என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
    • இது சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.

    2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆன இது 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஆகும்.

    தேர்தலை ஒட்டி இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எந்த பிரத்யேக அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்று பட்ஜெட் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மத்திய பாஜக அரசை பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவு கூர வைக்க தேர்தலால் கூட முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    • காங்கிரசுடனான கூட்டணியில் எந்த மோதலும் இல்லை.
    • எந்த கட்சி கூட்டணியில் இணையும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்.

    நெல்லை:

    நெல்லையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறது.

    நெல்லையில் மக்கள் திரளாக வந்து மனுக்களை அளிப்பது சந்தோஷமாக உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதை இது காட்டுகிறது. அடுத்ததாக அமையப் போவதும் தி.மு.க ஆட்சி தான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன் வைக்கிறார்கள்.

    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க. தான் என்பதை மக்கள் அறிவார்கள். எங்கள் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் நிச்சயமாக வந்து இணைய வாய்ப்புகள் உள்ளது.

    ஆனால் அது குறித்து எங்களின் தலைவர் மு.க ஸ்டாலின் தான் இறுதி முடிவை எடுப்பார். கருத்துக்கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் தேர்தல் களம் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருப்பதை எங்களால் கண்கூடாக பார்க்க முடிகிறது. மக்களின் பேராதரவு எங்களுக்கே இருக்கிறது. சமீபத்தில் ராகுல் காந்தி உடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்தது. காங்கிரஸ் இயக்கத்தோடு தி.மு.க. பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை. கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணி குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு.

    டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி சந்தித்துள்ளார்.

    கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திமுக- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எம்பி கனிமொழி, ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
    • மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. மேலும் மதுக்கடைகள் மூடப்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று தஞ்சை மத்திய, வடக்கு ,தெற்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி அனைத்து தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு அறிந்து மனு வாங்கினார் .

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்காக, தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் முதலமைச்சர் அனுப்பியிருக்கிறார். அதை ஒட்டி, முதலிலே ஓசூரிலே இந்த தேர்தல் அறிக்கை குழு சென்று அங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.

    இன்று தஞ்சை, திருவாரூர் ,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தஞ்சையில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் விவசாயிகள், வியாபாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து மனு வாங்கி உள்ளோம். இன்று மாலை திருச்சியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்று அங்கிருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து, இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக உருவாக்குவதற்கு உண்டான வேலைகளைச் செய்து வருகிறோம்.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். ஆனால் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படாது என்று. நிச்சயமாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுமட்டுமில்லாமல், அடுத்த ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான். அதனால் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றப்போவதும் நாங்கள் தான்.

    கடந்த 2006-ல் தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்கப்பட்டது. இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்.

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க அரசு தொடர்ந்து போராடி வருகிறது. நிச்சயமாக ஒன்றியத்திலே ஆட்சி மாற்றம் வரும் பொழுது, அதிலே நாங்கள் சொல்லக்கூடிய நிலையில் நிச்சயமாக மாற்றத்தை எங்களால் பண்ண முடியும். அதுவரை நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்.

    மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. மேலும் மதுக்கடைகள் மூடப்படும்.

    நேற்று தஞ்சை செங்கிப்பட்டியில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமானதால் மாநாட்டுப் பந்தலுக்குள் கூட வர முடியாத அளவில் பெண்கள் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டார்கள். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாக, அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஒரு ஆட்சியாக இருக்கிறது. அதனால் பெண்கள் எங்களுடைய பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு வரும்
    • தமிழ்நாட்டின் “குலவிளக்கு” -களான தாய்மார்களுக்கு ரூ.2000 மாதா மாதம் எடப்பாடியார் 2026 ஆட்சியில் கொடுத்தே தீருவார்

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி சார்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மாநாடு' இன்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்பி கனிமொழி, 

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே பெண்களுக்கான ஆட்சியை நடத்தமுடியும் என உங்களுக்கு நன்றாக தெரியும். யார் வேண்டுமானாலும் சொல்லலாம், நான் பத்தாயிரம் கொடுக்கிறேன், 2 ஆயிரம் கொடுக்கிறேன், குலவிளக்கு திட்டம் என எதை வேண்டுமானாலும் சொல்லலாம். முன்பு ஸ்கூட்டி கொடுப்பேன் எனக்கூறினார்கள். வந்ததா? எதை சொன்னாலும் எதுவும் வராது என அனைவருக்கும் தெரியும். ஆனால் மகளிர் உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரும்." எனப் பேசியிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில்,

    பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க கனிமொழி அவர்களே! அதிமுக ஒன்றும் திமுக அல்ல, கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட.. Scooty- um அன்றே கொடுத்தார் எடப்பாடியார். தமிழ்நாட்டின் "குலவிளக்கு" -களான தாய்மார்களுக்கு ரூ.2000 மாதா மாதம் எடப்பாடியார் 2026 ஆட்சியில் கொடுத்தே தீருவார்…!

    வெல்லும் பெண்கள் - என்று பெயர் வெச்சிருக்கீங்க, பொய்யை மட்டும் சொல்லி , உங்களை நம்பி வந்தவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிக்காதீங்க! (பிகு ; மற்றவங்க ஏமாற மாட்டாங்க, ஏற்கனவே நீங்கள் சொன்ன மதுஒழிப்பு, நகைகடன் தள்ளுபடி போன்ற தொடர் பொய்கள் , மக்கள் மனசுல வந்து போகுமில்ல) எனக் குறிப்பிட்டுள்ளது. 


    • ஆண்டுமுழுவதும் ஆளுநர்களுக்கு ரூ.700 கோடி செலவுசெய்து கொண்டிருக்கிறோம்.
    • தமிழ்நாடு ஆளுநருக்கு குடியரசு என்றால் என்னவென்றே தெரியாது.

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    இதில் பேசிய கனிமொழி, 

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே பெண்களுக்கான ஆட்சியை நடத்தமுடியும் என உங்களுக்கு நன்றாக தெரியும். யார் வேண்டுமானாலும் சொல்லலாம், நான் பத்தாயிரம் கொடுக்கிறேன், 2 ஆயிரம் கொடுக்கிறேன், குலவிளக்கு திட்டம் என எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எதை சொன்னாலும் எதுவும் வராது என அனைவருக்கும் தெரியும். ஆனால் மகளிர் உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரும்.

    தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் டபுள் எஞ்சின், டபுள் எஞ்சின் எனக் கூறுகிறார்கள். எனக்கு தெரிந்த அந்த எஞ்சின் வேலைசெய்யாத என்ஜினாகத்தான் உள்ளது.தேராத, பழுதடைந்த என்ஜினாகத்தான் இருக்கிறது. குஜராத்தில் மொத்த அரசு மருத்துவக்கல்லூரிகள் ஆறுதான். ஆனால் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன.

    அதற்கான படுக்கை வசதிகள் கிட்டதட்ட 1 லட்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கின்றன. அதுபோல் தமிழ்நாட்டில்தான் தொழில்வளர்ச்சி அதிகம். கிட்டத்தட்ட 38 ஆயிரம் தொழிற்சாலைகள் மேல் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. அதில் 42% பெண்கள் பணிபுரிகின்றனர்.

    மின்னணு ஏற்றுமதியில் முதல் இடம். ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம். வேறு எந்த டபுள் எஞ்சினும் இதில் இல்லை. பெண்களுக்கான குற்றங்களும் அங்குதான் அதிகம். சமூக முன்னேற்றக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம். பெரிய மாநிலங்களில் முதலிடம் தமிழ்நாடுதான்.

    இன்று ஒரு டாலருக்கு 92 ரூபாய் நாம் கொடுக்கவேண்டும். யார் எந்த கனவில் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதற்கான பாடத்தை தமிழ்ப் பெண்கள் கூறுவார்கள். தமிழ்நாடு ஆளுநருக்கு குடியரசு என்றால் என்னவென்றே தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் தமிழ்நாடு உரையை வாசிக்காததற்கு ஏதேனும் ஒரு காரணம். வரவில்லை என்று முன்னரேக் கூறலாம். ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த அரசை அவமதிக்க வேண்டும் என்று செய்யும் நிலையை பார்க்கிறோம்.

    ஆளுநர் உரை வேண்டாம் என அரசியலமைப்பை மாற்றவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் என்னை பொறுத்தவரை ஆளுநரே வேண்டாம். அவர்களால் எந்தப் பலனும் இல்லை. இதனைத்தான் திமுகதான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறது. ஆண்டுமுழுவதும் ஆளுநர்களுக்கு ரூ.700 கோடி செலவுசெய்து கொண்டிருக்கிறோம். இதனை எத்தனை பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு பயன்படுத்தலாம்.

    தேர்தல் நேரத்திற்கான சுற்றுலா பிரதமர்தான் மோடி. சமீபத்தில் தமிழ்நாட்டில் பேசிய பிரதமர் அனைத்துக் கட்சிகளின் பேரையும் கூறினார். ஆனால் அதிமுகவின் பெயரை குறிப்பிடவில்லை. திமுகவிற்கு என்ன கவலை என்றால், கடைசிவரை அதிமுக சொல்லாத பெயராகவே போய்விடப் போகிறது. ஜாக்கிரதையாக இருங்கள். கட்சியின் பெயரையே நிராகரிக்கும் இடத்தில் அதிமுகவின் கூட்டணி உள்ளது.

    தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஆளாக்கிய கட்சிக்கு துரோகம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என தெரிவித்தார். 

    • அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று.
    • இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம்.

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எண்ணில்லா போராட்டங்களும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களும் செய்து அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று. இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம்.

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம்.
    • ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார்.

    இந்தி திரைப்படத் துறையில் தனக்கு பாகுபாடு கட்டப்பட்டதாக அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.

    அண்மையில் கொடுத்த பெட்டியின் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ".கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மதம், மொழி மற்றும் அடையாளத்தைத் தாண்டிய கலையைக் கொண்ட ஒரு இசைக்கலைஞரை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கியதும், இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மௌனமும் மிகவும் கவலையளிக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இந்த நாட்டின் இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு படைப்பாளி மட்டுமல்ல, இந்தியாவின் முதன்மை கலாச்சாரத் தூதராகவும் இந்திய விழுமியங்களின் பிரதிநிதியாகவும் திகழ்கிறார். அவர் பாராட்டுக்கும் நன்றியுணர்ச்சிக்கும் தகுதியானவர், பாரபட்சத்திற்கும் வெறுப்பிற்கும் அல்ல. இத்தகைய சகிப்பின்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்மைத்துவ சமூகத்தில் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

      தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

      இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

      எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

      2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

      இந்நிலையில் கனிமொழிக்கு த.வெ.க. தலைவர் விஜய் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

      த.வெ.க.-விற்கும் தி.மு.க.-விற்கும் தான் போட்டி என்று விஜய் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு, விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி.
      • கழகத் துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

      தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

      பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் பாராளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி - என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • கனிமொழி அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
      • 2 நாட்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வந்துள்ளார்.

      தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கனிமொழி, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

      இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

      2 நாட்கள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள அமித்ஷா கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

      • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்தார்.
      • திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது.

      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,

      திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது என்று கூறி இருந்தார்.

      இந்நிலையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

      தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

      ×