என் மலர்
நீங்கள் தேடியது "militantskilled"
- பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
- அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் துப்பாக்கி சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 4 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்.
விசாரணையில், துப்பாக்கி சண்டையில் பலியான பயங்கரவாதிகள் தெஹ்ரிக்-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது இன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எதிர் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Kulgamencounter #militantskilled
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி அமர்நாத் யாத்திரைக்காக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளிலும், பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளிலும் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் உள்ள சட்டர் பன் பகுதியில் உள்ளூர் போலீசார், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இன்று நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணியில் இருந்தபோது அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு இருதரப்பினருக்கு இடையில் தாக்குதல் நடந்து வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Kulgamencounter #militantskilled






