என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த முடியவில்லை.
    • ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.

    ரஷ்யாவிற்கு அருகே 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசிய ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்துள்ளார். .

    உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் சண்டை உட்பட பல போர்களை தடுத்து நிறுத்தியதாக தம்பட்டம் அடுத்துவரும் டிரம்ப் முயற்சித்தும் கூட உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த முடியவில்லை.

    இதனால் கோபமடைந்த டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாக குறைத்தார்.

    ஆகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.

    மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். இந்தியாவும், ரஷியாவும் இறந்த பொருளாதாரங்கள் (Dead Economies) என்று விமர்சித்தார்.

    இதனிடையே, டிரம்பின் கருத்துக்கு ரஷிய முன்னாள் அதிபரும், ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ் தனது எக்ஸ் பக்கத்தில், "ரஷியா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல. ஒவ்வொரு காலக்கெடுவும் மிரட்டல், போருக்கான பாதை. இந்தியா, ரஷியாவின் இறந்த பொருளாதாரங்கள் குறித்த டிரம்ப்பின் பேச்சால் அவர் ஆபத்தான எல்லைக்குள் நுழைகிறார். அவர் இல்லாத இறந்த கைகள் (dead hand) எவ்வளவு ஆபத்தானது பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.

    இறந்த கைகள் (dead hand) என்பது ரஷியா - அமெரிக்கா பனிப்போரின்போது ரஷியாவால் அமைக்கப்பட்ட அணு ஆயுத தாக்குதல் கட்டமைப்பாகும். இந்த கட்டமைப்பு, ரஷியா மீது அமெரிக்கா அணு ஆயுத தாக்குதல் நடத்தி ரஷியாவின் தலைவர்கள் உயிரிழந்தபோதும், அணு ஆயுத கட்டளைகளை அளிக்காதபோதும், தன்னிச்சையாக ரஷியாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பனிப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அணு ஆயுத கட்டமைப்பு தற்போதும் செயல்பாட்டில் உள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷியா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவின் முட்டாள்தனமான, ஆத்திரமூட்டும் மிரட்டல்களுக்கு பதிலடியாக அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷியா நோக்கி நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தைகள் மிகவும் முக்கியம். அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். டிமிட்ரியின் தற்போதைய வார்த்தைகள் அதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்ததாது என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இதனை அடுத்து டிரம்பின் மிரட்டலுக்கு ரஷியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய ரஷிய எம்.பி. விக்டர் வடலொட்ஸ்கெ, "அணு ஆயுதம் தாங்கிய அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை விட அணு ஆயுதம் தாங்கிய ரஷிய நீர்மூழ்கி கப்பல்கள் அதிகம். டிரம்ப் உத்தரவிட்ட அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களும் எங்கு உள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு தெரியும். எனவே, டிரம்ப்பின் கருத்துக்கு ரஷியாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் நிலைநிறுத்தி பதிலடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்கி வருகிறது.
    • இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், "இந்தியா இனி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என கேள்விப்பட்டதாகவும், அப்படி நடந்தால் உண்மையில் அது நல்ல நடவடிக்கை" என்று தெரிவித்தார்.

    • அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது.
    • இங்கு சுமார் 1,500 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தச் சிறையில் கலீல் பிரையன் (30) என்ற கைதியும் அடைக்கப்பட்டு இருந்தார். இவரது தண்டனை காலம் முடிந்த நிலையில் கடந்த வாரம் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் பெயர் குழப்பத்தால் அதே பெயருடைய மற்றொரு கைதியை சிறை அதிகாரிகள் விடுதலை செய்தனர்.

    இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 2 சிறைத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதே சிறையில் இருந்துதான் கடந்த மே மாதம் 10 கைதிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

    • கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
    • சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை’ என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டார்.

    மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்திடமிருந்து வந்த 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,757 கோடி) சம்பள வேலை வாய்ப்பை நிராகரித்து கவனம் பெற்றுள்ளார் ஓபன்ஏஐ முன்னாள் ஊழியர் மீரா முராதி (36 வயது)

    அல்பேனியாவை சேர்ந்த மீரா முராதி (Mira Murati) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர்.

    ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

    2018 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்ந்த அவர், குறுகிய காலத்தில் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.

    சாட்ஜிபிடி, டால்-இ மற்றும் கோடெக்ஸ் போன்ற உலகை மாற்றியமைத்த திட்டங்களை வழிநடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

    சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டபோது, மீரா முராதி மூன்று நாட்களுக்கு இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

    சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை' என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்த மீரா, சமூகப் பொறுப்புடன் ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டும் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிய மீரா முராதி, தனது "திங்கிங் மெஷின்ஸ் லேப்" Thinking Machines Lab) நிறுவனத்தை தொடங்கினார்.  

    • சிரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு 41% வரியை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • கனடா மீது முன்னர் 25 சதவீதமாக விதிக்கப்பட்ட வரியும் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

    பல நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 41% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%, தைவானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு 30% ஆகியவை அடங்கும்.

    இது தவிர, சிரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு 41% வரியை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    லாவோஸ் மற்றும் மியான்மர் மீது 40 சதவீதமும், சுவிட்சர்லாந்து மீது 39 சதவீதமும், செர்பியா மற்றும் ஈராக் மீது 35 சதவீதமும், அல்ஜீரியா மற்றும் லிபியா மீது 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர, கனடா மீது முன்னர் 25 சதவீதமாக விதிக்கப்பட்ட வரியும் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய வரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்தார்.
    • டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் ஒருமுறை அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    வியாழக்கிழமை, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட், உலகெங்கிலும் உள்ள பல மோதல் மண்டலங்களில் பல அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களுக்கு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறினார்.

    டொனால்டு டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார். அதனால்தான் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று லெவிட் தெரிவித்தார்

    இதன் போது, டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகவும் லெவிட் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.  

    • விமானம் 90 வினாடிகளில் 38,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து 35,775 அடிக்கு கீழே இறங்கியது.
    • சுமார் 9 மணி நேர பயணத்தில், 2 மணி நேரம் கடந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் இருந்த ஆம்ஸ்டர்டாமிற்குச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் டர்புலன்ஸ் (turbulence) காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை, 275 பயணிகள் மற்றும் 13 விமானக் குழுவினருடன் சென்ற இந்த விமானம், நடுவானில் காற்று அலைகளால் தடுமாற தொடங்கிய நிலையில் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

    Flightradar24 என்ற விமான கண்காணிப்பு வலைத்தளத்தின் தரவுகளின்படி, விமானம் 90 வினாடிகளில்38,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து 35,775 அடிக்கு கீழே இறங்கியது.

    சுமார் 9 மணி நேர பயணத்தில், 2 மணி நேரம் கடந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் மினியாபோலிஸில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    அங்கு மருத்துவக் குழுவினர் பயணிகளுக்கும் விமானக் குழுவினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்களில் 25 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 

    • பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.
    • பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் சிரமமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.

    அமெரிக்க நேரப்படி, இன்று காலை சுமார் 6:30 மணியளவில், கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது.

    விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானி பாராசூட்டின் உதவியுடன் வெளியே குதித்து தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

    சம்பவத்தில் காயமடைந்த விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சம்பவ இடத்தில் பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் சிரமமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

    • இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • இந்திய நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

    அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் :

    1. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

    2. குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்

    3. ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்

    4. ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ

    5. பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்

    6. காஞ்சன் பாலிமர்ஸ்

    • பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய டிரம்ப், பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம். இதன்படி, பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள போகிறோம். இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

    யாருக்கு தெரியும், ஒரு நாள் இந்தியாவுக்கு கூட பக்ஷிதன் எண்ணெயை விற்பனை செய்ய கூடும் என்று டிரம்ப் கிண்டலாக கூறினார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று தொடர்ந்து டிரம்ப் கூறி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிப்பு.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    வரிவிதிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் அறிவித்துள்ளார்.

    ×