search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவிகள் மாயம்
    X

    கல்லூரி மாணவிகள் மாயம்

    • திருமங்கலம் அருகே கல்லூரி மாணவிகள் மாயமானார்கள்.
    • தாய் ரேணுகா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சுவ லட்சுமி(23).

    ராமையா குடும்பத்தினர் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். ராமையா கடந்த 1½ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சுவலட்சுமி அமெரிக்காவில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    செமஸ்டர் தேர்வு முடிந்து 4 மாதத்திற்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார். திரும்பவும் அமெரிக்க செல்ல வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். ஆனால் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 13ந் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தாய் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லாண்டி. இவரது மகள் தனசுபா (வயது19). இவர் உசிலம்பட்டி தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாய் ரேணுகா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×