என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது.
- திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது.
சென்னை:
ஜி.எஸ்.டி. குறைப்பால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்து உள்ளது, இதனால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதனை மத்திய அரசு பட்டியலிட்டு தெரிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
ஜவுளித்துறை:-
தமிழகத்தின் ஜவுளித்துறை இந்தியாவின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். அதனால் திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் இதன்மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். "இந்தியாவின் பின்னலாடை தலைநகர்" என்று அழைக்கப்படும் திருப்பூரில் மட்டும் 10 லட்சம் மக்கள் வேலை செய்கின்றனர். இந்தியாவின் பின்னலாடை துணி ஏற்றுமதியின் 90 சதவீத பங்களிப்பும், அதாவது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு இங்கிருந்தே வருகிறது. குறைந்த மதிப்புள்ள ஆடைகள், எம்பிராய்டரி மற்றும் அணிகலன்களுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டதால், உற்பத்திச் செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறையும்.
காஞ்சிபுரம் பட்டு:-
இந்த பட்டு உலகப்புகழ் பெற்றது. அங்குள்ள நெசவாளர்கள், பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் இதன்மீது தான். இந்த பட்டுக்கான தேவையான ஜரி, ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், மூலப்பொருள் செலவு 7 சதவீதம் குறையும். அதனால் இறுதி பட்டு விலையும் 2 முதல் 4 சதவீதம் வரை குறையும்.
கைத்தறிப் பொருட்கள்:-
ஈரோட்டின் பவானி ஜமுக்காளம், மதுரையின் சுங்குடி போன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவாக இருக்கும். இவை உள்நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும். ஏற்றுமதிக்கும் அதிக வாய்ப்பு உண்டு.
வெண்கலச் சிலைகள்:-
தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1,200 கைவினைஞர்கள் இழந்த மெழுகு வார்ப்பு முறையில் சிலைகள் உருவாக்குகின்றனர். ஆண்டுக்கு ரூ.20 முதல் 30 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைந்ததால் விலையும் 6 சதவீதம் குறையும்.
நாகர்கோவில் கோவில் நகை:-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவில் நகை செய்யும் தொழிலில் சுமார் 500 கைவினைக்குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீத குறைவால் விலை குறையும்.
பித்தளை, கல், மர கைவினை பொருட்கள்:
தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பிகள் உற்பத்தி செய்யும் பித்தளை, கல், மர கைவினை பொருட்கள் 6 முதல் 7 சதவீதம் வரை குறையும். சுற்றுலா சந்தையிலும், ஆன்லைன் விற்பனையிலும் அதிக ஆதாயம் உண்டு.
பாரம்பரிய பொம்மைகள்:
தஞ்சை, சேலம், காஞ்சிபுரம் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொம்மைகள், 5 சதவீத ஜி.எஸ்.டி.யால் விலை மலிவாகி, வெளிநாட்டு பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு போட்டியாகும்.
தென்னை நார்:-
பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது. பெண்கள் அதிகம் ஈடுபடும் இந்தத் துறையில், ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்ததால் தென்னை பாய், கயிறு, டெக்ஸ்டைல் போன்றவை 6 முதல் 7 சதவீதம் மலிவாகிறது. உள்நாட்டு, ஏற்றுமதி சந்தையில் போட்டித்திறன் உயரும்.
ஆவின்:-
பால் பொருட்கள் பன்னீர், வெண்ணெய் போன்றவை ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் குறைந்ததால் அதன் விலையும் 4 முதல் 11 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது. ஆவினில் தினசரி 37 லட்சம் லிட்டர் பால், 5 லட்சம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. குறைவால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும்.
மணப்பாறை முறுக்கு:
திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது. இந்த சிற்றுண்டி மூலம் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதன் விலை 6 சதவீதம் மலிவாகி இருக்கிறது.
மீன்பிடித்துறை:-
தமிழகத்தின் கடலோர 14 மாவட்டங்களில் 10.48 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். மீன், இறால், கடல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டதால், விலை 7 சதவீதம் மலிவாகி இருக்கிறது. அதனால் தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்கள் அதிக நன்மை பெறும்.
நோட் புத்தகம்:-
சிவகாசி, பெரம்பூர் ஆகிய இடங்களில் அச்சு, ஸ்டேஷனரி தொழில் வலுவாக உள்ளது. நோட் புத்தகம், மற்றும் ஸ்டேஷனரி ஜி.எஸ்.டி. குறைவால் வியாபாரம் அதிகரிக்கும்.
எலெக்ட்ரானிக்ஸ்:-
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் மையங்கள் உள்ளன. டிவி, மானிட்டர் 28 சதவீதத்தில் இருந்து18 சதவீதமாக குறைந்து இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும்.
டிரோன்கள்:-
சென்னை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் டிரோன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஜி.எஸ்.டி. 18, 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைந்ததால் விலை 18 சதவீதம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.
ஆட்டோமொபைல்:-
கடந்த 2023-ல் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவீத பங்கு வகித்த தமிழகம், 22 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. 28-ல் இருந்து 18 சதவீதம் குறைவதால் வாகன விலை 8 சதவீதம் குறையும்.
பாதுகாப்பு:-
சென்னை ஆவடி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் பாதுகாப்புத் தொழில் உற்பத்தி மையங்கள்உள்ளன. ஏவுகணைகள், போக்குவரத்து விமானங்கள், சிமுலேட்டர்கள் ஆகியவை இப்போது பூஜ்ஜிய ஜி.எஸ்.டி. என்பதால் விலைகுறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.
ரெயில் பெட்டிகள்:-
சென்னை ஐ.சி.எப். உலகின் மிகப்பெரிய ரெயில் பெட்டி உற்பத்தியாளர். 8,200 பேர் பணிபுரிகின்றனர். ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் குறைவால், உற்பத்தி செலவு 5 சதவீதம் மிச்சமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார்.
- திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
பிரம்மோற்சவம்
திருமலையில் வேங்கடநாதனுக்கு, 'படைத்தல்' கடவுளான பிரம்மனே முன்னின்று நடத்திய விழாதான் 'பிரம்மோற்சவம்'.
புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்த விழா கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் குறித்து புராணங்களில் கூறப்படுவதாவது:-
பிரம்மோற்சவம் பிறந்த கதை
லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார். அப்போது அவர், சேஷாசலம் என போற்றப்படும் திருமலையில் இருந்த ஒரு புற்றினுள் அமர்ந்து தவம் செய்தார். அப்போது முனிவர்களுக்கும், மக்களுக்கும் அரக்கர்கள் பெருந்துன்பம் செய்து வந்தனர்.
இதனால் துயருற்ற முனிவர்கள், புற்றினுள் தவம் இருந்த திருமாலை சந்தித்து தங்கள் குறை தீர்க்க வேண்டினர். இதைக்கேட்ட திருமால், அந்த அரக்கர்களை அழித்து வருமாறு, தமது கையில் இருந்த சக்கரத்தாழ்வாரான சுதர்சனருக்கு கட்டளையிட்டார்.
அவரும், வீரபுருஷனாக உருக்கொண்டு 4 திசைகளுக்கும் பறந்து சென்று எல்லா அரக்கர்களையும் அழித்து வெற்றிக்கொண்டார்.
பின்னர், திருமால் முன்னால் வந்து நின்ற சுதர்சனருக்கு, பரிசளிக்க விரும்பிய பெருமாள், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
பிரம்ம ரதம்
உடனே சுதர்சனர், "பகவானே, தாங்கள் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தில் தங்களுக்கு பெரியதொரு உற்சவம் நடத்தி காண விரும்புகிறேன்" என்று வேண்டினார்.
தனக்கென எதுவும் கேட்காத சுதர்சனரின் வேண்டுகோளுக்கு திருமால் இணங்க, பிரம்மதேவர் உரிய ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு புரட்டாசி மாதத்தில், சுதர்சனரின் வேண்டுகோளின்படி பிரம்மதேவனால் திருமலையில் கோலாகலமாக உற்சவம் நடத்தப்பட்டது. அன்று முதல் திருமலையில் பிரம்மோற்சவம் நடந்து வருவதாக அந்த கதை கூறுகிறது.
அதனால்தான், இன்றளவும் திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
அதேபோல பிரம்மோற்சவ விழா நாட்களில் நடைபெறும் வாகனசேவைகளின்போது, சக்கரத்தாழ்வார் முன்னே செல்வது வழக்கமாக இருக்கிறது.
9 நாட்கள் உற்சவம்
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.
சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.
பிரம்மோற்சவம் நடைபெறும் முந்தைய நாள் ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசப்படும். தொடர்ந்து, ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வசேனருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த ஆண்டு இன்று 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வரும் உற்சவரான மலையப்ப சாமியை காண, கண்கள் கோடி வேண்டும்.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கருடசேவை, தங்கத் தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும் நாட்களில், மலையா... பக்தர்களின் தலையா எனும் அளவுக்கு திருமலையே கோலாகலமாக இருக்கும்.
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் இரண்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
மூன்றாம் நாள் போற்றி
ஓம் அறிவினுக்கறிவேபோற்றி
ஓம் ஞானதீபமேபோற்றி
ஓம் அருமறைப் பொருளேபோற்றி
ஓம் ஆதிமூலமாய் நின்றவளேபோற்றி
ஓம் புகழ்தரும் புண்ணியளேபோற்றி
ஓம் நற்பாகின் சுவையே போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
ஓம் பரமனின் சக்தியேபோற்றி
ஓம் பாபங்கள் களைவாய்போற்றி
ஓம் அன்பெனும் முகத்தவளேபோற்றி
ஓம் அகிலத்தின் காப்பேபோற்றி
ஓம் செம்மேனியளேபோற்றி
ஓம் செபத்தின் விளக்கமேபோற்றி
ஓம் தானியந் தருவாய் போற்றி
ஓம் கல்யாணியம்மையேபோற்றி
- சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது.
- கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர்.
பெங்களூரு:
பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் பிரவீன்- சந்தனா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த மே மாதம் 5-ந்தேதி தான் திருமணம் நடந்தது. முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும் பிரவீன், தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தெரிகிறது.
இதையடுத்து சந்தனா, தனது கணவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் பிரவீன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்துள்ளார். இதனால் டாக்டர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்படி பிரவீனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இருப்பினும் பிரவீன், மனைவி சந்தனாவுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி அறிந்த சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீன் கோவிந்தராஜ் நகர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
சந்தனா என்னை ஆண் அல்ல. திருநங்கை என கூறி அவதூறான தகவலை பரப்பினார். மேலும் சந்தனா தனது உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து என்னை தாக்கினார். கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர். அப்போது ரூ.2 கோடி சொத்தை சந்தனாவுக்கு எழுதி கொடுக்கும்படி கூறினர். சந்தனாவும் என்னிடம் சொத்து கேட்டு மிரட்டுகிறார்.
ஆனால் நான் கால அவகாசம் கேட்டேன். அதன்பிறகு ஆகஸ்டு 17-ந்தேதி சந்தனாவும், அவரது உறவினர்களும் என்னுடன் தகராறு செய்து என்னை தாக்கினர். அத்துடன் வீட்டில் இருந்த எனது பொருட்களை வீட்டில் இருந்து வெளியே அள்ளிப்போட்டதுடன் என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.
எனது தொழில்முறை வாழ்க்கையின் அழுத்தத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என கூறினாலும், சந்தனா என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார். அவரது குடும்பத்தினர், உறவினர்களும் என்னை தாக்கினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இன்று முதல் வருகிற 2-ந் தேதி வரை அனைத்து வி.ஐ.பி தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தினமும் 60 டன் பூக்களை கொண்டு சாமிக்கு மலர் அபிஷேகம் நடத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளார்.
பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்திற்கான கயிறு மற்றும் தர்ப்பை ஊர்வலமாக கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.43 மணி முதல் 6.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 16 வகையான சிறப்பு உணவுகள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மாட வீதிகளின் வாகன சேவையை காண காத்திருக்கும் 35 ஆயிரம் பக்தர்கள் 45 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்பட்டு அனைவரும் வாகன சேவையை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மாட வீதிகளுக்கு வெளியே உள்ள பக்தர்கள் வாகன சேவையை பார்க்கும் வகையில் 36 இடங்களில் பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்பப்படுகிறது.
இன்று முதல் வருகிற 2-ந் தேதி வரை அனைத்து வி.ஐ.பி தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 60 டன் பூக்களை கொண்டு சாமிக்கு மலர் அபிஷேகம் நடத்தப்படும். 29 மாநிலங்களை சேர்ந்த 229 கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
3500 தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து மலைக்கு செல்ல 4 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்களை கண்காணிக்க 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள், 4,700 போலீசார் மற்றும் 450 மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக தினமும் 8 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வெளியூர் பயணங்களை செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். பணவரவு திருப்தியாக இருக்கும். தொழில் வளர்ச்சி உண்டு.
மிதுனம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உடல் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை அமையும். விரயங்களால் கலக்கமடைவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனை உண்டு.
கடகம்
முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். சந்தோஷமான அனுபவங்கள் மூலம் மனதில் உற்சாகமும், தெம்பும் கூடும்.
கன்னி
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
துலாம்
செல்வநிலை உயரும் நாள். பயணங்கள் செல்ல திட்டமிட்டுப் பின்னர் அதை மாற்றம் செய்வீர்கள். உங்கள் சொற்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு உண்டாகும்.
விருச்சிகம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் வெற்றி நடைபோடும்.
தனுசு
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையொன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள்.
மகரம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வியாபாரத்தில் உள்ள மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகலும்.
கும்பம்
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மீனம்
இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, வருகிற 29-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல், தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டிஎன்எச்பி, திருவேற்காடு மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
போரூர்: மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு, திருவீதியம்மன் கோவில் தெரு.
அயப்பாக்கம்: ஐசிஎப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டிஎன்எச்பி, திருவேற்காடு மெயின் ரோடு, அத்திப்பேட்டை, வானகரம் சாலை, கங்கை சாலை, பாரதி மெட்டு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கேஎஸ்ஆர் நகர், விஜிஎன் சாந்தி நகர், மேல் அயனம்பாக்கம், சென்னை அயனம்பாக்கம் நகர், புதிய நகர், ஈடன் அவென்யூ, கொன்ராஜ் குப்பம், அக்கரகாரம், தேவி நகர், சின்ன கொலடி, செல்லியம்மன் நகர், ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர்.
கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர், ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் ரோடு, நியூ காலனி, கற்பகாம்பாள் நகர், சீனிவாசபுரம், நஜீமா அவென்யூ, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர், காவேரி நகர், பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், எச். மற்றும் முல்லை H70 முதல் H78 வரையிலான குடியிருப்புகள்.
திருவேற்காடு: செஞ்சுரியன் அவென்யூ, ஆரோ எலியாஸ், வடநூம்பல், பெருமாள்கரம்.
செம்பியம்: கிருஷ்ணமூர்த்தி சாலை, ஜிஎன்டி சாலை, ஏபி அரசு தெரு, அண்ணாசாலை, கண்ணபிரான் கோவில் தெரு, எத்திராஜ் சாலை, கேவிடி மருத்துவமனை, மூலக்கடை, சந்திரபிரபு காலனி, தணிகாசலம் நகர், அன்னை சத்யா நகர், வெங்கடேஷ்வரா நகர், போலீஸ் குடியிருப்பு, முத்தமிழ் நகர் 5 முதல் 6வது பிளாக் வரை, பாலாஜி தெரு, எமரால்டு தெரு, சில்வர் தெரு, கெனால் ரோடு.
- முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.
- வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும் என்பது ஐதீகம்.
புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வத்தை வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடியும், பாமாலை பாடியும் வழிபட்டால் பிரச்சனைகள் அகலும். பொருள் செல்வம் கூடும். வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.
இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.
எனவே தான் 'வீரம்' தரும் துர்கா தேவியை முதல் மூன்று நாட்களும், 'செல்வம்' தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், 'கல்விச் செல்வம்' தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.
இதனை தொடர்ந்து இல்லங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.
நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று திரிதியை திதியில் வரும் புதன்கிழமையான இன்று அசுரர்களை அழித்த சந்திரகாந்தா தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ராயல் ப்ளூ நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஏனெனில் இந்நிறம் அமைதியை பிரதிபலிக்கிறது. ராயல் ப்ளூ நிறத்திலான பொருட்களை கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கலாம்.
இந்நாளில் வீரியம், துணிவு, கருணை என பன்முகம் கொண்ட சந்திரகாந்தா தேவிக்கு பிடித்தமான வெள்ளை தாமரை மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்களை சமர்பித்து வழிபட்டு சகல செல்வங்களும் பெறுவோமாக!
- சந்திரகாந்தா தேவி துர்கா தேவியின் மூன்றாவது வடிவம்.
- அசுரர்களின் தலைவன் ஜதூகசுரன் தேவலோகத்தையும், மானிடர்களையும், பூலோகத்தையும் துன்புறுத்தினான்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை வழிபடுவதற்கான காலம்.
நவராத்திரி 3-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் சந்திரகாந்தா தேவி. இவர் துர்கா தேவியின் மூன்றாவது வடிவம் ஆவார்.
சந்திரகாந்தா தேவி
பார்வதி தேவி, மகிஷாசுரனை அழிக்க சக்தியாகிய துர்காவாக அவதரித்தபோது பல்வேறு வடிவங்களில் தோன்றினாள்.
சத்யுகத்தில், ஹிமவந்தன் (இமயமலை) மகளான பார்வதி, சிவபெருமானை கணவனாகப் பெற விரும்பினார். அவர் பல வருடங்கள் கடுமையான தவம் செய்து சிவனைத் துதித்தார். இறுதியில் சிவபெருமான் சம்மதித்து, அவர்களின் திருமண நாள் நிர்ணயிக்கப்பட்டது. பார்வதி திருமண அலங்காரத்தில் புனித வடிவம் எடுத்தார். அப்போது அவரது நெற்றியில் நிலவும் பிரகாசத்தைப் போல ஒரு சந்திரக்கலையுடன் தோன்றினார். அந்த வடிவமே சந்திரகாந்தா.
சந்திரகாந்தா தேவியின் கதை:
முன்னொரு காலத்தில் அசுரர்களின் தலைவன் ஜதூகசுரன் தேவலோகத்தையும், மானிடர்களையும், பூலோகத்தையும் துன்புறுத்தினான். அவனது சக்திக்கு முன் தேவதைகள் பலவீனமடைந்தனர். அப்போது, மகாதேவி பார்வதி ஒரு புதிய ரூபத்தில் தோன்றி, தன் நெற்றியில் சந்திரனை அலங்கரித்து, சிங்கத்தில் ஏறி, கையில் பல ஆயுதங்களுடன் அசுரர்களை அழிக்க முனைந்தார்.
ஜதூகசுரன் மிகுந்த பலம் நிறைந்தவனாக இருந்தான். அவனை எதிர்த்து, சந்திரகாந்தா தேவி தேவசேனையை வழிநடத்தி யுத்தம் புரிந்தார். அவர் சிங்கத்தில் ஏறி கம்பீரமாக போராடினார். அசுரர்களின் பல ஆயிரம் படைகளை அழித்து, இறுதியில் ஜதூகசுரனையும் வதம் செய்தார்.
சந்திரகாந்தா தேவியின் கதை, தைரியம், கருணை மற்றும் நீதியின் சக்தி என்பதைக் காட்டுகிறது.
சிவபெருமானை மணந்த பிறகு அவள் தலையை அரை நிலவால் அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது. அவர் துணிச்சலையும் தைரியத்தையும் பிரதிபலிக்கிறார். அவள் பத்து கைகளுடன் திரிசூலம், கதாயுதம், வில், அம்பு, தாமரை, வாள், மணி மற்றும் ஒரு நீர்க்குடம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சியளிக்கிறாள். அவள் புலியின் மீது அமர்ந்திருப்பாள்.
ஸ்லோகம்:
"ஓம் தேவி சந்திரகண்டாயை நமஹ" என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
- மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலாட்ட அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-8 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை (முழுவதும்)
நட்சத்திரம் : சித்திரை மாலை 4.34 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் பிரம்மோற்சவம் ஆரம்பம். பெரிய சேஷ வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோலாட்ட அலங்காரத்துடன் கொலு தர்பார் காட்சி. குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் அலங்காரம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மகேஸ்வரி விருஷப சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-வெற்றி
கடகம்-உண்மை
சிம்மம்-துணிவு
கன்னி-லாபம்
துலாம்- சுகம்
விருச்சிகம்-வரவு
தனுசு- தேர்ச்சி
மகரம்-பெருமை
கும்பம்-உவகை
மீனம்-நன்மை
- நீதிபதிகள் கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
- ஒட்டுமொத்த குடும்பமும் துன்புறுத்தப்படுவதுதான் அந்த வழக்கில் இருந்த முக்கியப் பிரச்னை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "புல்டோசர் நடவடிக்கை" குறித்த தான் அளித்த தீர்ப்பு தனக்கு பெரும் திருப்தியை அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் வட மாநிலங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சட்டவிரோத ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மாநகராட்சிகளால் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக இஸ்லாமியர்களின் வீடுகள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையே 2024 நவம்பர் 13 அன்று, நீதிபதிகள் கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, புல்டோசர் நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல என்று தீர்ப்பளித்து அதற்கு நாடு தழுவிய வழிகாட்டுதல்களை வகுத்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் கல்விக்குழு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் தலைமை நீதிபதி கவாய் பேசுகையில், "அந்தத் தீர்ப்பின் மையத்தில் மனிதத்தின் பிரச்னைகள் இருந்தன. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒட்டுமொத்த குடும்பமும் துன்புறுத்தப்படுவதுதான் அந்த வழக்கில் இருந்த முக்கியப் பிரச்னை.
இந்தத் தீர்ப்பின் பெருமை எனக்கு அளிக்கப்பட்டாலும், அதற்கு இணையான பங்கு நீதிபதி விஸ்வநாதனுக்கும் உண்டு" என்று தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தை விரைவுபடுத்துவதற்கும் தாம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.






