என் மலர்
தலைப்புச்செய்திகள்
- Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
- ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார்.
Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர்.
குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது:
இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது.
90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று சொல்கிறார்கள்..
இவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் முழுமையாகப் பிறந்த முதல் தலைமுறை மற்றும் COVID-19 தொற்றுநோய் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை அனுபவித்தவர்கள். எல்லா தருணங்களிலும் CELEBRETING MINDSET - ல் இருக்ககூடியது இந்த ஜென் தறைமுறை. இவர்கள் மிகவும் அட்வான்சாக யோசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் உறவுகள் என்பது வேர்களில் இருந்து கற்றுக் கொள்ளப்படாமல் அதை விட்டு விலகிய நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்னொருவர் கருத்தை ஒத்து கொள்வதை தாண்டி அதை கேட்க கூட யாரும் தயாராக இருப்பதில்லை. ஆனால் அடிப்படையான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த தறைமுறையாயிருப்பினும் அதன் ரூட் அதாவது வேர் என்பது முக்கியம். வேர்களை விட்டு விலகாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதுவே
அடுத்த தறைமுறையினரின் மீட்சியாக இருக்கும். சிந்தனைகளிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் அட்வான்சாக வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினர் காலம் காலமாக இருந்து வரும் மனிதர்களின் இயல்பான சில நல்ல விஷயங்களை கற்று கொள்ளாமல், கற்று கொடுக்க படாமல் இருப்பதை மனதில் கொண்டு அதை கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.
அலட்டி கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன்.., குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை.
96 படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி, டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.
பட தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறியதாவது:
இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் எனது நண்பர் ராஜ்குமார் ரங்கசாமி இந்த கதையை என்னிடம் கூறினார். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியான கதையாகவும், சொல்ல வேண்டிய கதையாகவும் இருந்ததால் அதனை தயாரிக்க முடிவு செய்தேன்.
இப்படத்தை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது
இவ்வாறு தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறினார்..

- பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
- விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
புதுச்சேரியில் உள்ள நோணாங்குப்பம் பாலத்தில் மீது வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தது. அப்பேது, பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில், பைக்கில் இருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு ஆற்றில் விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், ஆற்றில் விழுந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இளைஞர் ஆற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
- படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ஆம் பாகம் உருவாகியுள்ளது.
- இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.
கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ஆம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக இருந்தது. சில சூழ்நிலைக்காரணமாக பட ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. புதிய ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- நல்ல பணிகளை செய்வதில் எங்கள் உதவி தேவைப்பட்டால், பாஜக-வுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம்.
- மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது. இதில் எந்த வசீகரமோ அல்லது வற்புறுத்தலோ இருக்கக்கூடாது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-
* தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு அரசாங்கத்துடனும் எங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது
* பாஜக-வுடன் எங்கும் மோதல் இல்லை. ஆனால் எல்லாப் பிரச்சினைகளிலும் ஒரே நிலை எடுப்பது சாத்தியமில்லை, நாங்கள் எப்போதும் ஒருவரையொருவர் நம்புகிறோம்.
* நான் 'ஷாகாக்கள்' நடத்துவதில் நிபுணர், பாஜக அரசாங்கத்தை நடத்துவதில் நிபுணர், நாங்கள் ஒருவருக்கொருவர் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்
* நல்ல பணிகளை செய்வதில் எங்கள் உதவி தேவைப்பட்டால், பாஜக-வுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நாங்கள் உதவுகிறோம்
* கல்வி அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்காக இருக்க வேண்டும். வேலைகளுக்கு மட்டும் என இருக்கக் கூடாது
* மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது. இதில் எந்த வசீகரமோ அல்லது வற்புறுத்தலோ இருக்கக்கூடாது.
* இந்திய பிரிவினையை ஆர்எஸ்எஸ் எதிர்க்கவில்லை என்று சொல்வது தவறு. நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அப்போது ஆர்எஸ்எஸ்-க்கு போதுமான பலம் இல்லை
* மதமாற்றம், சட்டவிரோத இடம் பெயர்வு மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணங்கள்
* சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் சமூகமும் அதன் பங்கைச் செய்ய வேண்டும்.
* சட்டவிரோத குடியேறிகளுக்கு நாம் வேலை கொடுக்கக்கூடாது. முஸ்லிம்கள் உட்பட நமது சொந்த மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்
* அனைத்து இந்திய குடிமக்களும் மூன்று குழந்தைகளைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும், இதனால் மக்கள் தொகை போதுமானதாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
* அகண்ட பாரதம் என்பது வாழ்க்கையின் உண்மை. நமது கலாச்சாரமும் முன்னோர்களும் ஒன்றே என்பதை நாம் உணர வேண்டும்
* எல்லோரும் சமமாக இருக்கும்போது இந்து- முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஏன் பேச வேண்டும்?. நாம் அனைவரும் இந்தியர்கள்.
* இஸ்லாம் இங்கே இருக்காது என்று இந்து சிந்தனை கூறவில்லை.
* சாலைகள், இடங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் வைக்கக்கூடாது. அவை முஸ்லிம்களின் பெயர்களால் சூட்டப்படக் கூடாது என்று நான் கூறவில்லை.
* மத அடிப்படையில் உட்பட யாரையும் தாக்குவதில் ஆர்எஸ்எஸ் நம்பிக்கை கொள்ளவில்லை
* காலாவதியானவை அனைத்தும் ஒழிய வேண்டும், சாதி அமைப்பு ஒரு காலத்தில் இருந்தது, ஆனால் இன்று அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை
* அரசியலமைப்புச் சட்டத்தின்படி கட்டாயப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஆதரிக்கிறது, மேலும் அது தேவைப்படும் காலம் வரை அதை ஆதரிப்போம்.
- யாருடைய விசுவாசத்துக்காக இந்த பெரு நஷ்டத்தை இந்திய தொழில்கள் சந்திக்கின்றன.
- தனது நண்பர்களின் நலனில் அக்கறை செலுத்தும் மோடியையும் ஒருசேர எதிர்க்க வேண்டிய நேரமிது.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்த மறுப்பதாகச் சொல்லி டிரம்ப் நிர்வாகம் 50 சதவிகித வரி விதித்துள்ளது.
சரி, ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வது யார்?
இந்திய அரசா? அல்லது பிரதமர் மோடியின் நண்பரா?
யாருடைய விசுவாசத்துக்காக இந்த பெரு நஷ்டத்தை இந்திய தொழில்கள் சந்திக்கின்றன.
இந்தியாவின் சுதந்திர கொள்கைகள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் டிரம்பையும், நாட்டின் நலனைவிட தனது நண்பர்களின் நலனில் அக்கறை செலுத்தும் மோடியையும் ஒருசேர எதிர்க்க வேண்டிய நேரமிது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சரால் வர முடியாததால் துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி வைத்ததாக தாகவல்.
பீகாருக்கு சென்று திரும்பிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநில மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வர முடியாததால் துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
- சீனா வீராங்கனையுடன் இதுவரை 5 முறை மோதி 3-ல் வெற்றி பெற்றுள்ளார்.
- காலிறுதியில் இந்தோனேசியா வீராங்கனையை எதிர்கொள்கிறார்.
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரவரிசையில் 15ஆவது இடம்) உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜி யி-யை எதிர்கொண்டார்.
இதில் பி.வி. சிந்து 21-19, 21-15 என எளிதாக வெற்றி பெற்றார். இருவரும் நேருக்குநேர் மோதியதில் பி.வி. சிந்து 3-2 என வெற்றி பெற்றுள்ளார்.
30 வயதான பி.வி. சிந்து காலிறுதியில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் உலக சாம்பியன்ஷிப்பில் 6 பதக்கம் வென்றவர் என்ற சாதனையை சமன் செய்வார்.
இந்தியாவின் துருவ் கபிலா- தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-11, 21-16 என அயர்லாந்து ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
- அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாட்டில் சென்னையில் உள்ள பிரபல இடங்களில் காட்சி படுத்தியுள்ளனர். மமிதாவின் நடனம் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. பாடல் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் Lik திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
- திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு.
- கோவில் நிலமாக இருந்தாலும் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது," தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்கும் தருணம் இது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், கோவில் அருகே கோவில் நிலமாக இருந்தாலும் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.
ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்துவது குறித்த மாற்று திட்டம் சம்பந்தமாக அறிக்கை தர அறநிலையத்துறைக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை செப்டம்பர் 7ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
- நான் மத்திய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன்.
- நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன் என்கிறார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, தனக்கு பல பிரதமர்களுடன் நெருங்கி பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை புத்தகமாக எழுதி வெளியிட இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்து முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி இது தொடர்பாக கூறியதவாது:-
நான் பல பிரதமர்களை அருகில் இருந்து பார்த்துள்ளேன். தற்போது, யார் யார் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து புத்தகம் எழுதப்போகிறேன். அடுத்த வருடம் நடைபெறும் புத்தக திருவிழாவில் இந்த புத்தகம் வெளியிடப்படும்.
நான் மத்திய அமைச்சராக எட்டு முறை இருந்துள்ளேன். ரெயில்வேத்துறை, நிலக்கரி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைகளை கையாண்டுள்ளேன். நான் என்ன பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதை எழுதுவேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு சுமார் 40 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. காங்கிரஸ் மற்றும் என்டிஏ கூட்டணியில் இணைந்து பல்வேறு மத்திய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றுள்ளார். 1998 முதல் 2006 வரை என்டிஏ அரசில் இடம் பிடித்துள்ளார். 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தலைமையிலான 2ஆம் முறை ஆட்சியில் இடம் பிடித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரிந்த நிலையில், வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார்.
- ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராவார் ராஜு முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்கஸ் , ஜிப்ஸி ஆகிய திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.
இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஜப்பான் திரைப்படம் . ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
- திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் வெளியீடு.
- விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
2023ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று டி.ஆர்.பாலு ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு டி.ஆர்.பாலு கூறுகையில்," 21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என
அண்ணாமலை சொல்லியிருந்தார். அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தேன்.
ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், அண்ணாமலை," 2004ம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009ல் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை" கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த டி.ஆர்.பாலு, "சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். அண்ணாமலை சொல்லும் போது என்னிடம் சொல்வார். அப்போது நான் பதில் சொல்லிக்கிறேன்" என்றார்.
மேலும், ரூ.10 ஆயிரம் கோடி குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






