என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Austinpatti money snatch"
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட தனக்கன்குளம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). இவர் கருவேலம் பட்டி இந்திரா நகரில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 4 ஆயிரம், ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து நாகராஜ் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நாகராஜிடம் பணம் பறித்தது தோப்பூரைச் சேர்ந்த முருகேசன் மகன் கருப்பசாமி (22), மூனாண்டிப்பட்டியைச் சேர்ந்த பழனி மகன் சிவக்குமார் (30) என தெரிய வந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்தனர். மற்றொரு வரை தேடி வருகின்றனர்.
ஆஸ்டின்பட்டி அருகே உள்ள கருவேலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்காளை மகன் கரந்தமலை (26). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக இவர் அந்த பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கரந்தமலையை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்