search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulgamencounter"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
    ஜம்மு:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட கெல்லம் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த மோதலின்போது சுமார் 10 பேர் காயமடைந்ததாகவும் தெரியவரும் நிலையில் ராணுவத்தரப்பில் உண்டான இழப்பு தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #militantsencounter #securityforcesencounter  #Kulgamencounter
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது இன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எதிர் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Kulgamencounter #militantskilled
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி அமர்நாத் யாத்திரைக்காக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளிலும், பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளிலும் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் உள்ள சட்டர் பன் பகுதியில் உள்ளூர் போலீசார், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இன்று நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணியில் இருந்தபோது அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு இருதரப்பினருக்கு இடையில் தாக்குதல் நடந்து வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   #Kulgamencounter #militantskilled
    ×