search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய மாணவிகள்
    X

    விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.

    விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய மாணவிகள்

    • சேலம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் பணி அனுபவ பயிற்சி பெற்று வருகிறார்கள்.
    • அவர்கள் விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள ஏகாபுரம் கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்தும் கிராம வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் சார்பாக, விவசாயிகளுக்கு பருத்தியில் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தனர்.

    இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த , பஞ்சகாவியா ,தசகாவியா ,ஐந்திலைக் கரைசல் ஆகியவற்றை தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்பாடுகளை விளக்கினர். மேலும் ,பருத்தியில் விளைச்சலை அதிகரிக்க இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வது குறித்தும் எடுத்துக்கூறினர்.

    Next Story
    ×