search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Councilors"

    • பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.
    • 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை பேரூராட்சி யில் மொத்தம் 15 கவுன்சி லர்கள் உள்ளனர். இதில் 10 தி.மு.க. கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 1 காங்கிரஸ் கவுன்சிலர் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 35 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதை நிறை வேற்றி தரும்படி பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி.ராஜேந்திரன் கூறினார்.

    கடந்த 15 மாதங்களாக பேரூராட்சி பகுதியில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிதர கோரியும், சென்னிமலை ரோட்டில் அமைந்துள்ள விக்னேஸ் நகர், கவின் நகர், காந்தி நகர் பகுதியில் மொத்தம் 600 வீடுகள் உள்ள நிலையில் 600 வீடுகளின் கழிவு நீரானது தார் சாலைக்கு வருவ தாகவும், அதற்கு சாக்கடை கால்வாய் அமைக்க கூறியும், போதிய வாகன வசதி இல்லாததை சுட்டிகாட்டிய கவுன்சி லர்கள் தீர்மா னங்களை புறக்கணித்தனர்.

    இதனையடுத்து தி.மு.க.வை சார்ந்த சுப்பிர மணியன், நந்தகோபால், சித்திக் அலி, புஸ்பா, பிரபாவதி, சரண்யா ஆகிய 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த அருணாச்சலம், வளர்மதி கே.செல்வ ராஜ், கோமதி, புனிதமதி ஆகிய 4 பேர் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

    பேரூராட்சி தலைவர் உள்பட 5 பேர் மட்டுமே தீர்மானங்களை நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தனர். இதனால் கவுன்சிலர் கூட்டத்தில் எந்தவொரு தீர்மானவும் நிறைவே ற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    • மதுரை மாநகராட்சி கூட்டம்: சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையிலும், கமிஷனர் சிம்ரன் ஜித் காலோன் முன்னிலையிலும் நடந்தது. பெரும்பாலான அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னைக்கு சென்றுவிட்டதால், குறை வான கவுன்சிலர்களே கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் எஸ்.எம்.டி. ரவி பேசும்போது, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய சொல்லி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். பின்னர் சொத்து வரி உயர்வை ரத்து செய்யாததை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் பேசும்போது, தெற்கு தொகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு இருப்பதால் கழிவுநீர் வெளி யேறி ரோட்டில் செல்கிறது. மேலும் குடிநீர் பிரச்சினை ஆங்காங்கே ஏற்படுகிறது. அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    ×