கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

சிவகாசி தனியார் கல்லூரி வரலாற்று துறை மாணவர்கள் கீழடி, விஜயகரிசல்குளம், சிவகளை உள்ளிட்ட அகழாய்வு மையங்கள் மற்றும் வரலாற்று தொன்மை வாய்ந்த பல்வேறு இடங்களுக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வரலாற்று துறை மாணவர்களுக்கு கல்வெட்டுகள் குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டெழுத்து, தமிழி, கிரந்தம் உள்ளிட்ட எழுத்துக்களை கண்டறிவது, படிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வடபத்ரசயனர் சன்னதியில் மாணவிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வடபத்ரசயனர் உட்பிரகாரத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுப்பது குறித்து வரலாற்று ஆய்வாளர் உதயகுமார், உதவியாளர் முத்துபாண்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதில் வரலாற்று துறை தலைவர் ம்யா, பேராசிரியர்கள் வெண்ணிலா, கலைவாணி மற்றும்

150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com