்திரி பாராட்டினார்.

    • மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
    • மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    நவம்பர் 1-ந்தேதி தொடங்கும் விண்ணப்பபதிவு 11-ந்தேதி முடிவடைகிறது. மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
    • காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

    கடலூர்:

    கடலூரை அடுத்த உச்சிமேடு பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு பி.ஏ. படித்து வரும் மாணவி சம்பவத்தன்று வீட்டில் இருந்து திடீர் என மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே மாணவியின் பெற்றோர் இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர். இதேபோன்று கடலூரை அடுத்த வெள்ளைக்கரை பகுதியை சேர்ந்த 19 வயது தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்லூரி மாணவியை எங்கு தெரியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

    ×