என் மலர்tooltip icon

    உலகம்

    • பாகிஸ்தானில் இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜாகிர் நாய்க் ஆச்சார்யரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்ல வந்தார்.

    தொலைக்காட்சி நேரலைகளில் எதிரெதிர் கருத்து கொண்டவர்கள் காரசாரமாக விவாதிப்பதை பார்த்திருப்போம். சில நேரங்களில் அவை வார்த்தைப் போராக வெடித்து கைகலப்பாக மாறும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது. அப்படி ஒரு விவாத நிகழ்ச்சி அடிதடியில் முடிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்இஸ்லாமிய மத போதகரும், இந்து மத ஆசார்யரும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆச்சார்யா விக்ரமாதித்யா என்ற அந்த உள்ளூர் பிரபலம், நாங்கள்[இந்து மாதத்தில்] அனைவரையும் மனிதர்களாக மாற்ற சொல்லித் தருகிறோம், மிருகங்களாக மாற்ற அல்ல.

    ஒரு மனிதன் மற்றொருவரிடம் எப்போதும் தவறாக நடக்கவே கூடாது என்று பேசிக்கொண்டிருந்தார் . அப்போது எதிர் விவாதம் செய்யும் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாய்க் உடனே அவரை கோபப்படுத்த எண்ணி பகவான் கிருஷ்ணருக்கு 16,000.. என்று சொல்லி முடிக்கும் முன்னர் அவர் மீது பாய்ந்த ஆச்சார்யா விக்ரமாதித்யா கன்னத்தில் அரைந்து சரமாரியாகத் தாக்கினார்.

    பின் இருவரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சமாதானம் செய்தார். புராணக் கதை ஒன்றின்படி கிருஷ்ணருக்கு 16,000 மனைவிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜாகிர் பேசியதே ஆச்சார்யர் பொறுமையிழக்க காரணம் ஆகும். 

    • அவர்கள் நமது அணு சக்தியை தாக்காத வரையில் நாம் தாக்க வேண்டாம் என்று பைடன் கூறுகிறார்.
    • முதலில் அணு சக்தியை தாக்குங்கள், அதன்பிறகு மற்றதைப் பற்றி கவலைப்படுங்கள்.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. இந்த திடீர் தாக்குதலால் நிலை தடுமாறிய இஸ்ரேல் பதில் தாக்குதலுக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வருகிறது. ஈரானின் எண்ணெய் வயல்களையும், அணு உலையையும் தாக்கும் திட்டமும் இஸ்ரேலிடம் உள்ளது.

    ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளால் அமெரிக்கா அதை ஆமோதிக்க தயக்கம் காட்டுகிறது. வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் பேசிய அதிபர் ஜோ பைடனும் ஈரான் அணு உலையை தாக்குவதற்கு பதிலாக வேறு வழிகளை யோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபரும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுபவருமான டிரம்ப் மாறுபட்ட கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

    நேற்றைய தினம் வடக்கு கரோலினா பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட டிரம்ப் பேசியதாவது, ஈரானை தாக்கலாமா என்று அவரிடம் [ஜோ பைடனிடம்] கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் நமது அணு சக்தியை தாக்காத வரையில் நாம் தாக்க  வேண்டாம் என்று பைடன் கூறுகிறார்.

    அவர் [பைடன்] இந்த விஷயத்தில் தவறாக புரிதலுடன் இருக்கிறார். நீங்கள் தாக்குதல் நடத்த வேண்டியதே அணு சக்தி மீதுதான். அணு ஆயுதங்கள் தானே உலகிலேயே அதிக ஆபத்துடைய ஒன்று. எனவே முதலில் அணு சக்தியை தாக்குங்கள், அதன்பிறகு மற்றதைப் பற்றி கவலைப்படுங்கள். அவர்கள் [ஈரான்] அணு ஆயுதத்தைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தால் நிச்சயம் பயன்படுத்தியே தீர்வார்கள் என்று இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவியரை வழங்கியுள்ளார்.

     

    ஈரானில் ஒரே ஒரு அணுசக்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அணு உலை உள்ளிட்ட அணுசக்தி சார்ந்தவை இயங்கி வருகிறன. தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் ஐஸ்பஹான் நகரில் வளைகுடா கடற்கரை அருகே அந்த அணுசக்தி நிலயமானது செயல்பட்டு வருகிறது. ரஷியாவுடன் இணைந்து கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த அணு உலை உருவாக்கப்பட்டது.

    • இந்த தாக்குதல், மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்.
    • அகழி தோண்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்ட போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    புர்கினா பாசோவில் உள்ள பர்சலோகோ நகரில் ஆகஸ்ட் மாதம் அல்-கொய்தாவுடன் தொடர்புடையவர்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட பிரெஞ்சு அரசாங்கத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருந்த இந்த தாக்குதல், மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்.

    ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (ஜேஎன்ஐஎம்) உறுப்பினர்கள், மாலியை தளமாகக் கொண்ட அல்கொய்தாவின் துணை அமைப்பான மற்றும் புர்கினா பாசோவில் செயல்படுகிறார்கள், அவர்கள் இரு சக்கர வாகனங்களில் பர்சலோகோவின் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்றபோது கிராம மக்களை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் குடும்பத்தை இழந்த ஒருவர் கூறுகையில், மூன்று நாட்களாக நாங்கள் உடல்களை சேகரித்துக் கொண்டிருந்ததாக கூறினார்.

    போராட்டக்காரர்களிடமிருந்து பாதுகாக்க நகரத்தைச் சுற்றி பரந்த அகழி வலையமைப்பைத் தோண்டுமாறு உள்ளூர்வாசிகளுக்கு ராணுவத்தால் கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அகழி தோண்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்ட போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    JNIM கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்திற்கு ஆதரவளிப்பதற்கு எதிராக பொதுமக்களை எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    2015-ம் ஆண்டு இந்த மோதல் தொடங்கியதில் இருந்து, 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புர்கினா பாசோவில் இடம்பெயர்ந்துள்ளனர்.

    • கடந்த 10 நாட்களில் 3 லட்சம் லெபனானியர்கள் அண்டை நாடான சிரியாவுக்கு படையெடுத்துள்ளனர்.
    • லெபனான் - சிரியாவை இணைக்கும் மஸ்னா எல்லை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

    லெபனான் நிலவரம்  

    லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 2000 துக்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலைக்கு பிறகும் இஸ்ரேல் அவ்வமைப்பை முற்றிலுமாக அளிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    இதனால் நடக்கும் தாக்குதல்களில் லெபனான் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதுவரை 12 லட்சம் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இதில் கடந்த 10 நாட்களில் 3 லட்சம் பேர் அண்டை நாடான சிரியாவுக்கு படையெடுத்துள்ளனர்.

     

     மஸ்னா எல்லை

    இந்நிலையில் லெபனான் - சிரியாவை இணைக்கும் மஸ்னா எல்லை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் எல்லையில் அமைந்துள்ள சாலைகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. எனவே லெபனானில் இருந்து சிரியாவுக்குள் செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறனர்.

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள மஸ்னா எல்லை, சிரியா தலைநகர் டமாஸ்காஸ் -கு செல்லும் வழியாக உள்ளது. இந்த வழியாகவே ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கடத்துவதால் அங்கு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. 

    • தனது பதவிக் காலத்திலேயே முதல் முறையாக வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு அறையில் தோன்றினார் பைடன்
    • ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா?

    வெள்ளை மாளிகை 

    அதிபர் தேர்தல், பாலஸ்தீன போர், மத்திய கிழக்கு போர் பதற்றம் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். தனது பதவிக் காலத்திலேயே முதல் முறையாக நேற்றய தினம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு அறையில் [Briefing room]  தோன்றி ஜோ பைடன் பேட்டியளித்துள்ளார்.

     

    அமைதி - அரசியல் 

    அப்போது இஸ்ரேல் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்காக தான் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு [பாலஸ்தீன] அமைதி உடன்படிக்கயை ஏற்காமல் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அது விஷயமில்லை. இஸ்ரேலுக்கு நான் [அமெரிக்க அரசு] உதவியதுபோல் வேறு எந்த நாட்டின் அரசும் உதவவில்லை, அதை நேதன்யாகு நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி உடன்படிக்கையை ஏற்பதில் நேதன்யாகு பிடிகொடுக்காமல் இருப்பதை சந்தேகிக்கும் விதமாக பைடன் இவ்வாறு பேசியுள்ளார்

     

    எண்ணெய் வயல்

    மேலும் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பைடன், அது பற்றி விவாதித்து வருகிறோம். அவர்கள் [இஸ்ரேல்] இடத்தில் நான் இருந்தால் எண்ணெய் வயல்களை தாக்குவதை விட அதற்கு மாற்றான வேறு வழிகளையே யோசிப்பேன் என்று தெரிவித்தார்.

    ஜோக் 

    இறுதியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய முடிவை மாற்றி மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி வந்து விழுந்தது. இதற்குத் தலை அசைத்தபடியே சிரித்துவிட்டு, நான் திரும்பி வந்துவிட்டேன் என்று ஜோக் அடித்துவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு அறையை விட்டு நடையைக் கட்டினார் பைடன். நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய பெருங்கடல் பகுதியில் சாகோஸ் தீவுகள் அமைந்துள்ளது.
    • இந்த தீவுகளை மொரீசியஸ் நாட்டுக்கு விட்டுத்தர பிரிட்டன் முன்வந்தது.

    போர்ட் லூயிஸ்:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியம். இது சுமார் 60 குட்டித் தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டம். இதுதொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வந்தது.

    பிரிட்டன் மற்றும் மொரீசியஸ் இடையே நீண்ட காலம் நடந்த பேச்சுகளுக்கு பின் இந்த நிலப்பரப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    அதன்படி, பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள டியாகோ கார்சியா பகுதி அடுத்த 99 ஆண்டுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தின் கூட்டு தளமாக தொடர்ந்து இருக்கும். இந்தப் பிராந்தியத்தில் மிக முக்கிய போர்க்களமாக, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தளமாக டியாகோ கார்சியா உள்ளது. அதை ஒட்டியுள்ள சாகோஸ் தீவுகளை மொரிசியஸ் நாட்டுக்கு விட்டுத்தர பிரிட்டன் முன்வந்துள்ளது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது.

    இந்நிலையில், சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிசியசிடம் ஒப்படைத்ததற்கு மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், நமது காலனித்துவத்தை நிறைவு செய்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, மொரிசியஸ் பிரதமர் ஜுக்நாத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிரிக்க யூனியன் மற்றும் இந்திய அரசு உள்பட நமது காலனித்துவ நீக்கத்தை முடிப்பதற்கான போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து நட்பு நாடுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது.
    • இதில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் வெளியான பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார்

    இந்நிலையில், இந்த வாரம் வெளியான பட்டியலிலும் எலான் மஸ்க் 256 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளார்.

    இரண்டாவது இடத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. மார்க் ஜுக்கர்பெர்க் முன்னேறினார். அவரது சொத்து மதிப்பு 206 பில்லியன் டாலர்களுடன் உள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளில் , சமூக வலைதளங்களில் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா உருவெடுத்து உள்ளது. மாதந்தோறும் 30 கோடி பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் 7 வது பெரிய கார்பரேட்டாக இந்த நிறுவனம் உருவெடுத்து உள்ளது.

    பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பின்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றை கையகப்படுத்தியது.

    ஏற்கனவே 2-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இம்முறை 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டாலர்கள். 4வது இடத்தில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்- 193 பில்லியன் டாலர் ஆகும்.

    5 முதல் 10-வது இடம் வரை அமெரிக்க கோடீஸ்வரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    • வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றார்.
    • அவர் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அனுரகுமரா திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றது.

    இலங்கை அதிபராக அனுரகுமரா திசநாயகே பொறுப்பேற்றுள்ளார். இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரிய பொறுப்பேற்றுள்ளார்.

    இந்நிலையில், இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றார். புதிய அரசு அமைந்தபின் இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு முக்கிய தலைவர் ஜெய்சங்கர் ஆவார்.

    இலங்கை சென்ற மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் அனுரகுமரா திசநாயகே மற்றும் பிரதமர் ஹரினியை தனித்தனியாகச் சந்தித்தார்.

    இந்தச் சந்திப்பின்போது இந்தியா-இலங்கை இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல், இலங்கையில் இந்தியாவின் உதவியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை மேலும் அதிகரித்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • மத்திய கிழக்கில் போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
    • இஸ்ரேல் மீதான தாக்குதல் மிகவும் சரியான முடிவு என்று பேசினார்.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஈரான் ஏவுகணை தாக்குத் நடத்தியது. இந்த திடீர் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

    இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் நடத்திய சில தினங்களில் ஈரானின் உயர் தலைவர் அலி கமேனி தெஹ்ரானில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் இஸ்ரேல் மீதான தாக்குதல் மிகவும் சரியான முடிவு என்று பேசினார்.

    கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பொது வெளியில் கமேனி உரையாற்றுவதை அடுத்து, அவரை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். சொற்பொழிவு நிகழ்ச்சியானது மத்திய தெஹ்ரானில் உள்ள கொமேனி கிராண்ட் மொசாலா மசூதியில் நடைபெற்றது. சொற்பொழிவைத் தொடர்ந்து உயிரிழந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லாவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.

    சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசும் போது, "சில இரவுகளுக்கு முன் நமது படைகள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் சட்டப்பூர்வமான, முறையான ஒன்று ஆகும். இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் அவர்கள் பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மக்களுக்கு எதிராக செய்த குற்றங்களுக்கான குறைந்த பட்ச தண்டனை தான்."

    "பிரிவினை மற்றும் தேசத்துரோகத்தை விதைத்து, அனைத்து முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதே நமது எதிரியின் கொள்கைகள் ஆகும். அவர்கள் பாலஸ்தீனியர்கள், லெபனானியர்கள், எகிப்தியர்கள், ஈராக்கியர்களுக்கும் எதிரிகள். அவர்கள் தான் ஏமன் மற்றும் சிரிய மக்களுக்கும் எதிரிகள். நம் எதிரி ஒன்று தான்."

    "சையத் ஹசன் நஸ்ரல்லா இப்போது நம்முடன் இல்லை. ஆனால் அவரது ஆன்மாவும், அவரது பாதை என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும். அவர் சியோனிச எதிரிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். அவரது தியாகம் இந்த செல்வாக்கை மேலும் அதிகரிக்கும். நஸ்ரல்லாவின் இழப்பு வீண் போகவில்லை. நமது அசைக்க முடியாத நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு எதிரிக்கு எதிராக நிற்க வேண்டும்."

    "இரத்தம் சிந்தும் லெபனான் மக்களுக்கு உதவுவதும், லெபனானின் ஜிஹாத் மற்றும் அல்-அக்ஸா மசூதிக்கான போரை ஆதரிப்பது அனைத்து முஸ்லிம்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். லெபனான் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து தங்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு கண்டித்து போராட்டம் நடத்தவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ எந்த சர்வதேச சட்டத்திற்கும் உரிமை இல்லை."

    "சியோனிஸ்டுகள் மற்றும் அமெரிக்கர்கள் கனவு காண்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்க ஆதரவு இருப்பது மட்டுமே சியோனிசம் தலைதூக்க ஒற்றை காரணம். சியோனிச ஆக்கிரமிப்பு வேரோடு பிடுங்கப்படும். அதற்கு வேர்கள் இள்லை, அது போலியான ஒன்று," என்று தெரிவித்தார்.

    • ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என சாம்சங் விளக்கம் அளித்துள்ளது.
    • ஆட்குறைப்பு படலத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது ஊழியர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக, 10ல் ஒரு ஊழியர் வேலை இழக்கக் கூடிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது!

    நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், ஊழியர்கள் படிநிலையை சீர் செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், இத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என சாம்சங் விளக்கம் அளித்துள்ளது.


    ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆட்குறைப்பு படலத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது ஊழியர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தனர்
    • கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடந்துள்ளது

    பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானிலும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை எதிர்த்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.

    செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் தரப்பில் இருந்து கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கடலில் வந்த பிரிட்டன் எணணெய் கப்பல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.

    கார்டெலியா மூன் [Cordelia Moon] எனப்படும் பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகை மோதவைத்து ஹவுதிக்கள் வெடிக்கச்செய்துள்ளனர். ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹுதைதா [Hodeidah] வில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    மேலும் கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ள ஹவுதிக்கள் கப்பல் தீப்பற்றி எரியும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    • 1948 உருவான இஸ்ரேலை நாடாக அங்கீகரித்த 2 வது இஸ்லாமிய தேசமும் ஈரான்தான்.
    • 1980 இல் ஈராக்குக்கு எதிரான போரின்போது அமெரிக்கா சார்பில் இஸ்ரேல் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கிவந்தது.

    இரு துருவங்கள் 

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இன்று எதிரெதிர் துருவங்களாக உள்ள ஈரானும் இஸ்ரேலும் கடந்த காலங்களில் கைகோர்த்து செயல்பட்டிருக்கின்றன. தங்கள் இருவருக்கும் பொதுவான எதிரியாக இருக்கும் ஈராக் நாட்டை எதிர்கொள்ள 1960 களில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நட்புறவுடன் ஒன்றிணைத்துச் செயல்பட்ட வரலாறும் உண்டு.

    எதிரி ஈராக் 

    1948 உருவான இஸ்ரேலை நாடாக அங்கீகரித்த 2 வது இஸ்லாமிய தேசமும் ஈரான்தான். முதலாவதாகத் துருக்கி இஸ்ரேலை அங்கீகரித்திருந்தது. 1950 களில் தெற்காசியாவிலே அதிக யூதர்கள் வசிக்கும் நாடாகவும் ஈரான் இருந்தது. மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் கிடைக்காத உறவு ஈரானுடன் கிடைத்ததால் அதன் எண்ணெய் வளங்களை இஸ்ரேல் அதிகம் சார்ந்திருந்தது. ஈராக்கின் இஸ்லாமிய அடிப்படைவாத அரசை அச்சுறுத்தலாக இஸ்ரேல் பார்த்து வந்த நிலையில் ஷா முகமது ரெசா பஃலவி [Shah Mohammad Reza Pahlavi] தலைமையிலான ஈரான் ஈராக்கின் பகுதிகள் மீது கண் வைத்திருந்தது.

    எனவே ஈரான், ஈராக், அமெரிக்கா ஆகிய மூன்று நாடு உளவு அமைப்புகளும் இணைந்து ஈராக் நாட்டினுள் அந்நாட்டினால் ஒடுக்கப்பட்ட குர்திய இனத்தை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை ஊடுருவச் செய்தது. இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்பும், ஈரானின்  சவாக் [SAVAK]  உளவு அமைப்பும் ரகசிய பரிமாறிக்கொண்டன.

     

     புரட்சி 

    தொடர்ந்து ராணுவ ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் இஸ்ரேல் ஈரான் உறவு தொடர்ந்த நிலையில் 1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் பஃலவியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு அயத்துல்லா காமெனி அதிகாரத்துக்கு வந்தார்.

    இதன்பின்னர் இஸ்லாமிய கட்டுப்பாடுகளால் ஈரான் தலைகீழாக மாறியது. ஆனாலும் 1980 இல் ஈராக்குக்கு எதிரான போரின்போது அமெரிக்கா சார்பில் இஸ்ரேல் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கிவந்தது.

    குட்டிச் சாத்தான் 

    அனால் 1990 தொடங்கிய கல்ஃப் யுத்தத்தின் பின்னர் பின்னர் ஈராக் பிரச்சனை சற்று சுமூகமான பின்னர் பால்ஸ்தீன விவகாரம் உள்ளிட்டவற்றால் ஈரான் இஸ்ரேலை எதிரியாக பாவிக்கத் தொடங்கியது. இஸ்ரேல் குட்டிச் சாத்தான் என்றும் அமெரிக்கா பெரிய சாத்தான் என்று வர்ணிக்கும் அளவுக்கு மேற்கு நாடுகளுடனான ஈரானின் பகைமை வளர்ந்தது.

    ×