என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர் கோவில்"

    • ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
    • அயோத்தி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

    அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 161 அடி உயர் கோவில் கோபுரத்தின் மீது 30 அடி உயர் கம்பத்தில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நடைபெற்றது.

    கொடி ஏற்றுதல் விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி கொடியை ஏற்றி வைத்தார். இதனால் அயோத்தி விழா கோலம் பூண்டுள்ளது.



    ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, அயோத்தி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி அங்குள்ள சன்னதிகளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். 




    • மக்கள் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
    • ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

    அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 161 அடி உயர் கோவில் கோபுரத்தின் மீது 30 அடி உயர் கம்பத்தில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி கொடி ஏற்றி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி அயோத்தி சென்றுள்ளார். அயோத்தி சென்ற அவர் சாலை மார்க்கமாக ராமர் கோவில் சென்றடைந்தார். அவர் செல்லும் வழியில் இருபுறமும் மக்கள் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    கொடி ஏற்றுதல் விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக அயோத்தி விழா கோலம் பூண்டுள்ளது.

    ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி அங்குள்ள சன்னதிகளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். 






    • பகவான் ராமர் நமக்கு நேர்மையாக வாழவும், அநீதியை தட்டிக் கேட்கும் துணிச்சலுடன் இருக்கவும் கற்றுக் கொடுத்துள்ளார்.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா நீதியை நிலைநாட்டியது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வரும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு கொண்டாடப்படும் 2-வது தீபாவளி இதுவாகும்.

    பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த நடவடிக்கையை இந்தியா நேர்மையான முறையில் மட்டுமின்றி அநீதிக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் அதிரடியாக மேற்கொண்டது.

    பகவான் ராமர் நமக்கு நேர்மையாக வாழவும், அநீதியை தட்டிக் கேட்கும் துணிச்சலுடன் இருக்கவும் கற்றுக் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டதை சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் பார்த்தீர்கள்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா நீதியை நிலைநாட்டியது. அதோடு அநீதி அழிக்கப்பட்டது.

    நமக்கெல்லாம் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தீப ஒளி ஏற்றப்பட்டது. குறிப்பாக தொலைதூர பகுதிகளில் இந்த ஆண்டு உற்சாகமாக தீபாவளி கொண்டாடப்பட்டதை காண முடிகிறது.

    இந்த மாவட்டங்களில் எல்லாம் மாவோயிஸ்டு தீவிரவாதம் இருந்தது. இன்று அவை அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பலரும் வன்முறை பாதையை கைவிட்டு வளர்ச்சி பாதைக்கு திரும்புவதை நாம் காண முடிகிறது.

    நாட்டின் அரசியல் கட்டமைப்பு மீது அவர்கள் நம்பிக்கை கொண்டு போராட்டத்தை கைவிட்டு வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளனர். இது நமது நாடு செய்துள்ள மிகப்பெரிய சாதனையாகும்.

    அடுத்து மத்திய அரசு அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு 4-ல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டது. அந்த ஜி.எஸ.டி. சீர்திருத்தம் கடந்த மாதம் 22-ந் தேதி நவராத்திரி தொடங்கிய தினத்தன்று நாடு முழுவதும் அமல்படுதுதப்பட்டது.

    ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறைந்தது. மக்களின் வாங்கும் திறன் நாடு முழுவதும் அதிகரித்து இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. இது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி உள்ளது.

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என்று நான் தெரிவித்தேன். அதை உறுதிப்படுத்தும் வகையில் பண்டிகை நாளில் மக்கள் முக்கிய பொருட்களை குறைந்த விலைக்கு பெற்றனர். இதனால் மக்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து உள்ளனர்.

    தற்போது உலகம் முழுவதும் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவுகிறது. பல நாடுகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. ஆனால் இந்திய பொருளாதாரம் வலுவாக, சிறப்பானதாக உள்ளது.

    இந்திய பொருளாதாரத்தில் நிலையான தன்மையும், வளர்ச்சியும் இணைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற உள்ளது. இந்த பயணத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    வளர்ச்சியடைந்த, சுய சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனும் முதன்மை இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய வரலாற்று சாதனைகளுடன் அடுத்த கட்ட சீர்திருத்தங்களையும் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    ஒரே பாரதம் என்று உணர்வுடன் நாம் செயல்பட வேண்டும். அனைத்து மாநில மொழிகளுக்கும் நாம் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். சுகாதாரத்தை பேண வேண்டும். நமது உடல் நலத்தை கவனிப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    உணவில் எண்ணை பயன்படுத்துவதை 10 சதவீதம் குறைக்க வேண்டும். தினமும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மிகப்பெரிய வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நாம் பயணிக்க முடியும்.

    இன்றைய தீப ஒளியை ஏற்றி நாம் பிரகாசமாக்கும்போது அது மற்றொரு விளக்கில் ஏற்றப்படும்போது அதன் ஒளி குறையாது. மேலும் அதிகரிக்கவே செய்யும்.

    அதே உணர்வுடன் நாட்டு மக்கள் அனைவரும் நல்லிணக்கம், அமைதி, ஒத்துழைப்பு, நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.
    • இந்திய பக்தத்ர்களிடம் ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 வசூலிக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவிலை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் சைபர் மோசடி நடந்துள்ளது. ராமரின் பிரசாதம் என்று கூறி பக்தர்களிடம் இருந்து ரூ.3.85 கோடி மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஜனவரி 2024 இல் கருவறையில் ராமர் சிலை பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.

    அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பதாக காட்டிக் கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இருந்து தெய்வீக பிரசாதத்தை அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவதாக உறுதியளித்து ஒரு போலி வலைத்தளம் மூலம் லட்சக்கணக்கான பக்தர்களை ஏமாற்றியுள்ளார். அந்த நபர் காஜியாபாத்தை சேர்ந்த ஆஷிஷ் சிங் என்று தெரியவந்தது.

    ஆஷிஷ் சிங் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். பிராண பிரதிஷ்டை விழாவிற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் 'khadiorganic.com' என்ற போலி போர்ட்டலைத் தொடங்கினார். அதில் ராமர் கோவில் பிரசாதம், கோயிலின் புகைப்படங்கள் மற்றும் நினைவு நாணயங்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்தார்.

    இருப்பினும், அவர் இந்திய பயனர்களிடமிருந்து ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 "வசதி கட்டணம்" வசூலித்தார்.

    இதில் டிசம்பர் 19, 2023 முதல் ஜனவரி 12, 2024 வரை 6.3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களிடமிருந்து ஆர்டர்கள் பெறப்பட்டன.

    வலைத்தளம் உள்ளே செல்ல, டிஜிட்டல் முறையில் பல நுழைவு கட்டணங்கள் மூலம் அவர் பணம் பெற்றார். இவ்வாறு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ரூ.10.49 கோடி, அதில் ரூ.3.85 கோடி பிரசாத விநியோகத்திற்காக மட்டும் வசூலிக்கப்பட்டது.

    இந்த மோசடி வழக்கில், போலீசார் ஐபிசி பிரிவுகள் 420, ஐடி சட்டத்தின் பிரிவு 66D மற்றும் பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் பிரிவு 12(3) ஆகியவற்றின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • ராய்ச்சூரில் விடுதிக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
    • பாகல்கோட்டில் உள்ள விடுதிக்கு கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.

    கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.

    இவர், 17 வயது சிறுமி ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன்,லிப்ட் தருகிறேன் என கூறி அவரை காரில் அழைத்து ராய்ச்சூரில் விடுதிக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.

    தொடர்ந்து, பாகல்கோட்டில் உள்ள விடுதிக்கு கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.

    பின்பு பெலகாவியில் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் அந்த சிறுமியை  இறக்கிவிட்டார்.

    வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து பூசாரிக்கு எதிராக பாகல்கோட்டில் உள்ள நவநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்ஸோ பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். 

    • கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.
    • ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது.

    ராஜஸ்தானில் தலித் தலைவர் வந்து சென்றபின் கங்கை நீரை தெளித்து கோவிலை சுத்தப்படுத்திய பாஜக மூத்த தலைவர் ஞான் தேவ் அஹுஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    கடந்த வாரம் ராம நவமி தினத்தன்று, ஆல்வாரில் உள்ள ஒரு ராமர் கோவிலில் பிராண-பிரதிஷ்ட விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திகா ராம் ஜூலியும் பங்கேற்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞான்தேவ் அஹுஜா மறுநாள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ராமர் இருப்பதை மறுப்பவர்களின் வருகையால் கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.

    இதற்குப் பிறகு, ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது. இதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

    "இது எனது தனிப்பட்ட நம்பிக்கை மீதான தாக்குதல் மட்டுமல்ல, தீண்டாமை என்ற மனிதாபிமானமற்ற மனநிலையை ஊக்குவிக்கும் செயல். அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் நேரடி அவமதிப்பாகும்" என்று திகா ராம் ஜூலி தெரிவித்தார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தனது எக்ஸ் பக்கத்தில், '21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாகரிக சமூகத்தில் இத்தகைய குறுகிய மனப்பான்மை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சிந்தனையுடன் உடன்படுகிறதா என்று பாஜக பதிலளிக்க வேண்டும்?" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் சர்ச்சை வலுத்ததால் ஞான்தேவ் அஹுஜாவை பாஜக கட்சியில் இருந்து இன்று இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் ஞான்தேவ் அஹுஜா தனது செயலுக்கு மூன்று நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விளக்கம் அளிக்கத் தவறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    • ரூ.400 கோடியில் ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது.
    • அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

    அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்தியுள்ளது என்று அந்த அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய சம்பத் ராய், "2020 பிப்ரவரி 5 முதல் 2025 பிப்ரவரி 5 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரியை ராம ஜென்மபூமி அறக்கட்டளை செலுத்தியுள்ளது. இதில், ரூ.270 கோடி ஜிஎஸ்டி வரியாக செலுத்தப்பட்டது.

    அயோத்தியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. இது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மகா கும்பமேளாவின் போது 1.26 கோடி பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டு அயோத்திக்கு 16 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதில் 5 கோடி பேர் ராமர் கோயிலுக்கு வருகை தந்தனர்" என்று தெரிவித்தனர்.

    • ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட ராம ரத யாத்திரை வாகனத்தை, திருவனந்தபுரம் ஸ்ரீ ராம ஆசிரமம் ஏற்பாடு செய்தது.
    • ராமர், சீதை கோவிலின் மகிமைகளை பற்றி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட ராம ரத யாத்திரை வாகனத்தை, திருவனந்தபுரம் ஸ்ரீ ராம ஆசிரமம் ஏற்பாடு செய்தது. கடந்த அக்டோபர் 5-ந் தேதி அயோத்தியில் இருந்து ராமர், சீதை சிலையுடன் கிளம்பிய இந்த பக்தர் தரிசன வாகனம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிக்கு வந்தது.

    அப்போது ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மடத்தை சேர்ந்த சத்குருக்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ராம ரத யாத்திரைக்கு மலர் தூவி வரவேற்றனர். பின்னர் ராமர் சீதைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ராமர் சீதையை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து ரதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    திருவனந்தபுரம் ராம ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி சந்தான மகரிஷி சுவாமிகள் கூறுகையில், ராமர் ரத யாத்திரை வாகனம் அக்டோபர் 5-ந் தேதி அயோத்தியில் தொடங்கி பீகார், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், ஒடிசா, வெஸ்ட் பெங்கால், ஜார்கண்ட் உட்பட 27 மாநிலங்களுக்கு சென்று ராமர், சீதை கோவிலின் மகிமைகளை பற்றி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் டிசம்பர் 3-ந் தேதி அயோத்தி சென்றடைகிறது. இந்த வாகனம் 60 நாட்களில் இந்தியா முழுவதும் செல்ல இருக்கிறது என்றார். 

    • அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும்.
    • அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும். அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ்சரி மகாராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராமர் கோவில் கட்டும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2024 ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்பட்டு பக்தர்கள் வழிபடுதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்கும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் எங்கள் வேலையை செய்துள்ளோம் என தெரிவித்தார்.

    • ராம்தேவ் மலையில் மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்பட உள்ளது.
    • குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராமநகரில் உள்ள ராமதேவரா மலையில் ராமர் கோவில் கட்ட கர்நாடக அரசு முன் வந்தது. இதையடுத்து ராமர் கோவில் கட்டப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த கோவிலை வடிவமைக்கும் வரைபடம் உருவாக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த பணிகள் மாநில உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தலைமையில் நடைபெற்று வருகிறது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டு, ராமநகரில் கோவில் கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில், இந்த ராமர் கோவிலின் கட்டிடத்திற்கான வரைபடம் வீடியோவை மந்திரி அஸ்வத் நாராயண் வெளியிட்டுள்ளார். 2 நிமிடம் ஓடும் வீடியோவில் கோவிலின் வளாகம், மண்டபங்கள், கோபுரம், கோவில் மைய பகுதி கட்டிடங்களின் வரைபடம் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் தென் இந்தியாவின் ராமர்கோவில் என பக்தர்களால் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மலைக்கு ராமர் வந்து சென்றதாகவும், இதனால் இங்கு ராமர் கோவில் கட்டப்பட இருப்பதாகவும் அரசு தெரிவித்து உள்ளது.

    ராம்தேவ் மலையில் மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்பட உள்ளது. மலையில் சாலுமண்டபம், பிரமாண்ட கோபுரம், அனைத்து வசதிகளுடன் கூடிய படிக்கட்டு, சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், காட்சி கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அரசு முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை ஒதுக்கி உள்ளது. இந்த ராமர் கோவில் மூலம் மாவட்டத்தில் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

    • ராம்ஜானகி பாதை, பக்தி பாதை போன்றவற்றுக்கான செயல்திட்டம் தயாராகி விட்டது.
    • விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

    லக்னோ:

    அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் மிக நீண்ட போராட்டங்களுக்குப்பிறகு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அயோத்தி நகர் முழுவதும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு அயோத்தியில் நடந்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில் சகாதத்கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராம பாதைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

    ராம்ஜானகி பாதை, பக்தி பாதை போன்றவற்றுக்கான செயல்திட்டம் தயாராகி விட்டது. ராமஜென்ம பூமி பாதை 30 மீட்டரும், பக்தி பாதை 14 மீட்டரும் அகலம் கொண்டவை.

    விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

    ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோவில் செல்லும் பக்தர்கள் எளிதில் சென்று வருவதற்கு சாலை வசதிகள் முக்கியமானது என்பதால் அந்த பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

    பிரமாண்டமான கோவில் மற்றும் அதற்கான வசதிகளுக்காக அயோத்தி நகரின் இந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வியாபாரிகள் எத்தகைய தயக்கமும் இன்றி தங்கள் கடைகள் இருக்கும் இடத்தை வழங்கி வருகின்றனர்.

    இதற்காக வழங்கப்படும் இழப்பீடு தொகை தொடர்பாக புகார்கள் எதுவும் இல்லை. அயோத்தி நகர விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்படும் வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கப்படும்.

    ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஏராளமான கடைகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இந்த மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆந்திராவில் 108 அடி உயர ராமர் சிலையை அமைக்க அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
    • ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மூலம் 500 கோடி ரூபாய் செலவில் 108 அடி உயர பஞ்சலோக சிலையாக இது உருவாகிறது.

    திருப்பதி:

    அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில், ஆந்திராவில் 108 அடி உயர ராமர் சிலையை அமைக்க அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள மந்ததிராலயத்தில் துங்கப்பத்ரா நதிக்கரையில் புகழ்பெற்ற ராகவேந்திரர் சாமி கோவில் உள்ளது. இந்த நகரில் பிரமாண்டமாக ராமர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம் 10 ஏக்கர் நிலத்தை ராமர் சிலை கட்டுவதற்காக நன்கொடையாக வழங்கியது. இதில் அழகிய பூங்கா அமைப்புடன் உலகிலேயே உயரமான 108 அடி உயர பஞ்சலோக ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.

    ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மூலம் 500 கோடி ரூபாய் செலவில் 108 அடி உயர பஞ்சலோக சிலையாக இது உருவாகிறது.

    குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் வஞ்சி சுதார் இந்த சிலையை வடிவமைக்கிறார்.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரமாண்ட ராமர் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த ராமர் சிலை பிரமாண்டமானது. இது மந்திராலயம் நகரத்தை பக்தி உணர்ச்சியுடன் மூழ்கடிக்கும், "நமது செழுமையான மற்றும் பண்பாடு நாகரீக உறுதிப்பாட்டில் மக்களைத் தளராமல் இருக்க ஊக்குவிக்கும்.

    இந்த சிலை பிராந்தியத்தில் சனாதன மதத்தை பரப்புவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

    ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் சிலை அமைக்கப்படவுள்ளது. இந்து கலாச்சாரத்தில் 108 மிகவும் புனிதமான எண்.

    2½ ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என அமித்ஷா தெரிவித்தார்.

    விழாவில் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள், ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×