என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் தேதி நடக்கிறது.

    லாகூர்:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்குன் பாகிஸ்தான் அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. இதில் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் அணி கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், துணை கேப்டனாக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் தொடருக்கான அணியில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    • பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தக எல்லையாக டோர்காம் உள்ளது.
    • இருதரப்பு பிரச்சனையால் 11 நாட்களுக்கு மேலாக இந்த எல்லை மூடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள டோர்காம் முக்கிய எல்லைப் பகுதியாக திகழ்ந்து வருகிறது. இரு நாட்டு வர்த்தகத்திற்கும் இது முக்கிய எல்லையாகும். இரு பக்கங்களில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் செல்லும்.

    இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்கள் எல்லை பாதுகாப்பு நிலையம் (border post) அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் டோர்காம் எல்லையில் புதிய எல்லை நிலையம் கட்டி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 11 நாட்களாக டோர்காம், சமான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினர் டோர்காம் எல்லையில் பாகிஸ்தான் எல்லை நிலையங்கள்களை (Border Post) குறிவைத்து தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசிடம் இருந்து உடனடியாக பதில் ஏதும் வரவில்லை.

    டோர்காம் எல்லையின் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கடுமையாக வெப்பத்தில் மக்கள் எல்லையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • ஜமியாத் உலேமா இஸ்லாம் (JUI) அமைப்பின் தலைவர் ஹமிதுல் ஹக் ஹக்கானி உயரிழந்துள்ளார்.
    • கைபர் பகதுன்க்வா முதல்வர் மற்றும் கவர்னர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பகதுன்க்வாவில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த குண்டு வெடிப்பில் ஜமியாத் உலேமா இஸ்லாம் (JUI) அமைப்பின் தலைவர் ஹமிதுல் ஹக் ஹக்கானி உயரிழந்துள்ளார். ஹமிதுல் ஹக் ஹக்கானி 1968-ம் ஆண்டு, அவரது தந்தை உயிரிழந்த நிலையில் ஜே.யு.ஐ. அமைப்பின் தலைவர் ஆனார்.

    இந்த தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கும் என கைபர் பகதுன்க்வா ஐ.ஜி. தெரிவித்துள்ளார். ஹமிதுல் ஹக்கை கொலை செய்யும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

    கைபர் பகதுன்க்வா முதல்வர் மற்றும் கவர்னர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 325 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. லாகூரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 325 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்ட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் மாபெரும் சாதனை ஒன்றை ஜோப்ரா ஆர்ச்சர் தகர்த்துள்ளார்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த போட்டிகளில் ஆடி 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற ஆண்டர்சனின் சாதனையை ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தற்போது ஆர்ச்சர் 30 போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 325 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் இப்ராகிம் ஜத்ரன் 177 ரன்கள் விளாசினார்.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டியில் பி பிரிவில் இடம்பிடித்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது.

    37 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் இப்ராகிம் ஜட்ரன் சிறப்பாக விளையாடி 106 பந்தில் சதம் விளாசினார். அவர் 146 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 177 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

    அஸ்மதுல்லா 41 ரன்னும், ஹஷ்மதுல்லா ஷஹிடி, முகமது நபி தலா 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 326 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் ஜோ ரூட் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 120 ரன்னில் அவுட்டானார். 5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்-ஜாஸ் பட்லர் ஜோடி 83 ரன்கள் சேர்த்தனர். பென் டக்கெட், ஜாஸ் பட்லர் தலா 38 ரன்கள் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர் ஜோடி அதிரடியாக ஆடியது. ஓவர்டன் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இங்கிலாந்து 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன், இங்கிலாந்து அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மதுல்லா ஒமர்சாய் 5 விக்கெட்டும், முகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணியை 1992 இல் உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
    • சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரை சந்தித்துள்ளார்.

    நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு பாகிஸ்தான் அணி இப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025லிருந்து வெளியேறியுள்ளது.

    இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன் பங்குக்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணியை 1992 இல் உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியை தொடங்கிய அவர் 2018 இல் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் ஊழல் வழக்கில் 2023 இல் கைதானார். கடந்த மாதம் பாக். நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இவ்வழக்கில் இம்ரானின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இலிருந்து வெளியேறியபின் இம்ரான் கான் சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரை சந்தித்துள்ளார்.

    தங்களது சந்திப்பு குறித்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அலீமா, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு இம்ரான் கான் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர்கள் சிறையில் அந்த ஆட்டத்தை பார்த்தார்.

    முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு பிடித்தவர்களுக்குக் கொடுக்கப்படும்போது கிரிக்கெட் அழிந்துபோகும் என்று இம்ரான் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியின் செயல்பாடுகள் குறித்தும் இம்ரான் விமர்சித்து  கேள்வி எழுப்பியதாக அலிமா கூறினார். 

     

    • ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவரில் 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 351 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து 165 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 47.3 ஓவரில் 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்னும், மேக்ஸ்வெல் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.

    ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டில் இந்திய அணி நிர்ணயித்த (321/6) இலக்கை இலங்கை அணி (322/3) ரன் எடுத்து வெற்றிபெற்று இருந்தது.

    ஐ.சி.சி., ஒருநாள் தொடரில் (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) இது சிறந்த சேஸ் ஆனது.

    இதேபோல், இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் சிறந்த சேஸ் ஆகவும் இது அமைந்தது. சிட்னியில் 2011-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா 334/8 ரன் எடுத்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் சிறையிலிருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
    • அவர்கள் நேற்று அடாரி-வாகா எல்லையை அடைந்தனர் என தகவல் வெளியானது.

    இஸ்லமாபாத்:

    இந்திய கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கடந்த மாதம் 1-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியல்களின்படி பாகிஸ்தானில் மொத்தம் 266 இந்திய கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 49 சிவில் கைதிகள் மற்றும் 217 மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் தண்டனை காலம் முடிந்த 22 இந்திய மீனவர்களை நேற்று கராச்சி மாலிர் சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவித்தனர். அவர்கள் அடாரி-வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல் வெளியானது.

    இதில் 18 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் டையூ பகுதி மற்றும் ஒருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 351 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட்சதமடித்து அசத்தினார். அவர் 165 ரன்களில் அவுட் ஆனார். ஜோ ரூட் அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட் ஆனார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி 69 ரன்னில் வெளியேரினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் லபுசேன்47 ரன்னில் வெளியேறினார்.

    ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி சதம் கடந்து அசத்தினார். இறுதிவரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்னும், மேக்ஸ்வெல் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 315 ரன்கள் குவித்தது.
    • சிறப்பாக ஆடிய ரியான் ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கராச்சி:

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் இன்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் சதமடித்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் பவுமா 58 ரன்னும், வேன் டெர் டூசென் 52 ரன்னும், எய்டன் மார்க்ரம் 52 ரன்னும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது நபி 2 விக்கெட்டும், ஃபரூக்கி, ஹஷ்மதுல்லா ஒமர்சாய், நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    ரஹ்மத் ஷா கடைசி வரை போராடினார். அரை சதம் கடந்த அவர் 90 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், நிகிடி, முல்டர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 320 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 260 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    கராச்சி:

    8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது.

    கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தது. டாம் லாதம் 104 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். வில் யங் 113 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    வில் யங்-டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது. பிலிப்ஸ் 39 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்கருடன் 61 ரன்கள் குவித்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அப்ரார் அகமது 1 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவூத் ஷகில் 6 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய முகமது ரிஸ்வான் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பகர் சமான் 22 ரன்னில் வெளியேறினார்.

    விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்தாலும் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 64 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சல்மான் ஆகா அதிரடியாக ஆடி 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இணைந்த பாபர் அசாம்-சல்மான் ஆகா ஜோடி 58 ரன்கள் சேர்த்தது.

    கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 69 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், பாகிஸ்தான் 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர், வில்லியம் ரூர்கி தலா 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
    • பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் நடக்கிறது.

    லாகூர்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

    2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

    9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என்பதை உலகம் நம்புகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரமீஸ் ராஜா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என்பதும், நிர்வாகக் கண்ணோட்டத்தில் அத்தகைய உலகளாவிய நிகழ்வை வழங்குவதற்கு வல்லமை வாய்ந்தது என்பதையும் உலகை ஏற்கவைப்பது தீவிர கடின உழைப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. உலகம் இறுதியில் நமது பார்வையைப் புரிந்து கொண்டது என தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×