search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க ராணுவம்"

    • அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கியது.
    • முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை அனுப்பி வைத்தது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான உதவிப் பொருட்கள் காசா மக்களுக்கு சென்றடையும் நிலை உள்ளது. காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வந்தன.

    இதற்கிடையே, காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபட உள்ளோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்கா ராணுவம் வான் வழியாக காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. முதல்கட்டமாக 38,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை அனுப்பியது.

    • ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதி தாக்குதலை முறியடிக்க ஒன்றிணைந்துள்ளன.

    ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்த போதிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.

    இதனால கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றாக இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தியது.

    இந்த நிலையில் நேற்று இரவு 2-வது முறையாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    அமெரிக்க போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகள், டிரோன்கள், லாஞ்சர்கள் போன்வற்றை சேமித்து வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு உளவு மற்றும் கண்காணிப்பு பணி ஆகியவற்றில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, நெதர்லாந்து நாடுகள் பங்களிப்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. எங்களுடைய நோக்கம் செங்கடலில் பதற்றம் தணிய வேண்டும். நிலைத்தன்மை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எனவும் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் உலகின் முக்கிய கடல் போக்குவரத்து வழியான செங்கடலில் எளிதான வணிக போக்குவரத்து நடைபெறுவதற்கும், உயிரைக் காப்பாற்றுவதற்கும் ஹவுதிக்கு பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் எனவும் எச்கரிக்கை விடுத்துள்ளது.

    • இஸ்ரேல் போரினால் காசாவில் 23 ஆயிரத்திற்கும் மேல் உயிர் இழந்துள்ளனர்
    • சமநிலை இல்லாத போர்க்களத்தில் ஏமனை தாக்குகிறார்கள் என்றார் எர்டோகன்

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.

    எதிர்பாராத இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுத்து, அன்றிலிருந்தே அவர்கள் மறைந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதியில் ஒரு போரை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

    சுமார் 23 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி 100-வது நாளை நெருங்கும் இப்போரில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவு தருகின்றன.

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், ஏமன், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.

    கடந்த 2023 அக்டோபர் 19 அன்று, ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்தும், இஸ்ரேலை எதிர்த்தும், ஏமன் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் செங்கடல் (Red Sea) பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை வான்வழியாகவும், கடல் வழியாகவும் தாக்க தொடங்கினர்.

    அப்பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் போர்கப்பல்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளன.

    இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, ஏமன் நாட்டின் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வழி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக கருதாத துருக்கி, ஏமன் தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) இது குறித்து கூறியதாவது:

    ஏமனுக்கும் அமெரிக்க-இங்கிலாந்து படைகளுக்கும் இருப்பது ஒரு சமநிலை இல்லாத போர்க்களம். அளவுக்கு அதிகமாக ஏமன் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தாக்குதல் நடத்துகின்றன. செங்கடல் பகுதியை "ரத்த கடல்" (sea of blood) போல் மாற்றி விட முயல்கின்றன. ஆனால், தங்களை காத்து கொண்டு, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, இதற்கு ஹவுதி அமைப்பினர் தக்க பதிலடி அளிப்பார்கள்.

    இவ்வாறு எர்டோகன் தெரிவித்துள்ளார்.

    • தைவானின் சுயாட்சியை சீனா அங்கீகரிக்கவில்லை
    • தைவானுக்கு ஆதரவான ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றது சீனா

    வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடு, தைவான் (Taiwan).

    சுயாட்சி பெற்ற தனி நாடாக தைவான் தன்னை அறிவித்து கொண்டாலும், சீனா இதை ஏற்க மறுத்து, தைவானை தனது முழு ஆளுகைக்கு உட்பட்ட நாடாக பிரகடனம் செய்து உரிமை கொண்டாடி வருகிறது.

    இரு நாடுகளுக்குமிடையே இது பெரும் சச்சரவை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.

    சமீப சில மாதங்களாக தைவானின் நிலப்பரப்பு மற்றும் வான்வெளி பகுதிகளில், சீனா, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியாக பல ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தைவானின் சுதந்திரத்தை அமெரிக்கா அங்கீகரிப்பதால், சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை அந்நாடு எடுத்துள்ளது.

    இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. பல கட்டங்களாக சீனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    ஆனால், 2022ல் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்கு சென்றதற்கு கண்டனம் தெரிவித்து சீனா அதன் பிறகு பேச்சுவார்த்தைகளை புறக்கணித்தது.

    கடந்த வருடம், இரு நாட்டு அதிபர்களும் மீண்டும் பேச்சுவார்த்தையை துவங்க சம்மதித்தனர்.

    இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையக கட்டிடமான பென்டகனில் (Pentagon) அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையே தைவான் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி லாயிட் ஆஸ்டின் புற்று நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ராணுவ துணை தலைமை அதிகாரி மைக்கேல் சேஸ் (Michael Chase) மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் சாங் யான்சாவ் (Major Gen. Song Yanchao) ஆகியோர் தலைமையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    தைவான் விஷயத்தில் எந்த சமரசத்திற்கும் சீனா தயார் இல்லை. தைவானுக்கு ராணுவ உதவி அளித்து வலுப்படுத்த முயலும் போக்கை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும்.

    தெற்கு சீன கடல் பகுதியில் ராணுவத்தை நிலைநிறுத்துவதையோ, சச்சரவை தூண்டும்விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அமெரிக்கா தொடர கூடாது.

    கடற்சார் பாதுகாப்பு விஷயங்களை அமெரிக்கா முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

    சர்வதேச அளவில் முக்கிய சிக்கல்களில் சீனாவின் அடிப்படை உரிமைகளுக்காக சீனா எடுக்கும் முயற்சிகளயும், சீனாவின் நிலைப்பாட்டையும் அமெரிக்கா புரிந்து கொண்டு ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு சீனா கூறியுள்ளது.

    • அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது.
    • ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்து விசாரணை.

    எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.

    அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.

    தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்..

    ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    • ஏற்கெனவே 2 முறை அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தியது
    • பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடந்தது

    பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் மறைமுகமாக உதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.

    சில தினங்களுக்கு முன், சிரியாவிலும், அமெரிக்காவிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தொடர்புடைய குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் பத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக கடந்த அக்டோபர் 26 அன்றும் கடந்த புதன்கிழமையன்றும் என 2 தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியது.

    இந்நிலையில், அமெரிக்கா நேற்று மீண்டும் 3-வது முறையாக தெற்கு சிரியாவில் ஈரானுக்கு தொடர்புடைய இடங்களில் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் விதமாக அங்குள்ள பல நாடுகளுக்கு ஆயுத உதவியை ஈரான் மறைமுகமாக செய்து வருவதை தடுக்க அமெரிக்கா விரும்புகிறது. எனவே அந்த குழுக்கள் சிரியா நாட்டில் செயல்படும் இடங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்கியது.

    இது குறித்து அமெரிக்க ராணுவ செயலாளர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) தெரிவித்ததாவது:

    கிழக்கு சிரியாவில் உள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (Islamic Revolutionary Guard Corps) தளங்களின் மீது அமெரிக்கா துல்லிய தாக்குதல்களை நடத்தியது. இது ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி. இத்தாக்குதல்களில் அல்பு கமால் மற்றும் மாயாதீன் ஆகிய இரு இடங்களில் உள்ள பயிற்சிக்கூடம் மற்றும் பாதுகாப்பு இல்லம் ஆகியவை குறி வைக்கப்பட்டன.

    இவ்வாறு ஆஸ்டின் தெரிவித்தார்.

    ×